வாய்க்கொழுப்பு எடுத்து அஜித்தை அவமதித்த வடிவேலு..! அஜித் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

சினிமாவில் உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு வாய் கொழுப்பெடுத்து ஆணவத்தால் சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனார் வடிவேலு. இதன் பின்பு நீண்ட இடைவெளிக்கு பின்பு ரீ என்ட்ரி கொடுத்த வடிவேலு பட்டும் திருந்தவில்லை என்று சொல்லும் அளவுக்கு இன்னும் அவருடைய ஆணவம் மற்றும் வாய் கொழுப்பு அடங்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது கூறிப்பிடத்தக்கது.

நடிகர் வடிவேலு சினிமாவில் காணாமல் போக காரணம், நடிகர் விஜயகாந்த் உடன் சண்டையிட்டு அதிமுகவுக்கு எதிராக திமுகவுக்கு ஆதரவாக கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தது தான் என கூறப்பட்டாலும் அது மட்டுமே காரணம் இல்லை, வடிவேலு சினிமா இயக்குனர்கள், நடிகர்களிடம் வாய்க்கொழுப்பு எடுத்து ஆணவத்துடன் நடந்து கொண்டது தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வின்னர், கிரி, லண்டன் , தலைநகரம் என தொடர்ந்து வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் வடிவேலு, அடுத்த சுந்தர் சி இயக்கத்தில் ரெண்டு படத்தில் நடித்து கொண்டிருந்த போது இயக்குனர் சுந்தர் சி உடன் மோதல் போக்கை கடைபிடித்துள்ளார், மேலும் என்னுடைய நகைச்சுவை காட்சி இல்லை என்றால் சுந்தர் சி படத்தை யார் பார்ப்பார்கள் என ஆணவத்துடன் பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து ரெண்டு படத்தில் பாதியிலே வடிவேலுவை விரட்டிவிட்டு சந்தனத்தை இரண்டாம் பாதியில் நடிக்க வைத்தர் சுந்தர் சி, இதன் பின்பு தனது எந்த ஒரு படத்திலும் நடிகர் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதே போன்று நடிகர் அஜித் உடன் ராஜா படத்தில் வடிவேலு நடித்த போது. படத்தின் படப்பிடிப்பு கொடைகானலில் நடைபெற்றுளளது. அப்போது நடிகர் அஜித்தை ஆணவத்துடன் அவமதித்துள்ளார் வடிவேலு.

படத்தில் அஜித் உடன் வடிவேலு பேசும் காட்சிகளில் அஜித்தை வாடா.. போடா .. என்று வடிவேலு பேசியுள்ளார். ஆனால் இயக்குனர் அப்படி வசனம் எழுதி கொடுக்கவில்லை. இயக்குனர் பலமுறை எடுத்து கூறியும் கேட்க வில்லை. மேலும் படப்பிடிப்பு தளத்தில் சாதாரணமாக பேசும் போது கூட அஜித்தை வாடா… போடா.. என்று வடிவேலு பேசியுள்ளார். படப்பிடிப்பில் இருந்தவர்கள் அஜித் சார் என்று கூப்பிடுங்க, அல்லது அஜித் தம்பி என்று கூப்பிடுங்க என்று வலியுறுத்தி உள்ளனர்.

என்னப்பா.. என்னை விட அவருக்கு வயசு குறைவு தான அப்புறம் என்ன.. என்று தொடர்ந்து அஜித்தை வாடா..போடா.. என்றே அழைத்து வந்துள்ளார் வடிவேலு. இதை நடிகர் அஜித் பெரும் அவமரியாதையாக கருத்தியுள்ளார். இதன் பின்பு நடிகர் வடிவேலு உடன் அஜித் நடிக்க கூடாது என முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இப்படி தான் வாய்க்கொழுப்பு எடுத்து ஆணவத்தால் சினிமாவில் வடிவேலு காணாமல் போனார் என கூறப்படுகிறது.

ஆளுநர் வரம்பு மீறினாரா.? Article 51A பிரிவு பற்றி வைகோவுக்கு தெரியுமா.? பாடம் எடுத்த பேராசிரியர்…