விஜய் ஆண்டனி மகளுக்கு ஜெனிடிக் பிரச்சனையா.? விஜய் ஆண்டனி மகள் அறையில் இருந்தது என்ன.?

0
Follow on Google News

இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், படத்தொகுப்பாளர் என்று பல முகங்களை கொண்டவர். விஜய் ஆண்டனிக்கு மீரா, லாரா என்ற இரண்டு மகள் இருந்தார்கள். அவர்களில் மீரா 12ஆம் வகுப்பு படித்துவந்தார். அவர் கடந்த ஒரு ஆண்டாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை எடுத்துவந்ததாகவும் கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க நேற்று முன் தினம் காலை மீரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவரது தற்கொலை விஜய் ஆண்டனியை உடைந்து போக செய்திருக்கிறது. மீராவின் உடல் நேற்று காலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது விஜய் ஆண்டனியும் அவரது மனைவி பாத்திமாவும் உடைந்து அழுத சம்பவம் பார்ப்பவர்களை கண் கலங்க செய்தது. இந்நிலையில் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் மீராவை பற்றிய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதாவது தனிப்பட்ட முறையில் விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமாவை தனக்கு நன்கு தெரியும் என்று கூறி இருக்கிறார். அதுவும் பாத்திமா ஆரம்பத்தில் தொகுப்பாளராக சன் டிவியில் வேலை பார்த்திருக்கிறார். அப்போது என்னையும் பேட்டி எடுத்துள்ளார். விஜய் ஆண்டனி, பாத்திமா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு மீரா மற்றும் லாரா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள்.

கடந்த ஒரு வருடங்கள் ஆகவே மீரா மன உளைச்சலில் இருந்ததால் அவரது வீட்டில் அருகில் உள்ள சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார்.” என்று பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், மேலும், இதற்கான மாத்திரை அவரது ரூமில் இருந்திருக்கிறது. அதுவும் இரவு ஒரு மணிக்கு மாத்திரையை போட்டுவிட்டு தண்ணீர் குடித்த பிறகு தான் தூங்க சென்றிருக்கிறார்.

தற்கொலை என்பது இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் வந்து போகும் விஷயம்தான். அதை நாம் கடந்து விட்டால் அதன் பிறகு வெற்றி தான். ஆனால் மீராவால் அதை எதிர்கொள்ள முடியவில்லை என பயில்வான் கூறியிருக்கிறார். தற்கொலை செய்யும் அளவிற்கு இந்த வயதில் மீராவுக்கு என்ன மன அழுத்தம் என்பது இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம் என்று கூறி இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் தான் மிகப்பெரிய விபத்திலிருந்து விஜய் ஆண்டனி மீண்டும் வந்தார். இப்போது அவரது மகள் இழப்பு அவருக்கு மிகப்பெரிய துயரத்தை கொடுத்திருக்கிறது. விஜய் ஆண்டனியின் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இப்போது மகளும் இதே முடிவை எடுத்துக் கொண்டிருப்பதால் ஜெனிடிக் பிரச்சனையாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் பயில்வான் எழுப்பி இருக்கிறார்.

மேலும் பயில்வான் கூறுகையில் நல்ல வார்த்தைகளை பேச வேண்டும் சில விஷயங்கள் பழித்து விடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த வகையில் விஜய் ஆண்டனியின் படங்களை எடுத்துக் கொண்டால் பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2, கொலைகாரன், ரத்தம், எமன் என்று வைத்திருந்தார். அவருடைய பட டைட்டில் கூட பழிவாங்க வாய்ப்பிருக்கிறது என பயில்வான் கூறியிருக்கிறார். சிவக்குமார் பத்ரகாளி என்ற படத்தில் நடித்த போது அந்த படத்தின் கதாநாயகி ராணி சந்திரா விமான விபத்து மூலம் உயிரிழந்தார். இவ்வாறு பட டைட்டிலும் சிலரது வாழ்க்கையை தலைகீழாக மாற்றும். இதை நம்பிக்கை என்றும் சொல்லலாம் மூடநம்பிக்கை என்றும் சொல்லலாம் என்று பயில்வான் கூறியிருந்தார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனி மகள் இரவு 1 மணிக்கு மாத்திரை சாப்பிட்டு தூங்க சென்றவர் காலை 3 மணிக்கு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும், மேலும் அவருக்கு ஜெனிடிக் பிரச்சனையா என்கிற சந்தேகத்தையும் பயில்வான் ரங்கநாதன் எழுப்பியுள்ளார். இந்நிலையில் விஜய் ஆண்டனி மக்களுக்கு குடும்பத்திலும் மற்றும் பள்ளியிலும் இருந்தும் எந்த வித மனஅழுத்தமும் இல்லை என கூறப்படும் நிலையில் அவருடைய தற்கொலை மரணம் என்பது இன்றைய தலைமுறை பெற்றோர்களுக்கு குழந்தைகள் எதற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்வார்கள் என்கிற ஒரு வித பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் மனஉளைச்சலில் இருக்கும் குழந்தைகளை தனியாக ஒரு அறையில் தங்க விடுவதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவ ஆலோசகர்கள்.