மனைவி சொல்லே மந்திரம்.. ஜோதிகா போட்ட உத்தரவு… கமல்ஹாசனை கழட்டி விட்ட சூர்யா..

0
Follow on Google News

நடிகர் சூர்யா அவருடைய மனைவி ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், ஆரம்பத்தில் இவர்களின் காதலுக்கு சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருந்தும் இருவரும் தங்களின் காதலில் உறுதியாக இருந்ததால், மேலும் திருமணத்திற்கு பின்பு ஜோதிகா படத்தில் நடிக்க கூடாது என்று சிவக்குமார் போட்ட கண்டிஷனுக்கு சம்மதம் தெரிவித்ததால், ஜோதிகா – சூர்யா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார் நடிகர் சிவகுமார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்பு சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு குடும்பத்துடன் செட்டிலான நடிகை ஜோதிகா ஹீரோயின் சப்ஜெக்ட் படமான 36 வயதினிலே படத்தில் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் ஆசைக்கு ஒரு படம் மட்டும் நடிக்க ஜோதிகா விரும்பியதால் சிவக்குமாரும் அதற்கு பச்சைக்கொடி காட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் 36 வயதினிலே படத்திற்கு பின்பு தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்து ஜோதிகா படத்தில் கமிட்டாகி வந்தது குடும்பத்தில் மிகப்பெரிய புகைச்சலை உண்டாக்கியது. இதனால் கூட்டுக் குடும்பமாக இருந்தால் தன்னுடைய சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து கணவர் சூர்யாவை கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரித்து மும்பையில் தனி குடித்தனம் செல்ல திட்டமிட்ட நடிகை ஜோதிகா அதற்கான நகர்வுகளை செய்துவந்தாராம்.

கணவர் சினிமாவில் சம்பாரிக்கும் பல கோடி பணத்தை மும்பையில் முதலீடு செய்ய வைத்த ஜோதிகா, அதனால் பெரும் லாபமும் கிடைத்துள்ளது, இதனால் சூர்யா – ஜோதிகா இருவரும் தொழில் ரீதியாக மும்பை செல்ல நேர்ந்தது. மேலும் கணவர் சூர்யாவை ஹிந்தி படத்தில் என்ட்ரி கொடுக்க வைத்து அவரை இந்திய அளவில் பாலிவுட் ஹீரோவாக வேண்டும் என்கின்ற ஆசையை தூண்டிவிட்டுள்ளார் ஜோதிகா.

இதற்க்காக மும்பையில் கணவன் மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் புதிய வீடு வாங்கி செட்டில் ஆனார் ஜோதிகா. தற்பொழுது சூர்யா தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார், அதன் பின்பு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் தொடங்குமா.? என்பது மிகப்பெரிய சந்தேகத்தில் உள்ளது. இந்த நிலையில் பெரிதாக சூர்யா கைவசம் தமிழ் படங்கள் ஏதும் இல்லாததால் இனி அவர் சென்னைக்கு அடிக்கடி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

இந்த நிலையில் கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் மிகப் பெரிய வீடு ஒன்றை கட்டினார் சிவகுமார், ஆனால் சூர்யா மும்பையில் செட்டிலானது சிவகுமார் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது . இந்நிலையில் தற்பொழுது சூர்யா முழுக்க முழுக்க தன்னுடைய மனைவியின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதால், அடுத்த அவர் எந்தெந்த படங்களில் நடிக்க வேண்டும் என்பதை கூட அவருடைய மனைவிதான் முடிவு செய்வதாக கூறப்படுகிறது.

கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படத்தில் கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஏற்று மிக பிரம்மாண்டமாக நடித்து இருப்பார் நடிகர் சூர்யா, அந்த கதாபாத்திரம் மிகப் பெரும் அளவில் பேசப்பட்டது, மக்கள் மத்தியில் நடிகர் சூர்யாவிற்கும் மிகப்பெரிய பெரும் புகழும் வாங்கித் தந்தது ரோலக்ஸ் கதாபத்திரம்.

இந்நிலையில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து ஒரு புதிய படத்தை கமலஹாசனின் சொந்த தயாரிப்பில் ராஜ்கமல் ஃபிலிம்சில் எடுப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றது, அதற்கு நடிகர் சூர்யாவும் ராஜ்கமல் பிலிம்ஸ்க்கு கால் சீட் தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் தற்பொழுது கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்சில் நடிக்க கூடாது என்று கணவர் சூர்யாவுக்கு ஜோதிகா கண்டிஷன் போட்டதாகவும்,

அதனால் தற்பொழுது ராஜ்கமல் பிலிம்ஸில் கால் சீட் கொடுப்பதாக உறுதியளித்திருந்த நடிகர் சூர்யா தற்போது அதிலிருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கமலஹாசன் தயாரிப்பில் தன்னுடைய கணவரை நடிக்க கூடாது என ஜோதிகா கண்டிஷன் போட்டுள்ளதால், கமல்ஹாசன் மீது ஜோதிகாவுக்கு ஏன் இந்த கோபம் என்கின்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.