சிவகுமார் குடும்பத்தை உடைத்து ஜோதிகா வெளியேற காரணமாக இருந்த முக்கிய பிரபலம் யார் தெரியுமா.?

0
Follow on Google News

திருமணத்திற்கு முடிந்து சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, நீண்ட இடைவேளைக்கு பின்பு 36 வயதினிலே படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கினார் ஜோதிகா. இது மாமனார் சிவகுமாருக்கு மீண்டும் ஜோதிகா சினிமாவில் நடிப்பதில் விருப்பமில்லை என கூறப்பட்டது. இருந்தும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஜோதிகா, அவருடைய சில பேச்சுக்களால் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார்.

மேலும் 2டி தயாரிப்பு என்கின்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து உருவாக்கி பல படங்களை தயாரித்து வந்தனர். இவர்கள் தயாரிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்திய படம் ஜெய் பீம். அதன் பின்பு சூர்யா- ஜோதிகா தயாரிப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் தொடங்கி அந்த படம் பல்வேறு பிரச்சனைகளால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க முக்கிய காரணமாக இருந்தது ஜோதிகா தான் என்றும், பாலா குணம் அறிந்து அவருடைய இயக்கத்தில் மீண்டும் நடிப்பதை தவிர்த்து வந்துள்ளார், ஆனால் சூர்யா உடன் இணைந்து நடிக்க தனக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக, கணவர் சூர்யாவை நச்சரித்து பாலா இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்ல வைத்தவர் ஜோதிகா என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது பாலா – சூர்யா நடிக்கும் படம் இருவருக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக பாதியிலே நிற்கிறது, பாதி படம் எடுக்கப்பட்ட நிலையில், ஒரு சில விஷயத்தில் பாலா பிடிவாதமாக இருப்பதால், படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, இதனால் படத்தின் தயாரிப்பாளரான சூர்யாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் சிவகுமார் குடும்பத்தில் பிரச்சனையாக உருவெடுத்ததாக கூறப்படுகிறது.

தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக சூர்யாவையும் சிக்கலில் சிக்க வைத்து விட்டார் ஜோதிகா என சிவகுமார் குடும்பத்தினர் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனது குடும்பத்தினரிடம் இனிமேல் நான் சினிமாவில் நடிக்க மாட்டேன், தற்பொழுது பாலா படத்தில் இருந்தும் விலகி கொள்கிறேன் என இனிமேல் சினிமாவில் நடிப்பதில்லை என ஜோதிகா தெரிவித்ததாக கூறப்பட்டது.

இதன் பின்பே வணங்கான் படம் ட்ரோப் ஆவதற்கு முன்பே அந்த படத்தில் இருந்து ஜோதிகா விலகுவதாக செய்திகள் வெளியானது. ஏற்கனவே ஜோதிகா சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தது கணவர் சூர்யா சப்போர்ட்டாக இருந்தாலும் கூட குடும்பத்தில் மற்றவர்கள் தொடர்ந்து ஜோதிகா சினிமாவில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது, அடிக்கடி சிறு சிறு பிரச்சனையாக இருந்தது, அது வணங்கான் படத்தின் மூலம் மிக பெரிய பிரச்ச்னையாக உருவெடுத்துள்ளது.

இதன் பின்பே கணவர், குழந்தைகளுடன் மும்பைக்கு தனி குடித்தனம் போக வேண்டும் என்கிற முடிவுக்கு ஜோதிகா வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே மனைவி வற்புறுத்தலின் பேரில் மும்பையில் சுமார் 200 கோடி முதலீடு செய்துள்ள நடிகர் சூர்யா, அதன் மூலம் மாதம் 20 கோடி லாபம் சம்பாரித்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி ஜோதிகா – சூர்யா இருவரும் மும்பை செல்வதை தவிர்க்க முடியவில்லை.

இதையே ஒரு முக்கிய காரணமாக வைத்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலாகியுள்ள ஜோதிகா, வணங்கான் பட பிரச்ச்னையின் போது இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என தெரிவித்தவர், தற்பொழுது தமிழ் தவிர்த்து பிற மொழி படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் ஜோதிகா சினிமாவில் நடிப்பது தொடர்பாக ஏற்கனவே குடும்பத்தில் பிரச்சனை இருங்தாலும் கூட பாலாவால் வணங்கான் படத்தில் ஏற்பட்ட பிரட்சனை தான் ஜோதிகா மும்பைக்கு தனி குடித்தனம் செல்வதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.