மனைவி பேச்சை கேட்டு மார்க்கெட் இழந்த சூர்யா…புதிய படத்தை வாங்குவதில் தியேட்டர்கள் தயக்கம்… தேவையா இது.?

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வந்த இரண்டு படங்கள் சூரரை போற்று மற்றும் ஜெய்பீம், நடிகர் சூர்யா தொடர்ந்து சுமார் பத்து படங்கள் வரை தோல்வி படங்களை மட்டும் கொடுத்து வந்த நிலையில் சூரரை போற்று வெற்றி படமாக அமைந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் மூடி இருந்த நிலையில் பல படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருந்தும், திரையரங்கு திறப்புக்காக காத்திருந்த நிலையில் நடிகர் சூர்யா தனது படத்தை ஓடிடியில் வெளியிட்டார்.

இதற்கு திரையரங்கு உரிமையாளர் தரப்பில் இருந்து கடும் எதிப்பு வந்தது, மேலும் தனது மனைவியுடன் இணைந்து தயாரித்த படங்களையும் ஓடிடியில் வெளியிட்டார் சூர்யா. இதற்கு திரைப்பட துறையை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். சூர்யாவின் இந்த முடிவுக்கு முக்கிய காரணம் அவர் மனைவி குடுத்த ஐடியா தான் என கூறப்படுகிறது. இந்நிலையில் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஜெய்பீம்.

இந்த படம் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக அந்த குறிப்பிட்ட பிரிவினர் சூர்யாவுக்கு எதிராக கடும் எதிப்புகளை பதிவு செய்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன், இந்த படம் வரும் மார்ச் மாதம் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்திற்கான எந்த ஒரு வரவேற்பும் இல்லாமல் இருப்பது பட குழுவினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு முன்பு முன்னணி நடிகர்கள் படம் திரைக்கு வர இருந்த காரணத்தினால் யாருடைய படமும் வெளியாகாத நேரம் எதற்கும் துணித்தவன் படத்தை வெளியிட்டு போட்டியின்றி வசூலை பெற்று விடலாம் என திட்டமிட்டு இருந்தது தயாரிப்பு நிறுவனம். ஆனால் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் அணைத்து மொழிகளில் புதிய படம் ஓன்று மார்ச் 11 அன்று வெளியாக இருப்பது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு போட்டியாக அமைத்துள்ளது.

இதனால் தியேட்டர்கள் முழுமையாக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மனைவி பேச்சை கேட்டு ஓடிடியில் தனது படத்தை சூர்யா வெளியிட்டு வந்ததால் அவரது ரசிகர்கள் ஓடிடியில் பார்த்து பழகிவிட்டதை தொடர்ந்து இனி சூர்யா படத்தை திரையரங்குகளில் பார்க்கும் ஆர்வம் அவர்களிடம் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மத்தியில் கடும் எதிப்பு இருந்து வந்த நிலையில்.

அந்த சமூக மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த படம் ஓடுமா என்பது சந்தேகம் எழுந்துள்ளதால், அந்த பகுதிகளில் உள்ள திரையரங்குகள் எதற்கும் துணித்தவன் படத்தை வெளியிட தயங்குவதாக கூறப்படுகிறது. எதற்கும் துணிந்தவன் படம் தொடர்பான பல அப்டேட் வெளியிட்டாலும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்றே கூறப்படுகிறது. மேலும் பிரீ ரிலீஸ் வியாபாரமும் எதிர்பார்த்த அளவு இல்லாததால், மனைவி ஜோதிகா பேச்சை கேட்டு ஓடிடியில் படத்தை வெளியிட்டு சூர்யா தனது மார்க்கெட்டை கணிசமாக இழந்துள்ளார் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் சூர்யா மீது கடும் கோபத்தில் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாக கூறப்படுகிறது.

இரவு பார்ட்டி…. ஒரே பப்பில் ஐஸ்வர்யா – தனுஷ் ..! இணைந்து விட்டார்களா பிரிந்த தம்பதியினர்..