வடிவேலுக்கு வாய் கொழுப்பு… விஜய் சேதுபதி படத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட வடிவேலு…

0
Follow on Google News

வருடத்திற்கு சுமார் 25க்கு மேற்பட்ட படங்களில் நடித்து பிசி நடிகராக இருந்து வந்தார் வடிவேலு. ஆனால் அவரின் தலைக்கனம், ஆணவ திமிரு காரணமாக 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போய்விட்டார். வடிவேலு நடிக்கும் படத்தின் இயக்குனர் மற்றும் சக நடிகர்கள் மத்தியில் ஆணவத்தில் நடந்து கொண்டது தான் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனதற்கு காரணம் என கூறப்பட்டது.

10 வருடம் வனவாசத்தை அனுபவித்துவிட்ட வடிவேல், இனிமேல் பொறுப்பாக நடந்து கொள்வார் என்று சினிமா துறையினர் எதிர்பார்த்த நிலையில், அவருடைய நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் படாதபாடு பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் லைக்கா தயாரிப்பில் சமீபத்தில் வெளியான நாய் சேகர் ரிட்டன் படத்தில் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து தயாரிப்பு தரப்பிற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் சொல்வதை வடிவேலு கேட்பதில்லை, கதை காட்சிகள் அனைத்துமே வடிவேலு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி படத்தை கெடுத்துள்ளார். அதேபோன்று லைக்கா தயாரிப்பில் சந்திரமுகி 2 படத்தில் வடிவேலு காமெடியனாக நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பில் தொடர்ந்து படத்தின் இயக்குனர் பி வாசு மற்றும் வடிவேலு இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

இதனால் படத்தின் படப்பிடிப்பை மிக சிரமத்துடன் நடத்தி வருகிறார் பி வாசு. இதனை தொடர்ந்து இயக்குனர் பி வாசுவை தொடர்பு கொண்ட தயாரிப்பு நிறுவனம் வடிவேலு நடிக்கும் காட்சிகளை பெரும் அளவு குறைத்து விடுங்கள் என்றும். முடிந்தளவு இந்த படத்தில் வடிவேலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தில் அடுத்த நாள் படப்பிடிப்புக்கு காலை 9 மணிக்கு வடிவேலுவை வருவதற்கு தகவல் அனுப்பினால், அதற்கு 10 மணிக்கு வருகிறேன் என்கிறார் வடிவேலு, சரி சார் 10 மணிக்கு வாங்க என்றால் 11 மணிக்கு வருகிறேன் என்கிறாராம், சார் கொஞ்சம் சீக்கிரம் வாங்க என்றது,சரி காலை 9 மணிக்கு வருகிறேன் என உறுதியளித்துவிட்டு அடுத்த நாள் படப்பிடிப்புக்கு வராமல் போன் சுவிட்ச் ஆப் செய்து விடுகிறாராம் வடிவேலு.

இப்படி பத்து வருடம் படவாய்ப்புகள் இல்லாமல் மீண்டும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாமல் வடிவேலுவின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் ஒன்றில் வடிவேலு கமிட்டாகி இருந்தார், இந்த படம் மலேசியாவில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தும் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பட குழுவுக்கு வடிவேலு குறித்து ஒரு தகவல் சென்றுள்ளது, அதில் நாய் சேகர் ரிட்டர்ன் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றுள்ளார் வடிவேலு, அப்போது லண்டனின் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அவருக்கு ரூம் பூக் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அந்த நச்சந்திர ஓட்டலுக்கு சென்ற வடிவேலு. அந்த ஓட்டலில் உள்ள சுமார் 10க்கு மேற்பட்ட ரூம்களை திறந்து காட்ட சொல்லியுள்ளார்.

இப்படி பத்துக்கு மேற்பப்ட்ட ரூம்களை பார்த்த வடிவேலு இந்த ரூமில் அது சரியில்லை, அந்த ரூமில் இது சரியில்லை என இறுதியில் ஒரு வழியாக ஒரு ரூமை செலக்ட் செய்து அங்கே தங்கியுள்ளார் வடிவேலு, இப்படி வெளிநாட்டில் படப்பிடிப்புக்கு சென்ற வடிவேலு பல அட்ராசிட்டிகளை அரங்கேற்றி பட குழுவுக்கு மிக பெரிய சிரமத்தை கொடுத்து வந்துள்ளார்.

இந்த தகவல் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் பட குழுவுக்கு தெரிய வந்துள்ளது, உடனே மலேஷியா அழைத்து சென்று வடிவேலுவிடம் மல்லு கட்டுவதை விட அவரை படத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு அவருக்கு பதில் யோகிபாபுவை கமிட் செய்துள்ளனர், இதனால் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கமிட்டாகி இருந்த வடிவேலு அந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.