எஸ்ஜே சூர்யாவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் சிவகுமார் உறவினர்.. மிக பெரிய சிக்கலில் எஸ்ஜே சூர்யா..

0
Follow on Google News

நடிகர் சிவகுமார் உறவினரும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் மிஸ்டர் லோக்கல் இந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் நடிக்க 15கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது என்றும், ஆனால் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், மீதம் சம்பளத்தொகை மற்றும் அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்த உத்தரவிடக்கோரி ஞானவேல்ராஜா மீது வழக்கு தொடுத்தார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நீதிமன்றம் செல்வதற்கு முன்பு சிவகார்த்திகேயன் டிடிஎஸ் தொகை குறித்து பலமுறை ஞானவேல்ராஜவிடம் கேட்டுள்ளார், ஆனால் அவர்கள் தரப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தில் அடைந்த நஷ்டம் குறித்து பேசியுள்ளனர். அதற்கு படத்தில் அதிகம் லாபம் வந்தால் அந்த படத்தில் நடித்த நடிகருக்கு லாபத்தில் ஒரு பகுதியை பிரித்து தருவீர்களா என்று சிவகார்த்திகேயன் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஞானவேல்ராஜா தரப்பில் இருந்து சிவகார்த்திகேயனை மிக இழிவாக பேசி, அவமானப்படுத்தப்பட்டார் சிவகார்த்திகேயன் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த பஞ்சாயத்தை நடிகர் சங்கம் அல்லது தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று புகார் கொடுங்க, அங்க வைத்து பேசி கொள்வோம் என ஞானவேல்ராஜா திமிராக பேசியதாக கூறப்படுகிறது. நடிகர் சிவகுமார் குடும்பத்தின் நெருங்கிய உறவினர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என்றும், தற்பொழுது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் சிவகுமார் குடும்பத்தினர் அதிகாரமிக்கவராக செயல்பட்டு வருவதால் தனக்கு சாதகமாக இரண்டு சங்கங்களும் செயல்படும் என்பதால் தான் ஞானவேல்ராஜா தரப்பினர் திமிராக பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால், நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தால் தனக்கு நியாயம் கிடைக்காது என்றும், மேலும் தன்னை அவமானப்படுத்தியவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என முடிவு செய்து நீதிமன்றத்தில் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக வழக்கு கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன் என அப்போது கூறப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது நடிகர் எஸ்.ஜே. சூர்யாவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

நடிகர் எஸ் ஜே சூர்யா தயாரிப்பளார் ஞானவேல்ராஜா படத்தில் நடிப்பதற்காக சில வருடங்களுக்கு முன்பு அட்வான்ஸ் தொகையை வாங்கியுள்ளார். ஆனால் அந்த படம் தொடங்கப்படாமலே இருந்துள்ளது. இந்த நிலையில் தற்பொழுது சூர்யாவிடம் தன்னிடம் வாங்கி அட்வான்ஸ் தொகைக்கு தற்பொழுது படம் நடிக்க நெருக்கடி கொடுத்து வருகிறார் ஞானவேல் ராஜா.

ஆனால் எஸ்.ஜே சூர்யா தற்போது தனக்கு இருக்கும் மார்க்கெட்டில் என்ன சம்பளமோ அந்த சம்பளத்தை கேட்டுள்ளார். அதற்கு ஞானவேல் ராஜா நான் உங்களிடம் கொடுத்த அட்வான்ஸ் தொகையின் போது உங்களுக்கு இருந்த மார்க்கெட் படி என்ன சம்பளம் பேசப்பட்டதோ, அதே சம்பளத்தை தான் தன்னால் கொடுக்க முடியும் என்று தெரிவிக்க.

அதற்கு எஸ் ஜே சூர்யா அப்படியானால் நீங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பித் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு ஞானவேல் ராஜா அப்படியானால் இத்தனை வருடங்களுக்கு நான் கொடுத்த பணத்திற்கு வட்டி போட்டு எனக்கு தாருங்கள் என்று கடும் நெருக்கடி கொடுத்து வருவதாகவும். மேலும் இந்த பஞ்சாயத்து தயாரிப்பாளர் சங்கம் கவனத்திற்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது