கடன்காரர்களுக்கு டிமிக்கி கொடுத்து வரும் சிவகார்த்திகேயன்.. வசமாக சிக்கிய நடிகர் சூரி…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஆங்கர் ஆக கரியரை தொடங்கிய சிவகார்த்திகேயன், இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளர்ச்சி அடைந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பாடலாசிரியர் தயாரிப்பாளர் என பல்வேறு அவதாரம் எடுத்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் சமீபகாலமாக கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து வரும் நிலையில் அதில் தற்பொழுது அவருடைய நண்பரான சூரி சிக்கியுள்ளார்.

பொதுவாகவே சினிமாவில் ஒரு படம் நன்றாக ஓடி அதிக வசூலை குவித்தால் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள. ஆனால் ஒரு படம் போடாமல் நஷ்டம் அடைந்தால் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு தான் பெரிய தலைவலி.

அந்த வகையில், எஸ் கே ப்ரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் சிவகார்த்திகேயன், வரிசையாக பல்வேறு படங்களை தயாரித்தார். சில படங்கள் சரியாக ஓடாமல் வசூலில் பலத்த அடி வாங்கவே நஷ்டம் அடைந்தார். ஹீரோவாக நடித்து பல கோடிகளை அருமையாக சம்பாதித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் ஆற்றில் ஒரு கால் சேட்டில் ஒரு கால் வைத்த கதையாக தயாரிப்பில் இறங்கி பல கோடி கடனாளியாக மாறியதுதான் மிச்சம்.

மேலும், அவர் கடனை அடைக்க முடியாமல் திணறியதால் அவரது ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் பஞ்சாயத்து நடந்தது. அப்படி பிரச்சினை ஏற்படும் சமயங்களில் தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்தோ அல்லது கடன் வாங்கிக் கொடுத்தோ அப்போதைக்கு அந்த பிரச்சனையை தீர்த்து விட்டு படத்தை ரிலீஸ் செய்வார். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளரிடம் உங்களுக்கு கால்ஷீட் கொடுக்கிறேன் என்று சொல்லி பணத்தை வாங்கி கடனை அடைப்பார்.

அதன் பிறகு அந்த தயாரிப்பாளர் இடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக சம்பளம் இல்லாமல் படத்தை நடித்துக் கொடுப்பார். கடைசியாக வெளியான அயலான் படத்திற்கு கூட சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வாங்கிய கடனை அடைக்க கடன் மேல் கடன் வாங்கி நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறார். அயலான் படத்தோடு அவர் வாங்கிய முழு கடனையும் அடைத்து விட்டதாக செய்திகள் வெளிவந்தன.

ஆனால் அயலான் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. மேலும் வசூலில் சரிவை சந்தித்தது. இதனால அயலான் பாடத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்தனர். அதே சமயம் ஜிஎஸ்டி தொகை எட்டு கோடி ரூபாய் சிவகார்த்திகேயன் கொடுக்க வேண்டி இருக்கிறது. இது குறித்து விநியோகஸ்தர்கள் சங்கம் சிவகார்த்திகேயனிடம் பலமுறை கேட்டோம் அவர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

இப்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் சூரி நடித்துள்ள கொட்டு காளி திரைப்படம் வருகிற 23ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. சூரிய முக்கிய இடத்தில் நடித்துள்ள இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சர்வதேச விருதுகளை வாங்கி இருக்கிறது என்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பாக்கி ஏற்று கோடி ரூபாய் தொகையை கொடுத்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என்று விநியோகஸ்தர்கள் சங்கம் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். விடுதலை, கருடன் என தனது கரியரில் அருமையாக கலக்கிக் கொண்டிருக்கும் சூரி, நண்பன் சிவகார்த்திகேயன் வாங்கிய கடனுக்கு தான் நடித்த படம் சிக்கி கொண்டதே என மிக பெரிய வருத்தத்தில் சூரி இருப்பதாக கூறப்படுகிறது.