சூர்யா .. நீ செய்த தப்புக்கு வருத்தப்படுவாய்… சவால் விடும் பாலா..

0
Follow on Google News

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து, மேலும் அவருடைய குடும்பத்திலும் பிரச்சினையின் காரணமாக அவருடைய மனைவியை சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தார். இப்படி சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் தோல்வியை தழுவி மிகப்பெரிய விருக்தியில் இருந்த பாலா தன்னுடைய முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்த தொடங்கியவர், நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை தொடங்கினார்.

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவை அடையாளப்படுத்தியவர் சூர்யா. அந்த வகையில் நந்தா படத்தில் சூர்யாவை எப்படி கையாண்டாரோ அதேபோன்றுதான் வணங்கான் படத்திலும் சூர்யாவை கையாண்டு உள்ளார் பாலா. ஆனால் சூர்யா நந்தா படத்தில் இருந்ததை விட தற்போது பல மடங்கு உயரத்துக்கு சென்றுள்ளதால் பாலாவின் நடவடிக்கை மீது சூர்யாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி உரசல் ஏற்பட்டு வந்த வந்துள்ளது.

பாலா தன்னுடைய குரு என்பதால், அவர் மீது தன்னுடைய கோபத்தை நேரடியாக வெளிப்படுத்த முடியாத சூர்யா, பல நேரங்களில் வணங்கான் படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குனரை மிக கடுமையாகவும், அநாகரீகமாகவும் திட்டி தீர்த்து உள்ளார் சூர்யா என கூறப்படுகிறது. இது பாலாவை ஜாடை மாடையாக சூர்யா திட்டுவது படப் படிப்பில் இருந்த அனைவரும் நன்கு அறிந்துள்ளனர். மேலும் உதவி இயக்குனரை சூர்யா திட்டுவதை பலமுறை கவனித்த பாலா அதைக் கண்டும் காணாமலும் சென்றுள்ளார்.

ஆனால் நம்மைத்தான் ஜாடை மாலையாக சூர்யா திட்டுகிறார் என்று நன்கு அறிந்துள்ளார் பாலா. இப்படி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஒரு கட்டத்தில் உச்சகட்டத்தை அடைந்ததும் படப்பிடிப்பு பாதியிலேயே வெளியேறினார் சூர்யா. இதனால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நின்றது, மீண்டும் படப்பிடிப்பு தொடங்க பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், நடிகர் சூர்யா மீண்டும் பாலா உடன் இணைவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.

இந்த படத்தின் தயாரிப்பாளர் சூர்யா என்பதால், ஒரு கட்டத்தில் பாலா சூர்யாவிடம் இறங்கி வந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்துவதற்கு முயற்சி செய்தும், ஒரே முடிவோடு இந்த படத்தை கைவிடுவது என சூர்யா முடிவெடுத்துள்ளார். ஆனால் சூர்யாவுக்கு முன்பாகவே தன்னுடைய அறிக்கையை வெளியிட்டு தன்னுடைய இமேஜை காப்பாற்றிக் கொள்வதற்காக வணங்கான் படத்தின் படப்பிடிப்பு கைவிடப்படுகிறது என்று பாலா அறிக்கை வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து, அதே கதையில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து தன்னுடைய சொந்த தயாரிப்பில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் வணங்கான் படத்தை தயாரிக்க முடிவு செய்து, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ஏற்கனவே சூர்யாவை வைத்து கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடத்திய அதே இடத்தில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் பாலா.

நான் வளர்ந்து விட்ட பொடி பைய்யன் சூர்யா, இன்று என்னை உதாசீன படுத்திவிட்டு வெளியில் செல்கிறார், சூர்யா போன்று ஆயிரம் நடிகர்களை என்னால் உருவாக்க முடியும், என்னுடைய படைப்புக்காக தான் என்னுடைய படம் வெற்றி பெற்றுள்ளது, வணங்கான் படத்தை விட்டு ஏன் சென்றோம் என சூர்யா வருத்தபடும் அளவுக்கு அருண் விஜய்யின் நடிப்பு பேசப்படும் என பாலா படப்பிடிப்பு தளத்தில் பேசி வருவதாக கூறப்படுகிறது.