அடங்காத விஜய்… அடித்து துவம்சம் செய்த ரஜினிகாந்த்… யாருகிட்ட.?

0
Follow on Google News

ரஜினி மற்றும் விஜய் இருவருக்கும் இடையிலாக ஏற்படும் பிரச்சனை என்பது இது புதிதல்ல.ரஜினி நடிப்பில் வெளியான பாபா படம் தோல்வியை கொண்டாடும் விதத்தில் நடிகர் விஜய் அவருடைய நண்பர்களை அழைத்து இரவு பார்ட்டி ஒன்றை வைத்து அமர்களப்படுத்திய தகவல் அப்போது அந்த காலகட்டத்தில் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இனிமேல் நீ தான் சினிமாவில் நம்பர் ஒன், என நடிகர் விஐயை அவருடைய நண்பர்கள் மது போதையில் உசுப்பேத்தி விட்டுள்ளார்கள், பதிலுக்கு போதையில் விஜய்யும் சில விஷயங்கள் பேச இது ரஜினி கவனத்திற்கு சென்றுள்ளது. இந்நிலையில் பாபா படத்தின் தோல்வியின் போது தான் கஷ்டத்தில் இருந்ததை, விஜய் பார்ட்டி வைத்து கொண்டாடியதை மனதில் வைத்து தான் சந்திரமுகி வெற்றி விழாவில் நான் யானை அல்ல குதிரை விழுந்த உடனே எழுந்து விடுவேன் என்று ரஜினிகாந்த் பேசியதாக அப்போது செய்திகள் வெளியானது.

இந்த நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சரத்குமார். நான் நடித்த சூரிய வம்சம் படத்தின் வெற்றி விழாவிலேயே விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பேசி இருந்தேன். அது இப்போது நடந்துள்ளது என சரத்குமார் பேசிய இந்த பேச்சு, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், ரஜினி ரசிகர்களின் மத்தியில் கடும் எதிர்ப்புக்கு உள்ளானார் நடிகர் சரத்குமார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சரத்குமார் பேசி இந்த பேச்சு மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்த பின்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் சரத்குமாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, ஒரு காலகட்டத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் வருவார், சூப்பர் ஸ்டாரை விட பெரிய பட்டம் சுப்ரீம் ஸ்டார் பட்டம் என்றும் மீண்டும் ரஜினிகாந்த் ரசிகர்களை சீண்டுவது போன்று பேசியிருந்தார் சரத்குமார்.

இந்த நிலையில் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று சரத்குமார் பேசிய பேச்சுக்கு, அதே மேடையில் அடுத்து பேச வந்த நடிகர் விஜய் அந்த சர்ச்சை பேச்சுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் பேசியிருக்க வேண்டும். நான் தான் சூப்பர் ஸ்டார் என்று சரத்குமார் பேசியதை ஏற்று கொள்ள மாட்டேன், தமிழ் சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று விஜய் வாரிசு பட ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசியிருக்க வேண்டும்.

அப்படி விஜய் பேசியிருந்தால், அப்போதே இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்திருக்கும், ஆனால் விஜய் இந்த விஷயத்தில் அமைதியாக இருந்தது, சரத்குமார் தன்னை சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்ததை ஏற்று கொள்வது போன்று அமைத்தது விஜயின் நடவடிக்கைகள். மேலும் சரத்குமாரை தொடர்ந்து விஜய்யை சுற்றி இருக்க கூடிய நபர்கள், விஜய் தான் சூப்பர் ஸ்டார் என் அடுத்தடுத்து பேச தொடங்கியது, நடிகர் ரஜினிகாந்தை மிக பெரிய கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே பாபா படத்தின் போது ரஜினியை சீண்டிய விஜய், தற்பொழுது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சையின் பின்னணியில் விஜய் தூண்டுதல் இருக்கலாம் என்கிற விமர்சனம் வந்துள்ள நிலையில், இதற்கெல்லாம் தரமான பதிலடி கொடுக்கும் வகையில் அமைத்துள்ளது, ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெயிலர் படத்தின் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள்.

ஒன் அலும்ப பார்த்தவன்….ஒங்க அப்பன் விசில கேட்டவன்……ஒன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்…..அதில் பேர தூக்க நாலும் பேரு….. பட்டத்த பறிக்க நூறு பேரு…… குட்டி செவுத்த எட்டி பார்த்தா … உசிரு கொடுக்க கோடி பேரு.. என்கிற வரிகள் தொடர்ந்து சீண்டி வரும் விஜய்க்கு தரமான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக ரஜினியின் விருப்ப படி இடம் பெற்ற பாடல் வரிகள் தான் இது என்று கூறப்படுகிறது.