சூரியை நம்ப வைத்து கழுத்தை அறுந்த வெற்றிமாறன்.. சூரியின் பரிதாப நிலைமை என்ன தெரியுமா.?

0
Follow on Google News

மதுரை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த நடிகர் சூரி, சினிமா ஆசையில் சென்னை வந்து பசி பட்டினியால் கடுமையாக போராடிய சூரி சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர், வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம்பெற்ற புரோட்டா காமெடியில் அவர் நடித்த நகைச்சுவை காட்சி மிக பிரபலமானது. இதனை தொடர்ந்து புரோட்டா சூரி என அடைமொழியுடன் படவாய்ப்புகள் குவிந்தது, தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகரானார் சூரி.

வருடத்துக்கு 20 முதல் 30 படங்கள் வரை நடித்து வந்த நடிகர் சூரி கோடி கோடியாக பணத்தை சம்பாரித்தார். நன்றாக சென்ற சூரி சினிமா வாழ்க்கையில் ஏழரை சனி இயக்குனர் வெற்றி மாறன் உருவத்தில் வந்தது என்றும் சொல்லும் அளவுக்கு, நடிகர் சூரியிடம் ஆசை வார்த்தைகளை பேசி, நீ காமெடி நடிகர் கிடையாது, நீ ஹீரோவாக நடிக்க வேண்டியவர். வருடத்துக்கு மூன்று படம் ஹீரோவாக நடித்தால் எவ்வளவு சம்பளம் கிடைக்கும் தெரியுமா என ஆசைகளை தூண்டிவிட்டுள்ளார் வெற்றிமாறன்.

இதற்கு முன்பு எத்தனையோ இயக்குனர்கள் ஹீரோவாக நடிக்க சூரியை அணுகிய போது, அவர்கள் விரித்த வலையில் சிக்காமல் தப்பித்து கொண்ட நடிகர் சூரி, இயக்குனர் வெற்றிமாறனின் ஆசை வார்த்தைகளை நம்பி, அவர் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க சம்மதம் தெரிவித்து வெற்றிமாறன் விரித்த வலையில் வசமாக சிக்கி கொண்டார். விடுதலை என்கிற படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இயக்குனர் அறிவுறுத்தலின் படி தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றினார் சூரி.

சுமார் 40 நாட்கள் வரை நடிகர் சூரியை வைத்து படப்பிடிப்பு நடத்திய வெற்றிமாறன், இந்த 40 நாட்களும் தொடர்ந்து நடைபெற்று இருந்தால் பரவாயில்லை, ஆனால் இடையில் இடைவெளி விட்டு படப்பிடிப்பு நடத்தி சூரி மற்ற படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை பயன்படுத்த முடியாதவாறு செய்து விட்டார் வெற்றிமாறன், இருந்தும் இந்த படம் வெளியான தனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்து மற்ற பட வாய்ப்புகளை தவிர்த்து வந்தார் சூரி.

ஆனால் விசாரணை படத்தில் திடீரென்று சில மாற்றங்களை கொண்டு வந்த இயக்குனர் வெற்றிமாறன். அந்த படத்தில் விஜய் சேதுபதியை உள்ளே நுழைத்தார், விஜய் சேதுபதியிடம் 20 நாட்கள் கால்ஷீட் வாங்கி படப்பிடிப்பும் நடந்து முடிந்தது. ஆனால் இன்னும் விஜய் சேதுபதியின் படப்பிடிப்பு முடியவில்லை, மேலும் 20 நாட்கள் கால்சீட் கேட்டுள்ளார் வெற்றிமாறன். இது சூரியன் வயிற்றில் புளியை கரைத்துள்ளது என்றே சொல்லலாம்.

சூரி 40 நாட்கள்தான் கால்சீட் கொடுத்த விசாரணை படத்தில் நடித்த நிலையில் விஜய்சேதுபதியும் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் இந்த படத்தின் ஹீரோ யார்.? விஜய்சேதுபதியா.? அல்லது நானா.? என்கிற குழப்பம் சூரிக்கு வந்துள்ளது. ஒருவேளை சூரி நடித்த காட்சிகள் பல வெட்டி எடுக்கப்பட்டு, விட்டு விஜய்சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்கின்ற அச்சமும் சூரிக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சூரி நடித்த பல காட்சிகள் விசாரணை படத்தில் நீக்கிவிட்டு விஜய் சேதுபதிக்கு முக்கியதுவம் கொடுக்கும் வகையில் காட்சிகளை வெற்றிமாறன் மாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் ஹீரோ ஆசை காட்டி மோசம் செய்துவிட்டார் வெற்றிமாறன் என்கிற கடும் மன உளைச்சலில் நடிகர் சூரி இருந்து வருவதாக கூறப்படுகிறது, மேலும் நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டாரே, என வெற்றிமாறன் மீது நடிகர் சூரி செம டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது. வருடத்திற்கு 20 முதல் 30 படங்கள் காமெடியில் நடித்து கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டிருந்த சூரிக்கு ஆசை வார்த்தைகள் கூறி கடந்த மூன்று வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் செய்துவிட்டார் வெற்றிமாறன்.

கடந்த மூன்று வருடங்களில் சூரிக்கு வந்த பட வாய்ப்புகள் மற்ற காமெடி நடிகர்களுக்கு சென்றுவிட்ட நிலையில். நடிகர் சூரி தற்போது மீண்டும் காமெடி வேடத்தில் நடிக்க தொடங்கியுள்ளார், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போன்று கடந்து மூன்று வருடங்களில் பல கோடி சம்பாரித்திருக்க வேண்டியவர் நடிகர் சூரி, பாவம்.. வெற்றிமாறன் பேச்சை கேட்டு மோசம் போகி விட்டார் சூரி என சினிமா துறையினர் பரிதாபப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் அதிரடி… சினிமாவில் இனி நடிப்பதில்லை … தீடிர் அமெரிக்க பயணம்..! என்ன காரணம் தெரியுமா.?