நன்றி தெரியாத விஜய்… தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்… இப்ப கூடவா விஜய் இப்படி செய்ய வேண்டும்…

0
Follow on Google News

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த், சமீப காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இப்படியான நிலையில், கடந்த நவம்பர் 29ஆம் தேதி மருத்துவமனை உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை வெளியிட்டு இருந்தது.

அதில் கடந்த சில நாட்களாக விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகவும், கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை சீராக இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் அவருக்கு 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாகவும், அவர் விரைவில் பூரண குணமடைவார் என்று நம்புவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவமனை வெளியிட்ட இந்த அறிக்கை, சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையவாசிகள் பலரும் விஜயகாந்த் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தித்து வருகின்றனர். நடிகர் விஜயகாந்த் உடல்நிலை குறித்த இந்த செய்தி இணையத்தில் தீயாய் பரவியதும், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படியான சூழ்நிலையில் இணையவாசிகள் நடிகர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், நன்றிக்காக கூட நடிகர் விஜய் மருத்துவமனையில் அவரை சென்று பார்க்கவில்லை என்று பலரும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

இன்றைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், 90களின் தொடக்கத்தில் ஹீரோவாக அறிமுகமானபோது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகினார். தன் அப்பா சந்திரசேகர் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தாலும், ரசிகர்களின் மனதில் ஹீரோவாக இடம் பிடிக்க தடுமாறிக் கொண்டிருந்த காலம் அது. இந்த சூழலில் தான் அன்று தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு இணையாக உச்சத்தில் இருந்த விஜயகாந்த் விஜய்க்கு மிகப்பெரும் உதவியை செய்துள்ளார்.

அதாவது சந்திரசேகர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டில் வெளியான செந்தூரப்பாண்டி படத்தில் நடிப்பதற்கு விஜயகாந்த் ஒப்புக்கொண்டார். அப்போது “தம்பி விஜய்க்காக இது கூட பண்ண மாட்டேனா” என்று சந்திரசேகரிடம் கூறி விஜய்க்காக அந்த படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார். அந்த படமும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இப்படி விஜயின் சினிமா கரியரில் முக்கியமான காலத்தில் அசால்டாக உதவி செய்து தூக்கி விட்ட விஜயகாந்த் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜய் குடும்பத்திற்கு பல்வேறு வகையில் உதவியாக இருந்து வந்தவர் விஜயகாந்த, இதை விஜய் தந்தையே பலமுறை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார், அப்படி இருக்கையில் சில வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலே ஓய்வு எடுத்து வந்த விஜயகாந்தை அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை நேரில் சந்தித்து உடல் நிலை விசாரித்தாலும், விஜய் ஒரு முறை கூட நேரில் நேற்று விஜயகாந்தை சந்திக்க வில்லை.

இந்நிலையில் தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தை என்னதான் பிசியான நடிகராக விஜய் இருந்தாலும், தான் இன்று சினிமாவில் உயரத்துக்கு இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் விஜயகாந்த் என்கிற நன்றி உணர்வு கொஞ்சமாவது விஜய்க்கு இருந்திருந்தால் இந்நேரம் விஜயகாந்தை ஓடோடி வந்து உடல் நலம் விசாரித்து இருக்க வேண்டும், அந்த வகையில் விஜய் எட்டி கூட பார்க்காதது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.