குடும்பத்தில் நடந்த உச்சக்கட்ட பிரச்சனை… ஜோதிகா எடுத்த அதிரடி முடிவு… என்ன பிரச்சனை நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சூர்யா – நடிகை ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். நடிகை நக்மா தங்கையான ஜோதிகா, வாலி படத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார், இரண்டாவது படம் நடிகர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் அதனை தொடர்ந்து உயிரிலே கலந்து படத்தில் நடித்தார், ஆனால் அப்போது சூர்யா சாதாரண நடிகராகவும், ஜோதிகா தமிழ் சினிமாவின் புதுமுகமாக இருந்த காலம், என்பதால் இருவரும் காதலில் விழவில்லை.

காக்க காக்க படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது இருவருக்கும் காதல் பற்றி கொண்டது, இதன் பின்பு இருவரும் அடிக்கடியில் தனியாக சந்தித்து தங்கள் காதலை வளர்த்து கொண்டனர். மேலும் தங்களின் காதலை வளர்க்க எதுவாக இருவரும் அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் ஜோடியாக நடித்தனர், இவர்களின் காதலுக்கு சூர்யாவின் தந்தை சிவகுமார் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார், இருந்தும் சூர்யா – ஜோதிகா இருவரும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர்.

சினிமா நடிகையை மருமகளாக ஏற்க மனமில்லாமல் இருந்த சிவகுமாரை ஒரு வழியாக சமாதானம் செய்து திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்பு சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்தினார் ஜோதிகா, இதனால் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. ஆனால் திருமணம் முடிந்து 8 வருடங்களுக்கு பின்பு மீண்டும் ஜோதிகா சினிமாவில் நடிக்க முடிவு செய்த போது குடும்பத்தில் பிரச்சனை உருவெடுத்தது.

மாமனார் சிவகுமார் மற்றும் மாமியார் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தது. இருந்தும் பெண்களுக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரம் என்று, 36 வயதினிலே படத்தில் நடித்தார் ஜோதிகா, அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கிய ஜோதிகா, அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் தெரிவிக்க, அந்த கருத்துக்கு நடிகர் சூர்யா ஆதரவு தெரிவிக்க, இதனால் சிவக்குமார் குடும்பம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இப்படி தொடர்ந்து ஜோதிகாவால் சிவகுமார் குடும்பம் கடும் சர்ச்சையில் சிக்கி வந்த நிலையில், சமீபத்தில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க முக்கிய காரணமாக இருந்தது ஜோதிகா தான் என்றும், பாலா குணம் அறிந்து அவருடைய இயக்கத்தில் மீண்டும் நடிப்பதை தவிர்த்து வந்துள்ளார், ஆனால் சூர்யா உடன் இணைந்து நடிக்க தனக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக, கணவர் சூர்யாவை நச்சரித்து பாலா இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்ல வைத்தவர் ஜோதிகா என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது பாலா – சூர்யா நடிக்கும் படம் இருவருக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக பாதியிலே நிற்கிறது, பாதி படம் எடுக்கப்பட்ட நிலையில், ஒரு சில விஷயத்தில் பாலா பிடிவாதமாக இருப்பதால், படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, இதனால் படத்தின் தயாரிப்பாளரான சூர்யாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் சிவகுமார் குடும்பத்தில் பிரச்சனையாக உருவெடுத்ததாக கூறப்படுகிறது.

தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக சூர்யாவையும் சிக்கலில் சிக்க வைத்து விட்டார் ஜோதிகா என சிவகுமார் குடும்பத்தினர் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனது குடும்பத்தினரிடம் இனிமேல் நான் சினிமாவில் நடிக்க மாட்டேன், தற்பொழுது பாலா படத்தில் இருந்தும் விலகி கொள்கிறேன் என இனிமேல் சினிமாவில் நடிப்பதில்லை என ஜோதிகா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

செலவுக்கு கூட பணம் இல்லை… சாப்பாட்டுக்கு கஸ்தூரி ராஜா என்ன செய்கிறார் தெரியுமா.?