தந்தை சிவகுமாரை மதிக்காத நடிகர் சூர்யா… இதெல்லாம் நல்லதுக்கில்ல.. சூர்யாவை கிழித்து தொங்கவிட்ட பெண் பிரபலம்.

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் மிக ஒழுக்கமான நடிகர் என பெயர் பெற்றவர் நடிகர் சிவகுமார், ஒரு சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மறைந்த காமெடி நடிகர் விவேக், அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகுமார் பற்றி ஒரு விஷயத்தை பேசி இருப்பார். அதில் நடிகர் சிவகுமார் குடியிருக்கும் தி நகர் பகுதியில் உள்ள ஒயின்ஷாப்பில் வியாபாரம் மிக குறைவாக இருக்கிறது.

அதற்கு காரணம் தி நகரில் குடியிருக்கும் நடிகர் சிவக்குமார் அவ்வழியா செல்கின்றவர்களிடம் மது அருந்தாதீர்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால் மது அருந்துவரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. என்று நடிகர் சிவக்குமாரை மிக பெருமையாக அந்த மேடையில் காமெடியுடன் விவேக் பேசியதை பார்த்து சிவக்குமாரே விழுந்து விழுந்து சிரித்த சம்பவம் அரங்கேறியது.

சிவகுமார் எப்படி இந்த சமூகத்தில் ஒழுக்கமானவராக போற்றப்படுகிறாரோ, அதேபோன்றுதான் தன்னுடைய பிள்ளைகளையும் வளர்த்தார். அந்த அளவிற்கு சூர்யா கார்த்திக் இருவரும் சிறுசிறு சர்ச்சைகளில் சிக்கினால் கூட, பெரியதாக எந்த ஒரு சர்ச்சைகளிலும் ஒழுக்கம் சம்பந்தமாக சிக்குவது கிடையாது. ஏவிஎம் சரவணன் ஒரு முறை சூர்யா சந்தித்தபோது. அப்போது சூர்யா தன்னுடைய படத்தில் புகைப்பிடிக்கிறது மது அருந்துவது போன்ற காட்சியில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்ததற்கு பாராட்டு தெரிவித்தவர்.

இதை நீங்கள் கடைசி வரை கடைபிடிக்க வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்ததாக சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் உண்டு. இப்படி இருக்கையில் சமீபத்தில் மிகப்பெரிய ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் சூர்யா, அவர் நடித்த விக்ரம் படத்தில் வந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அதே மாஸ் வேண்டுமென்பதற்காக சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த படத்தின் ஒரு புகைப்படம் வெளியாகிய மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதில் நடிகர் சூர்யா சிகரெட் குடிப்பது போன்ற ஒரு காட்சி, தன்னை இந்த சமூகத்திற்கு முன்னுதாரணமான குடும்பமாக காட்டிக் கொள்ளும் சிவக்குமார் குடும்பத்தில் இருந்து இப்படி ஒருவர் சமுதாயத்தை சீரழிக்க கூடிய ஒரு காட்சியில் நடிப்பது சரியா என்கின்ற கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில். பிரபல அரசியல் பிரமுகர் ராஜேஸ்வரி இதுகுறித்து நடிகர் சூர்யாவை மிக கடுமையாக சாதியுள்ளார் அதில்,

சிகரெட் காட்சிகளை மையப்படுத்தி நடித்து இளைய சமுதாயத்தை பாழ்படுத்தும் சினிமா நடிகர்களுக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்த ராஜேஸ்வரி, நடிகர் சூர்யா அவர்கள் தனது சொந்த தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரே வைக்காத புதிய படத்தின் டீசர் காட்சியில் சிகரெட் புகைத்தபடி வருவது கேடு கெட்ட காட்சியாக உள்ளது.

உங்கள் தம்பி நடிகர் கார்த்தி அவர்கள் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று கொள்கை பிடிப்போடு உள்ளார். உங்கள் அப்பா ஒரு பிள்ளைக்கு நல்லது சொல்லி கொடுத்து, உங்களுக்கு சொல்லி கொடுக்க மறந்துவிட்டாரா? அல்லது தந்தை சொல்லை மதிக்கவில்லையா? உங்கள் அறக்கட்டளையின் மூலம் படிக்கும் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா? என சூர்யாவை வெளுத்து வாங்கிய ராஜேஸ்வரி.

உங்கள் நடிப்பை நம்பாமல், எப்போது சிகரெட்டை நம்பினீர்களோ அப்போதே நடிகராக தோற்று போய்விட்டீர்கள் சூர்யா” என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா காட்டமாக விமர்சித்துள்ளது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.