120 கோடியில் சூர்யாவின் பிரைவேட் ஜெட்… பராமரிப்பு செலவு மட்டும் இத்தனை கோடியா.?

0
Follow on Google News

நடிகர் சூர்யா தன்னுடைய மனைவி குழந்தையுடன் மும்பையில் குடியேறின பின்பு அவரைப் பற்றி சினிமா அப்டேட் பெரும்பாலும் இல்லை என்றாலும் அவருடைய மும்பை வாழ்க்கை பற்றிய புது புது அப்டேட் வந்து கொண்டே தான் இருக்கிறது. அதேபோன்று சென்னையில் இருக்கும் வரை தமிழ் கலாச்சார பெண்ணாக இருந்த சூர்யா மனைவி ஜோதிகா மும்பை சென்ற பின்பு முழுக்க முழுக்க பாலிவுட் கலாச்சாரத்திற்கு மாறிவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு, அரை குறை ஆடைகளுடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் புகைப்படம் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையிலும் ஜோதிகா சிக்கி வருகிறார்.

மும்பையில் குடியேறிய நடிகர் சூர்யா கைவசம் தமிழ் படங்கள் பெரும்பாலும் இல்லை என்றாலும், தற்பொழுது அவர் நடித்துவரும் கங்குவா படத்தின் வெற்றி தோல்வியை பொறுத்து அவருடைய சினிமா வாழ்க்கை உள்ளது. காரணம் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 10 வருடங்களில் திரையரங்கில் வெளியான எந்த படமும் வெற்றி அடையவில்லை, ஓடிடியில் வெளியான ஜெய் பீம், சூரரை போற்று படங்கள் மட்டுமே வெற்றி அடைந்தது.

அந்த வகையில் கங்குவா திரையில் வெற்றி அடையவில்லை என்றால் சூர்யாவின் சினிமா எதிர்காலமே மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும். அதே நேரத்தில் மும்பையில் செட்டில் ஆகி உள்ள சூர்யா சென்னைக்கு படப்பிடிப்பிற்கு அடிக்கடி வந்து செல்ல சிரமமாக உள்ளதால், சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பிரைவேட் ஜெட் வாங்கி உள்ளார் என்று கடந்த ஒரு வாரமாக அனைத்து இணையதளத்திலும் வைரலாகி வருகிறது.

ஒரு நடிகர் பிரைவேட் வாங்குவது இது புதிதல்ல காரணம், அமிதாபச்சன், அக்ஷய்குமார், நாகர்ஜுனா, ராம்சரண், சாருக்கான், பிரியங்கா சோப்ரா, கிருத்திக் ரோஷன், சல்மான்கான், மகேஷ்பாபு, நயன்தாரா சன்னி லியோன் என பலரும் பிரைவேட் ஜெட் சொந்தமாக வைத்திருக்கிறார்கள். இதில் தமிழ் சினிமாவில் நநடிகை நயன்தாரா மட்டும் அவருக்கு சொந்தமான பிரைவேட் உள்ளது.

பொதுவாக பிரைவேட் ஜெட் பராமரிப்பு செலவும் அதிகம், காரணம் பிரைவேட் ஜெட் விமான நிலையங்கள் இறக்கும் பொழுதும் அதற்கான வாடகை, பயணம் செய்யாத பொழுது அந்த பிரைவேட் ஜெட் நிறுத்தி வைக்கப்படும் இடத்திற்கு வாடகை என பெரும் செலவு உள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா 120 கோடி ரூபாய்க்கு பிரைவேட் ஜெட் வங்கியுள்ளதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து சூர்யா பிரைவேட் ஜெட் என்ன கம்பெனி, எங்கே நிறுத்தி வைத்திருக்கிறார், எத்தனை பேர் பயணிக்கலாம், அந்த பிரைவேட் ஜெட் சிறப்பு அம்சம் என்ன என ஒரு தரப்பினர் தேட, மற்றொரு தரப்பினர் 120 கோடி ரூபாய்க்கு பிரைவேட் ஜெட் வாங்கின பணத்திற்கு இலவசமாக பள்ளிக்கூடம் காத்திருக்கலாம், எத்தனையோ ஏழை குழந்தைகளை படிக்க வைத்திருக்கலாம் என சூர்யா – ஜோதிகா தம்பதியினரை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இப்படி இருக்க சூர்யாவின் 120 கோடி ரூபாய் பிரைவேட் ஜெட் குறித்து சிறப்பு அம்சம் குறித்து விசாரித்ததில், நடிகர் சூர்யா எந்த ஒரு பிரைவேட் ஜெட்ம் வாங்கவில்லை என்றும், இது முழுக்கு முழுக்க வதந்தி என தகவல் வெளியாகியுள்ளது, அதே நேரத்தில் ஒரு பரபரப்புக்காக சூர்யா 120 கோடியில் பிரைவேட் ஜெட் வாங்கியுள்ளார் சூர்யா தரப்பில் இருந்தே அவர்களின் PRO மூலம் இது போன்ற தகவலை பரப்பி விட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.