ஜோதிகாவை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் சிவகுமார் குடும்பம்… ஜோதிகா வாழ்கிற வாழ்க்கையே வேறு..

0
Follow on Google News

சூர்யா ஜோதிகா தமிழ் சினிமாவில் வெற்றிகரமான தம்பதிகள் என்பது அனைவருக்கும் தெரியும். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் காதலிக்க துவங்கிய இந்த ஜோடி, சில வருடங்களுக்கு பின்னர் இரு விட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சூர்யா ஜோதிகா தம்பதியினருக்கு தியா தேவ் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பிறகு குடும்பம் குழந்தை என்று செட்டிலாகியதால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

பின்னர் சில வருடங்களுக்குப் பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். மேலும், சமீபத்தில் மாதவனுடன் சைத்தான் படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவ்வாறு பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் படு பிஸியாக நடித்து வரும் ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு, குடும்பத்துடன் மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார்.

நடிகர் சூர்யா தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வரும் சூழலில் ஜோதிகாவுடன் மும்பையில் செட்டில் ஆனது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் சூர்யா ஜோதிகாவுக்கு எதிரான விமர்சனங்களை முன் வைத்தனர். இப்படியான நிலைமையில், சமீபத்தில் நடந்து முடிந்த பிலிம்பேர் விருது விழா நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா அணிந்திருந்த உடை பெரிய விவாத பொருளாக மாறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சோசியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் ஜோதிகாவை மட்டும் இன்றி சிவகுமார் குடும்பத்தையே சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். இந்த சர்ச்சை குறித்து பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் பேசுகையில், “பழம்பெரும் நடிகராக சிவகுமாருக்கு சினிமா துறையை பற்றி நன்றாகவே தெரியும் என்பதால், சூர்யா நடிகை ஜோதிகாவின் காதலிக்கிறார் என்று தெரிந்ததும் நடிகையை ஒருபோதும் மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

ஆனால் சூர்யா விடாப்பிடியாக இருந்ததால் வேறு வழி இல்லாமல் சிவக்குமார் ஜோதிகாவை திருமணம் செய்து வைத்தார். மூத்த மகன் தான் சொல் பேச்சை கேட்காமல் நடிகையை திருமணம் செய்து கொண்டான். இளைய மகனும் அப்படி செய்த விட கூடாது என்ற பயத்தில், கார்த்திக்கு தங்கள் சொந்தத்திலேயே பொண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டார்.

சூர்யா ஜோதிகா இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து இருந்தாலும் சிவகுமாரின் கட்டளைப்படி, கல்யாணத்திற்கு பிறகு ஜோதிகா நடிப்பதில் இருந்து விலகியே இருந்தார்.மேலும் இத்தனை வருடங்களாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த ஜோதிகா, இனிமேல் மாமனாரின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பாமல் குழந்தைகளின் படிப்பை காரணம் காட்டி குடும்பத்தோடும் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் படங்களிலும் மும்பரமாக நடித்து வருகிறார். ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிப்பது சிவகுமாருக்கு பிடிக்காமல் வீட்டில் பிரச்சனை வந்ததாக எனக்கு தகவல் வந்தது என தெரிவித்த தமிழா தமிழா பாண்டியன். தற்போது ஜோதிகா தமிழ்நாட்டில் இருந்து வெளியேறி மும்பை வாழ்க்கைக்கு அடிமையாகி விட்டார். அதன் வெளிப்பாடு தான் விருது விழா நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த உடையில் தெரிந்தது. நீண்ட நாட்களாக சூர்யாவின் குடும்பத்திற்காக கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வந்த ஜோதிகா, தற்போது தனக்கு பிடித்த மாதிரி மும்பை வாழ்க்கைக்கு மாறிவிட்டார் என தமிழா தமிழா பாண்டியன் பேட்டியில் கூறியுள்ளார்.