விஜய்க்கு ஆப்பு வைக்கும் விஜய் ரசிகர்கள்… விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்த எச்சரிக்கை..

0
Follow on Google News

நடிகர் விஜய் லியோ படத்தின் படப்பிடிப்பபை முடித்துவிட்டு வெளிநாடுகளில் இருந்து வந்தாலும் கூட அவரின் உத்தரவின் பேரில் விஜயின் அரசியல் நகர்வுக்கான வேலைகளை புஸ்ஸி ஆனந்த் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் விஜய் அரசியல் என்ட்ரிக்கு ஆரம்ப புள்ளியாக அமைத்து இதற்கு முன்பு விஜய் நடத்திய மாணவர் மாணவிகள் சந்திப்புகள், விஜய் மாணவர் சந்திப்பில் பேசிய பேச்சுக்கள் அவர் அரசியலுக்கு வருவதை உறுதி செய்வது போன்று அமைத்தது.

இந்நிலையில் விஜயின் அரசியல் என்ட்ரி கொடுக்க இருக்கும் இந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் – விஜய் இருவருக்குமான சூப்பர் ஸ்டார் படத்திற்கான மோதல், விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையில் மிக பெரிய அளவில் விஷவ்ரூபம் எடுத்து, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் வெளியான நேரத்தில் விஜய் ரசிகர்கள் படம் நன்றாக இருந்தாலும் தங்கள் வன்மத்தை கக்கும் ஜெயிலர் மற்றும் ரஜினியை சமூக வலைதளத்தில் ட்ரோல் செய்து வந்தனர்,

இருந்தும் அதையெல்லம் தாண்டி இன்று ஜெயிலர் படம் அடைந்துள்ள மிக பெரிய வெற்றி ட்ரோல் செய்து வந்த விஜய் ரசிகர்கள் முகத்தில் கரியை பூசுவது போன்று அமைத்துள்ளது. இந்நிலையில் இந்நிலையில் விஜய் அரசியல் வருகை குறித்து தொடர்ந்து முக்கிய புள்ளிகளிடம் ஆலோசனை நடத்தி வந்து கொண்டிருக்கையில், அந்த வகையில் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை இதற்கு முன்பு இரண்டு முறை சந்தித்து தன்னுடைய அரசியல் வருகை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்,

இரண்டு முறையுமே வெளி மாநிலக்களில் ரகசியமாக நடந்தது விஜய் – பிரசாந்த் கிஷோர் ஆலோசனை, அந்த வகையில் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடும் போது பிரசாந்த் கிஷன் விஜய்யின் அரசியல் ஆலோசகராக செயல்படுவார் என்றும், அதற்காக அவருக்கு பெரும் தொகையும் பேசப்பட்டுள்ளது, விஜய்யும் அந்த தொகையை கொடுத்து பிரசாந்த் கிஷோரை தன்னுடைய அரசியல் ஆலோசகராக ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் அரசியல் என்ட்ரி குறித்து அவ்வ போது விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து பல டிப்ஸ்களை கொடுத்து வருகிறார், அந்த வகையில் பிரசாந்த் கிஷோர் கொடுக்கும் டிப்ஸை வெளிநாட்டில் விஜய் இருந்தாலும் கூட தன்னுடைய பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் செயல்படுத்தி வந்து கொண்டிருக்கிறார், அப்படி இம்முறை விஜய்க்கு பிரசாந்த் கிஷோரிடம் இருந்து சென்ற எச்சரிக்கை தான் விஜய்யை கலக்கம் அடைய செய்துள்ளது.

அதாவது விஜய் அரசியல் என்ட்ரி கொடுப்பது, முழுக்க முழுக்க இளைஞர்கள் மற்றும் மாணவர்களை நம்பி தான் என்றும், அவர்கள் மத்தியில் விஜய் உருவாக்கும் எழுச்சி தான் அவருடைய அரசியலை தீர்மானிக்க இருக்கிறது, அந்த வகையில் அரசியல் ரீதியாக இனிவரும் கலங்களில் அரசியல் காட்சிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் விஜய், தறபோதே தேவையின்றி அவரை சுத்தி எதிரிகளை அதிகரிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் செயல்பட்டு வருவது, அதற்கு முக்கிய காரணமே விஜய் தான் என்பதை நேரடியாகவே விஜயின் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

அதாவது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ஆரம்பத்திலே புகைச்சல் ஏற்பட்ட போது, தமிழ் சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினி தான் விஜய் பெருந்தன்மையுடன் பேசி இருந்தால், அது ரஜினியை இன்றளவும் கொண்டாடும் ஒரு கூட்டம் விஜயை கொண்டாடி இருக்கும், அது அவருடைய அரசியலுக்கும் துணையாக இருந்திருக்கும்,ஆனால் விஜயின் மௌனம் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து ரஜினிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த செயல்களால், இன்று ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினியை கொண்டாட கூடியவர்கள் விஜய்க்கு எதிராக திரும்பியுள்ளார்க்ள.

இந்நிலையில் ஏற்கனவே விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்கள் பெரும் கூட்டம் இருந்து வரும் நிலையில், தற்பொழுது அவர்களுடன் ரஜினி ரசிகர்களுக்கும் விஜய்க்கு எதிராக கை கோர்க்கும் சூழலை விஜய் ரசிகர்கள் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்து வருவதின் மூலம் ஏற்படுத்தியுள்ளார்கள், அந்த வகையில் இது போன்று உங்கள் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் செயல்பட்டு வந்தால், உங்களை காலி செய்ய உங்கள் ரசிகர்களே போதும் என பிரசாந்த் கிஷோரிடம் இருந்து விஜய்க்கு எச்சரிக்கை வந்ததாகும், மேலும் உங்கள் ரசிகர்களை உடனே கட்டுப்படுத்த வேண்டிய செயலை செய்யுங்கள் என பிரசாந்த் கிஷோர் எச்சரித்தாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து விஜய் அறிவுறுத்தலின் பேரில் விஜய் மக்கள் இயக்கத்தில் ஐடி விங் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்திய புஸ்ஸி சமூக வலைத்தளத்தில் செயல்படும் விஜய் ரசிகர்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்து, நீங்கள் யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம் தளபதியை பற்றியும் மக்கள் இயக்கம் பற்றிய பதிவுகளை மட்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என் தெரிவித்ததாக கூறப்படுகிறது.