விஜய்யிடம் இருந்து வந்த அழைப்பு… தூக்கி எறிந்த கெத்து காட்டும் பிரதீப் ரங்கநாதன்..

0
Follow on Google News

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அடுத்து அவருடைய இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது, இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனே ஹீரோவாக நடித்து இருப்பார். எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய லாபத்தை அதன் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில் தற்பொழுது மிக பெரிய வெற்றியை பெற்றுள்ள லவ் டுடே திரைப்படம், அந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நான்கு மடங்கு லாபத்தை பெற்று தந்துள்ளது. மேலும் இந்த படத்தை மிஸ் செய்த தயாரிப்பு நிறுவனம் வருத்தத்தில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் பெரும்பாலும் தமிழ் சினிமாக்கள் தமிழில் வெளியாகும் போது, தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்படுவார்கள்.

ஆனால் லவ் டுடே படத்தை தெலுங்கில் டப் செய்வதற்கு யாரும் முன்வரவில்லை. ஆனால் படம் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றதும், இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுவதற்கு தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மத்தியில் கடும் போட்டி நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே பல கோடி லாபத்தை ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு பெற்று தந்தது.

அந்த வகையில், தொடர்ந்து அடுத்தடுத்து படங்களுக்கு பிரதீப் ரங்கநாதனிடம் ஏஜிஎஸ் நிறுவனம் பிரதீப் ரங்கநாதனிடம் கால் சீட் வாங்கி வைத்துள்ளது ஏஜிஎஸ் நிறுவனம். இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு கமிட் ஆகியுள்ளார். இந்த படத்திற்கான முழு ஸ்கிரிப் மற்றும் திரைக்கதை எழுதும் பணியில் வெங்கட் பிரபு மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடனேயே வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் வெங்கட் பிரபு விஜய் கூட்டணி உறுதி செய்வதற்கு முன்பு முதலில் ஏஜிஎஸ் நிறுவனம் ஏற்கனவே அடுத்தடுத்து படங்கள் இயக்குவதற்காக பிரதீப் ரங்க நாதனிடம் கால் சீட் வாங்கி வைத்துள்ள நிலையில் விஜயை சந்தித்து ஒரு கதை சொல்ல வலியுறுத்து உள்ளனர்.

அதற்கு பிரதீப் ரங்கநாதன் தற்போது நான் ஹீரோவாக நடித்த திரைப்படம் லவ் டுடே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதனால் தான் அடுத்தடுத்து ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்றும், அப்படி இயக்குவதாக இருந்தால் நான் ஹீரோவாக நடிக்கும் என்னுடைய படத்தை மட்டுமே இயக்குவேன், மற்ற நடிகர்களின் படத்தை இயக்கம் மாட்டேன் என பிடிவாதமாக தெரிவித்து விட்டாராம்.

இருந்தும் ஏஜிஎஸ் நிறுவனம் இது விஜய் சார் படம், உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்று எவ்வளவோ, எடுத்து கூறினாலும், அதெல்லாம் முடியவே முடியாது, நான் வேறு ஒரு நடிகரை வைத்து இயக்க மாட்டேன் . ஹீரோவாக தான் நடிப்பேன், அது நானாக இயக்கும் படமாக இருக்கும் அல்லது மற்ற இயக்குனர்கள் படத்தில் ஹீரோவாக நடிப்பேன் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம் பிரதீப் ரங்கநாதன்.

இந்த நிலையில் பிரதிப் ரங்கநாதன் லவ் டுடே படத்தில் கிடைத்த வெற்றி மூலம் அவருக்கும் பெருமளவு ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு சினிமா நிகழ்ச்சிக்கு வந்த பிரதீப் ரங்கநாதனுக்கு அங்கு திரளாகத் திரண்டு இருந்த ரசிகர்கள் மிக உற்சாக வரவேற்பு அளித்தது மட்டுமில்லாமல், முந்திக்கொண்டு பிரதீப் ரங்கநாதனிடம் செல்பி எடுக்க ரசிகர்கள் பட்ட பெரும் பாடு முன்னணி நடிகர்களுக்கு கிடைக்கும் அதே வரவேற்பை பெற்றுவிட்டார் பிரதீப் ரங்கநாதன் என்றே சொல்லலாம்.