விருமன் படத்தை ஓட வைக்க சூர்யாவின் தில்லாலங்கடி வேலை… மேடையில் போட்டுடைத்த முக்கிய பிரபலம்..!

0
Follow on Google News

இயக்குனர் முத்தையா இயக்கத்தில், நடிகர் கார்த்திக், இயக்குனர் சங்கர் மகள் அதிதி சங்கர் அறிமுகமாக நடித்துள்ள படம் விருமன். இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்துள்ளார், தற்பொழுது வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விருமன் படம், ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் வெளியான கொம்பன், மருது ,போன்ற படங்களின் கலவைதான் விருமன் என்கின்ற விமர்சனத்தை பெற்றுள்ளது.

மேலும் அரைச்ச மாவையே திரும்பத் திரும்ப அரைத்து கொண்டிருக்கும் இயக்குனர் முத்தையாவிடம் சரக்கு தீர்ந்து விட்டது என்கின்ற விமர்சனமும் எழுந்துள்ளது.மிக குறுகிய நேரமே இந்த படம் இருந்தாலும் ,பார்ப்பவர்களுக்கு இழுத்தடிப்பு செய்வது போல் கதையின் நீளம் ஜவ்வாக இழுக்கிறது. இது படம் பார்ப்பவர்களை விட்டா போதும் என்கின்ற நிலையில், எரிச்சல் ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் பார்த்தவர்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனத்தை பெற்றிருந்தாலும்,வசூல் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் படம் பார்த்தவர்கள் ஏற்கனவே எடுத்த படம் தான், ஆவரேஜ் மூவி என்றும், படம் சரியில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தாலும், இந்த படம் வசூல் ரீதியாக எப்படி வெற்றி பெற்றுள்ளது என்பதை குறித்து பலர் தலையை பிடித்துக் கொண்டிருக்கையில்.

இது குறித்து சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சி மேடையில் சினிமா பிரபலம் ஒருவர் போட்டு உடைத்துள்ளார். அதாவது கடந்த மூன்று நாட்களுக்கு முன் வெளியான படத்தை பார்ப்பதற்கு மதுரையில் சுமார் 50-க்கு மேற்பட்டவர்களுக்கு பணம் கொடுத்து, அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து, முதல் ஷோ படத்திற்கு அவர்களை அழைத்து வந்து படம் பார்க்க வைத்துள்ளனர்.

படத்தின் ரிவ்யூ கேட்க திரையரங்கு முன்பு அனைத்து ஊடகங்களையும் வரவழைத்து, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து காசு கொடுத்து வரவழைத்து படம் பார்த்தவர்களை, விருமன் படம் ஆக…… ஓஹோ….. என்று புகழ வைத்து கருத்து சொல்ல வைத்துள்ளார்கள். இப்படித்தான் விருமன் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது போல் ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளார்கள்.

இதன் காரணமாக, இந்த ரிவிவுகளை நம்பி திரைக்கு சென்ற மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இனிவரும் காலங்களில் ரிவியூகளை நம்பி படத்துக்கு போக கூடாது என்கின்ற முடிவுக்கு மக்கள் வந்துள்ளார்கள். எப்படி தயாரிப்பாளர் சூர்யா தரப்பு மக்களை ஏமாற்றி திரைக்கு வர வைத்து லாபம் பார்த்து விட்டது என்கிறது சினிமா வட்டாரங்கள்.

வருமான வரித்துறை வலையில் ஜோதிகா… காப்பாற்ற துடிக்கும் கணவர் சூர்யா என்ன செய்துள்ளார் தெரியுமா.?