சிவகார்த்திகேயன் செய்த தில்லாலங்கடி வேலை… இப்ப தெரியுதா இவர் இப்படி ஹீரோவாக தாக்கு பிடிக்கிறார் என்று.?

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்கமல் தயாரிப்பில், டைரக்டர் ராஜ்குமார் இயக்கத்தில், அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இந்த டைரக்டரும் தொடர்ச்சியாக பிளாப் கொடுத்த டிரைக்ட்டர் தான். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனும் தொடர்ச்சியாக மாவீரன், அயலான் என பிளாப் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். இதனால் இந்த பிளாப் கூட்டணி இணைந்து அமரன் என்ற மிகப்பெரிய தோல்வி படத்தை இயக்கி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஆனால் சிவகார்த்திகேயனின், படங்கள் பிளாப் ஆனாலும், அதை எப்படி ஹிட் படம் போல் காண்பிக்க வேண்டும் என ஒரு பக்காவான கேடி வேலை ஒன்றை தொடர்ச்சியாக இவர் செய்து கொண்டிருப்பதும் அம்பலமாகி இருக்கிறது. அதாவது இவருக்கு என, தனியாக ஒரு இணைய கூலிப்படையையே வைத்திருக்கிறார். அந்த கூலிப்படையினர் சிவகார்த்திகேயன் என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்வார்கள்.

அவர்கள்தான் சிவகார்த்திகேயனுக்கு பெரிய பில்டப்பையும் கொடுத்து வைத்திருக்கிறார்கள். அவரை ஒரு வெற்றி பட நாயகன் மாதிரியான பிம்பத்தை உருவாக்கி காண்பிப்பதற்காக, எந்த எல்லைக்கும் வேண்டுமானாலும் அவர்கள் செல்வதாகவும் பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி பகிர் கிளப்பியுள்ளார். அதோடு இந்த மாதிரியான ஐடிவிங் கூலிப்படைகள் பல நடிகர்களுக்கும் இருக்கும்,

ஆனால் சிவகார்த்திகேயன் வைத்திருக்கும் இந்த ஐடி விங் கூலிப்படைகள், பொய்யை உண்மையைப் போல் நிலை நிறுத்துவதில் கில்லாடிகள் என்றும் கூறியிருக்கிறார். அப்படித்தான் அயலான் படம் கூட மிகப் பெரிய தோல்வி படம் தான், ஆனால் சமூக ஊடகங்களில் போய் பார்த்தால், அயலான் படம் 500 கோடி ரூபாய் வசூலித்ததாக பில்டப் பண்ணி வைத்திருப்பார்கள்.

அதோடு இந்த படத்திற்கு சிறுவர்கள் முழுவதும் அடிமையாகி விட்டனர், சிறுவர்களின் மனதில் இடத்தை பிடித்தார் சிவகார்த்திகேயன் என, திரும்பும் திசை எல்லாம் அயலான் படத்தைப் பற்றியே பேசி, இந்த படத்திற்கு பெரிய பில்டப் கொடுத்து வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான வெட்டி பில்டப்பை எல்லாம் வைத்து கொண்டு தான் சிவகார்த்திகேயனின் வண்டியே ஓடிக்கிட்டு இருக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இப்படி தான் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை பெரிய ஸ்டார் ஹீரோவாக காண்பிப்பதற்கு, ஒரு கூலிப்படைக்கே தீனி போட்டு வளர்த்து வருவது அம்பலம் ஆகியுள்ளது. மேலும் இதோடு மட்டுமல்லாமல் இதற்கு முன்பு கூட இசையமைப்பாளர் டி. இமானின் பிரச்சனை வந்த பொழுதும், சிவகார்த்திகேயனை பற்றி டி இமான் பேசிய பேச்சுகள் காட்டுத் தீயாய் இணையத்தை ஆக்கிரமித்தது.

அப்போதும் சிவகார்த்திகேயனின் ஐடி விங் களத்தில் இறங்கி, சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார்கள். இப்படி சிவகார்த்திகேயனுக்கு ஏதோ ஒன்று என்றால், தனது ஐடி விங் பலத்தை வைத்துக்கொண்டு அந்த விஷயத்தில் இருந்து நைசாக இவர் தப்பி விடுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.