வாங்கிய கடனை கொடுக்காமல் டிமிக்கி கொடுக்கும் சிவகார்த்திகேயன்.. இறுக்கி பிடித்த கடன் கொடுத்தவர்கள்..

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயன் சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, தயாரித்த படங்கள் பல தோல்வி அடைந்து மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால் கடன் வாங்கி படம் எடுத்து மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தி அதனால் சுமார் 100 வரை கோடி கடன் ஏற்பட்டது. கடன் அடைக்கமால் சிவகார்த்திகேயன் படத்தை வெளியிட மாட்டோம் என கடன் கொடுத்தவர்கள் பிரச்சனை செய்தனர்.

இதனை தொடர்ந்து கடன் பெற்றவர்களிடம் நடந்த பேச்சுவார்த்தையில். தன்னுடைய ஒவ்வொரு படம் ரிலீஸ்ன் போது சுமார் 25 கோடி ரூபாய் விதம் நான்கு தவணையில் 100 கோடி ரூபாய் கடனை திருப்பி கொடுத்து விடுவதாக உறுதியளித்துள்ளார் சிவகார்த்திகேயன். அதன் அடிப்படையில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படம் வெளியான போது முதல் தவணையாக 25 கோடி ரூபாயை கொடுத்துள்ளார்.

ஆனால் அதன் பின்பு அவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான், பிரின்ஸ் போன்ற பட ரிலீஸ்ன் போது, ஏற்கனவே கடன் வாங்கியவர்களிடம் செய்த ஒப்பந்தம் படி நடந்து கொள்ளவில்லை சிவகார்த்திகேயன். இதனால் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்திய கூட்டமைப்பு, சிவகார்த்திகேயனிடம் இந்த வருடத்துக்குள் பாக்கி இருக்கும் மூன்று தவணை பணம் 75 கோடியை கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் தவணை முறையில் வாங்கிய கடனை அடைப்பதாக உத்தரவாதம் கொடுத்த சிவகார்த்திகேயன் அதற்கான எந்த ஒரு முயற்சியும் செய்யாமல், தன்னிடம் உள்ள பல கோடி ரூபாய் பணத்தை வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகிறார். அந்த வகையில் பல தொழில்களில் முதலீடு செய்து வரும் சிவகார்த்திகேயன், தற்பொழுது திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சில காண்ட்ராக்டர்களை அவருடைய உறவினர் பெயரில் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும் தன்னுடைய பெயரில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் படம் தயாரித்தால் கடன் காரர்கள் பிரச்சனை செய்வார்கள் என்பதால், தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் படம் தயாரித்து வரும் சிவகார்த்திகேயன். தற்பொழுது சூரி நடிப்பில் வெளியாக இருக்கும் விடுதலை படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார்.

அந்த இரண்டு படங்களுமே சிவகார்த்திகேயன் நேரடி தயாரிப்பு இல்லாமல், தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் சூரி நடிப்பில் சிவகார்த்திகேயன் படத்தை தயாரித்து வருகிறார். இதனை தொடர்ந்து தொடர்ந்து கடன்காரர்களுக்கு டிம்மிக்கு கொடுத்து வரும் சிவகார்த்திகேயனை, ஏதாவது ஒரு வகையில் இறுக்கி பிடிக்க வேண்டும், இனிமேலும் அவர் நியாயமாக நடந்து கொள்வர் என்கிற நம்பிக்கை இழந்துள்ள கடன் கொடுத்தவர்கள்.

அதிரடி நடவடிக்கையில் இறங்க திட்டமிட்டுள்ளனர். அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ரிலீஸ் தேதியின் போது, இந்த முறை தப்ப முடியாத அளவுக்கு முழு பணத்தையும் கொடுத்தால் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் எந்த ஒரு படத்தையும் வெளியிட வேண்டும். இனி சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என சிவகார்த்திகேயன் அடுத்த படம் ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கிறார்கள் சிவகார்த்திகேயனுக்கு கடன் கொடுத்த கடன் காரர்கள் என்கிறது சினிமா வட்டாரங்கள்.