பெரும் நஷ்டம்…. சூர்யா வீட்டை முற்றுகையிடும் தியேட்டர் உரிமையாளர்கள்..! என்ன செய்ய போகிறார் சூர்யா.?

0
Follow on Google News

சூர்யா நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்கள் சூரரை போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் தியேட்டரில் வெளியாகாமல் OTT யில் வெளியானது. இந்த இரன்டு படங்களுக்கும் சூர்யாவின் சொந்த தயாரிப்பு என்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பை மீறி ஓடிடியில் வெளியிட்டார் சூர்யா, ஆனால் சூர்யா நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி பார்க்க ஆட்கள் இல்லாமல் காற்று வாங்கி கொண்டிருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

சூரரை போற்று படத்தை ஓடிடியில் சூர்யா வெளியிட்ட போதே இனி சூர்யா படங்களை புறக்கணிப்போம் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் அடுத்தடுத்து சூர்யா தயாரிப்பில் அவர் மனைவி நடித்த பொன்மகள் வந்தால், ஜெய்பீம் ஆகிய படங்களை ஓடிடியில் வெளியிட்டார் சூர்யா. இது மேலும் சூர்யா மற்றும் தியேட்டர் உரிமையாளர் இடையே மேலும் விரிசல் ஏற்பட்ட காரணமானது.

இந்நிலையில் தற்போது சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியான தியேட்டர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனால் படத்தை தயாரித்த சன் பிச்சர் மற்றும் படத்தை வெளிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் நடிகர் சூர்யாவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளனர். ஏற்கனவே சூர்யா மீது கோபத்தில் இருந்து வரும் தியேட்டர் உரிமையாளர்கள் தற்போது இந்த விவகாரத்தில் சூர்யாவை விடுவதாக இல்லை.

எதற்கும் துணிந்தவன் படம் தோல்விக்கு ஒரே காரணம் நடிகர் சூர்யா மட்டும் தான் என்றும், கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் அமைத்து வன்னிய சமூகத்தை சீண்டியது தான் தற்போது அந்த சமூகத்தின் எதிர்ப்பின் காரணமாக எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட்ட தியேட்டர்கள் காற்று வாங்கி கொண்டிருக்கிறது என்கிற குற்றசாட்டு நடிகர் சூர்யா மீது எழுந்துள்ளது.

இதனால் எதற்கும் துணிந்தவன் படத்தின் தோல்விக்கு சூர்யா முழு பொறுப்பேற்று தியேட்டர்கள் அடைந்த நஷ்ட்டதை சரி செய்ய வலியுறுத்தி தியேட்டர் உரிமையாளர்கள் சென்னையில் உள்ள சூர்யா வீட்டை நோக்கி படையெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சூர்யா வீட்டை தியேட்டர் உரிமையாளர்கள் நஷ்ட தொகை கேட்டு முற்றுகையிடலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்துடன் ஒப்பாரி வைத்த சிவகுமார் குடும்பம்…விழித்து கொண்ட மக்கள்..! ஏமாற்றம் அடைந்த சிவகுமார் குடும்பம்..