இனிமேல் நோ தமிழ்.. ஒன்லி ஹிந்தி தான்.. சூர்யா – ஜோதிகா எடுத்த தீடிர் முடிவு.. வருத்தத்தில் சிவக்குமார்.

0
Follow on Google News

மும்பையை பூர்வீகமாக கொண்ட நடிகை ஜோதிகா அவருடைய சகோதரி நடிகை நக்மா மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் அவருடைய சகோதரி நக்மா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வந்தார், அந்த வகையில் தன்னுடைய சகோதரி நக்மா உதவியுடன் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த மிக குறுகிய காலத்தில் நடிகர் சூர்யாவை காதலிக்க தொடங்கினார் ஜோதிகா.

சூர்யா – ஜோதிகா இருவருடைய காதலுக்கு சூர்யாவின் தந்தை சிவக்குமார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு கட்டத்தில் மகனின் பிடிவாதத்தினால் சூர்யா – ஜோதிகா இவருடைய திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினார் சிவக்குமார். திருமணத்திற்கு பின்பும் கூட சிவகுமார் , சூர்யா, ஜோதிகா , கார்த்திக் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.

ஆனால், கூட்டு குடும்பத்தில் வாழ்வதற்கு ஜோதிகாவுக்கு விருப்பம் இல்லை என்றும், அதனால் கணவர், குழந்தைகளுடன் தன்னுடைய பூர்வீகமான மும்பையில் தனி குடித்தனம் சென்று செட்டிலாக வேண்டும் என்பதே நடிகை ஜோதிகாவின் நீண்ட கால திட்டமாக இருந்துள்ளது. அந்த வகையில் கணவர் சூர்யா சினிமாவில் சம்பாதிக்கும் பல கோடிகளை மும்பையில் முதலீடு செய்ய வைத்து வந்துள்ளார் ஜோதிகா.

அதன் அடிப்படையில் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் மும்பையில் முதலீடு செய்துள்ள சூர்யாவுக்கு அதன் மூலம் மாதம் 20 கோடி ரூபாய் வரை வருமானம் வருவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மேலும் மும்பையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார் சூர்யா – ஜோதிகா தம்பதியினர் நிரந்தரமாக மும்பையில் குடியேற திட்டமிட்டு, தற்பொழுது மும்பையில் புதிய வீடு வாங்கி அங்கேயே செட்டிலாகி உள்ளனர்.

ஹிந்தி சினிமாவில், ஒரு வித மாஃபியா உண்டு, அந்த மாஃபியா கும்பலை தாண்டி புதியதாக யாரும் இந்தி சினிமாவில் வளர முடியாது, ஜோதிகாவின் தாய் – தந்தை இருவரும் இந்தி சினிமா துறை பின்னணியில் உள்ளவர்கள், அந்த வகையில் இந்தி சினிமா மாஃபியா கும்பல் என்று கூறப்படும் அந்த குறிப்பிட்ட தரப்பினருடன் ஜோதிகா குடுப்பதினாருக்கு நெருக்கிய தொடர்பு உண்டு,

அந்த வகையில் தன்னுடைய கணவர் சூர்யாவை இந்தி படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இடம் பெற செய்ய வேண்டும் என்கிற திட்டத்துடன், இந்தி சினிமாவில் சூர்யாவை நடிக்க வைக்க கதை கேட்டு வரும் ஜோதிகா. மேலும் கணவர் சூர்யாவுக்கு இந்தியும் கற்று கொடுத்து வருகிறாராம் ஜோதிகா.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இருந்து ஹிந்தி சினிமாவுக்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி, இந்தி சினிமாவில் கிடைத்த வரவேற்பால் தமிழ் சினிமாவிற்கு குட் பை சொல்லிவிட்டு இந்தி சினிமாவில் மட்டும் நடித்து வந்தார், அதே போன்று சூர்யாவுக்கு இந்தி சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தால், தமிழ் சினிமா படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு, இந்தி சினிமாவில் தீவிர கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு திட்டத்திற்காக தான் சூர்யா – ஜோதிகா தம்பதியினர் மும்பையில் செட்டிலானதாகவும், மேலும் சூர்யாவின் சமீபகால நடவடிக்கையால் மிக பெரிய சோகத்தில் அவருடைய தந்தை சிவகுமார் இருந்து வருவதாக கூறப்படுகிறது.