காதலை சொன்ன எஸ்.ஜே. சூர்யா… ஆஸ்திரியாவில் நடிகை பிரியா பவானி சங்கர் அஜால் குஜால்…

0
Follow on Google News

நடிகை பிரியா பவானி சங்கர், முதலில் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அந்த சீரியல் நல்ல வரவேற்பை‌ பெற்ற நிலையில், அதன் பின் வெள்ளித்திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

இவர் நடித்த முதல் படமே நல்ல வெற்றியை கொடுத்ததால், அதன் பின் பல படங்களில் நடிக்க துவங்கி, இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாகவும் இவர் மாறியுள்ளார். இந்நிலையில்தான் பிரியா பவானி சங்கர் வெளிநாட்டில் ரகசியமாக திருமணம் செய்து, வாழ்க்கை நடத்தி வருவதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. திரைத்துறைக்கு வந்த பிறகு, பிரியா பவானி சங்கரின் அழகில் மயங்கி, இவருக்கு சில ஹீரோக்கள் Propose-ம் செய்து இருக்கின்றனர்.

குறிப்பாக இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக சுற்றும் S.J சூர்யாவுடன் இணைந்து, பிரியா பவானி சங்கர் மான்ஸ்டர் என்ற படத்தில் நடித்திருந்தார். அப்போது S.J சூர்யாவுக்கு பிரியா பவானி சங்கர் மீது காதல் வர, அவரிடம் நேரடியாகவே சென்று, நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டிருக்கிறார்.

அதற்கு பிரியா பவானி சங்கர், S.J சூர்யாவின் முகத்தில் அடித்தாற்போலவே, உங்கள் வயது என்ன, என் வயது என்ன என கேள்வி கேட்டு, புரபோசலை ரிஜெக்ட் செய்திருக்கிறார். இப்படி பல புரபோசல்களை இவர் ரிஜெக்ட் செய்தாலும், ஒரே ஒரு ப்ரோபோசலை மட்டும் Accept செய்துள்ளார். பிரியா பவானி சங்கர், தான் நடிகையாக ஆவதற்கு முன்பே ராஜவேல் என்பவரை காதலித்திருக்கிறார். அதுவும் 18 வயதில் தொடங்கிய இவர்களுடைய காதல் இப்போது வரையிலும் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது.

சிலர் சினிமாவில் பெரிய ஹீரோயினாக என்ட்ரியான பிறகு, தனது ஸ்கூல் மற்றும் காலேஜ் படிக்கும் போது ஏற்பட்ட காதலை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு, பணத்திற்காகவும், பெயர் மற்றும் புகழுக்காகவும், ஏதாவது பெரிய ஹீரோ அல்லது கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என பலரையும் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் பிரியா பவானி சங்கர் அப்படி இல்லை, அவர் கல்லூரி படிக்கும் போது ராஜ்வேல் என்ற ஒருவரை காதலித்து இருக்கிறார்.

தற்போதும் அவரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் முடிவெடுத்து இருக்கிறார். ஆனால் பொதுவாகவே சினிமா துறையில் திருமணம் செய்துவிட்டாலே பட வாய்ப்புகள் குறைந்து விடும் என்பதால், இவர் திருமணத்தை தள்ளிப் போட்டு கொண்டே இருக்கிறார். இருந்தாலும் அடிக்கடி தன்னுடைய காதலனுடன் ஊர் சுற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ள பிரியா பவானி சங்கர்,

ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் தனது காதலரான ராஜ் வேலை ரகசியமாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார் என்ற தகவலை சினிமா விமர்சகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு படத்தில் நடித்து முடித்தவுடன் இவர் சிட்டாக பறந்து ஆஸ்திரேலியா சென்று விடுகிறார். அப்படித்தான் விஷால் நடிப்பில் வெளியான ரத்தினம் படத்தின் பிரமோஷனுக்கும் இவர் வரவில்லை, அதேபோல் இன்று கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தின் பிரமோஷனுக்கும் இவர் வரவில்லை. இதை எல்லாம் டீலில் விட்டுவிட்டு, பிரியா பவானி சங்கர், தற்போது வெளிநாட்டில் தன் காதலருடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வருகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.