வடிவேலு லீலைகளுக்கு அங்க போனா அடிச்சே கொன்றுவாங்க… பரபரப்பை ஏற்படுத்திய சிங்கமுத்து…

0
Follow on Google News

சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு படு பிஸியாக நடித்துக் கொண்டு இருந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தனி காமெடி டிராக்காக நடிகர்கள் சிங்கமுத்து, லக்ஷ்மணன், முத்துக்காளை, போண்டாமணி போன்றவர்களுடன் இவர் அடிக்கும் லூட்டி படுஜோராக ஒவ்வொரு படத்திலும் அமைந்திருக்கும். தன்னைத்தானே அடி வாங்க வைத்துக் கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பதில் வைகைப்புயலுக்கு ஈடே இல்லை என்று சொல்லலாம்.

ஆனால் சிறிது நாட்களுக்கு முன்பு அவர் மீண்டும் காமெடி படத்தில் நடித்த பொழுது அது பெரிதாக மக்களை ஈர்க்கவில்லை. ஏனென்றால் அவை அனைத்தும் அவரின் பழைய டிராக் காமெடியாகவே இருந்தது. அது இந்த காலத்திற்கு எடுபடவில்லை. இருப்பினும் மாமன்னன் படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீஎன்ரி கொடுத்தார் வைகை புயல். என்னதான் நடிப்பில் கலக்கல் மன்னனாக இருந்தாலும், இவரின் குணாதிசயங்கள் வேறாகவே இருந்தது.

அவருடன் வேலை பார்த்த அனைவரும் அவரைப் பற்றி குறை மட்டுமே கூறியுள்ளனர். பலரும் அவரை நல்லவர் என்று கூறியதில்லை. தினமும் ஒரு ஆள் எங்கிருந்தோ வந்து வடிவேல் அப்படி செய்தார் இப்படி செய்தார் என்று குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டே உள்ளனர். இந்நிலையில் தற்போது சிங்கமுத்து அவர்கள் வடிவேலு மீது ஒரு குற்றச்சாட்டினை வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய நகைச்சுவையான பாடி லாங்குவேஜின் மூலம் உயந்த பல நடிகர்கள் உள்ளனர். அப்படி திறமை மிக்க காமெடி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிங்கமுத்து. இவரும் வடிவேலும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கமுத்து நில மோசடி செய்து விட்டதாக நிதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார் நடிகர் வடிவேலு.

அந்த புகார் இன்றும் முடிக்கப்படாமல் நிலுவையில் தான் உள்ளது. தற்போது சிங்கமுத்து அவர்கள் வடிவேலுவை பற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் அவர் வடிவேலுவை சரமாரியாக தாக்கி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “வடிவேலு செய்ததெல்லாம் எனக்கு மட்டும்தான் தெரியும். அவரெல்லாம் துபாய் பக்கம் சென்றால் கல்லை விட்டு அடிப்பார்கள். அந்த அளவிற்கு அட்டகாசம் செய்துள்ளார்.

அவர் செய்ததை முழுவதுமாக நான் இன்னும் எங்கேயும் சொன்னதே இல்ல. ஒரு 10 தயாரிப்பாளர்களுக்கு போன் செய்து அந்த ஹீரோ கையை பிடிச்சு இழுத்தான், இந்த ஹீரோ அவளை அப்படி செஞ்சான் என்று மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்பாராம். தினமும் யாருக்கு சண்டை மூட்டி விடலாம் என்று யோசித்து கொண்டே இருப்பார்.

இதெல்லாம் என்னிடம் சொல்லிவிட்டு செய்வார். இன்னும் பல விஷயம் இருக்கிறது அதெல்லாம் சொன்னால் வேற மாதிரி திசை போகும். அவர் செய்த ஒரு விஷயம் கர்மாவாக மாறி பத்து வருடங்களாக அவரை சோதித்து பார்த்து விட்டது. ஆனால் இதெல்லாம் வடிவேலுவுக்கு பத்தாது இன்னும் அவர் அனுபவிக்கணும்” என்று கூறியுள்ளார்.