உச்சக்கட்ட வேதனையில் விஜய் ஆண்டனி…. முடிவுக்கு வருகிறது இறப்பு வீடுகளில் நடக்கும் அட்டூழியம்…

0
Follow on Google News

சமீபகாலமாக தொடர்ந்து திரைதுறையினரை சேர்ந்தவர்களின் இறப்பு மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மிக குறுகிய காலகட்டத்தில் மயில்சாமி, மனோபாலா, எதிர்நீச்சல் மாரிமுத்து, தற்பொழுது விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை மரணம் என தொடர்ந்து ஒட்டு மொத்த திரை துறையினரை மட்டுமில்லை, சினிமா ரசிகர்களையும் மிக பெரிய சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

இந்நிலையில் சமீப காலமாக ஒரு சில மீடியாக்கள் இறப்பு வீட்டுக்களுக்கு சென்று அவர்கள் செய்யும் அட்டூழியங்கள் உச்சகட்ட கேவலமாக இருப்பதை பார்க்க முடிகிறது, சினிமா துறையை சேர்ந்த யாராவது இறந்துவிட்டார் என்கிற செய்தி வந்த சில மணி நேரங்களில் இறந்தவர் வெட்டை சுற்றி ஆக்கிரமித்து கொள்ளும் மீடியாக்களால் துக்கம் விசாரிக்க வருகின்ற சினிமா துறையை சேர்ந்தவர்களை உள்ளே விடாமலும், வெளியே வர விடாமலும் சூழ்ந்து கொண்டு அவர்களை செய்யும் அட்டூழியங்கள் துக்கம் விசாரிக்க வருகின்றவர்களை மேலும் மனதளவில் காயப்படுத்துகிறது.

குறிப்பாக மகளின் மரணம் காரணமாக மிக பெரிய சோகத்தில் இருந்த விஜய் ஆண்டனி குடும்பத்தினரை, இறந்த மகள் மீராவை நல்லடக்கம் செய்யும் வரை மீடியாக்கள் சூழ்ந்து கொண்டு செய்த அட்டூழியம் , ஏற்கனவே சோகத்தில் இருந்து விஜய் ஆன்டனி குடும்பத்தினரை மேலும் சோகத்தில் ஆழ்த்துவதை பார்க்க முடிந்தது, உடலை எடுத்து அம்புலஸில் எடுத்து செல்வது முதல், இறுதியாக அடக்கம் செய்வது வரை மீடியாக்களில் இடையூறுகளை மீறி இறுதியில் அடக்கம் செய்வதர்க்குள் படாது பாடு பட்டுவிட்டனர் என்றே சொல்லலாம்.

அந்த அளவுக்கு இறுதி சடங்கை நடத்துவதில் ஆங்காங்கே மீடியாக்கள் சூழ்ந்து கொண்டு செய்து அட்டூழியம் எல்லை மீறி சென்றதை பார்க்க முடிந்தது, இந்நிலையில் மகளின் மரணம் குறித்து விஜய் ஆன்டனி வெளியிட்ட அறிக்கையில், என் மகளுடன் நானும் இறந்து விட்டேன் என வேதனையை வெளிப்படுத்தி இருந்த நிலையில், இறப்பு வீட்டில் மீடியாக்கள் செய்யும் அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற குரல் சினிமா வட்டாரத்தில் ஒலிக்க தொடங்கியுள்ளது.

இயக்குனர் பாரதிராஜா இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மரணம் கொடுமையானது. அதிலும் அகால மரணங்கள் மிகக் கொடுமையானது. அப்படியொரு நிகழ்வை சந்திக்கும்போது சொந்த பந்தங்கள், உடன் நட்புகள் கலங்கிப்போகும். செய்வதறியாது திகைத்துப் போகும். அந்நேரம் ஆறுதல் சொல்லுதலே இயலாத காரியம். தேற்றுவதற்கு வார்த்தைகள் இருக்காது. உடன் நிற்பது மட்டுமே சாத்தியமாகும்.

அந்நேரத்தைக் கூட நம்மால் தர முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகின்றன சமீப கால மீடியாக்களின் செயல். புகழ்பெற்றவர்களின் வீட்டு இழப்பை இவர்கள் படம் எடுத்துப் போடுவதால் தேவையற்ற கூட்டம் சேர்கிறது. வந்து உடன் நிற்க நினைக்கும் பலரை துக்க வீட்டிற்கே வரவிடாமல் செய்துவிடுகிறது. அல்லது வந்ததும் ஓட வைத்துவிடுகிறது. முன்பெல்லாம் ஊடக தர்மம் இருந்தது. எந்நிகழ்வை படமாக்க வேண்டும். கூடாதென்று. இப்போது சமூக வலைதளங்கள் பெருகிய பின் எல்லாமே மாறிவிட்டது. அறநிலை பிறழ்ந்துவிட்டது.

ஊடகங்கள் மரண வீட்டின் உள்ளே வரை நுழைந்து காட்சித் திருடு வதை செய்கின்றன. நம் அனுமதி இல்லாமல் இரக்கமற்று நம் கையறு நிலையில் நிற்கும் முகங்களை படம் பிடித்துக் காட்டுகின்றனர். இது எந்தவிதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை என தெரிவித்துள்ள பாரதிராஜா. ஊடக தர்மத்தை மீறி நடந்துகொள்வதால், காணொளி செய்பவர்களை மரண வீட்டில் மறுக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஒரு மூத்த கலைஞனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும் ஊடகத்தினரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல் துறையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் மீடியாக்களை அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்” என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் துக்கம் வீட்டில் வந்து அட்டூழியம் செய்யும் சில மீடியாக்களால் ஒட்டு மொத்த மீடியாக்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் எந்த செயலுக்கு அணைத்து தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.