அஜித்- விஜய் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து குப்புர விழுந்த சிவகார்த்திகேயன்….தேவையா இந்த அவமானம்…

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்தவர். தனது முதல் ஓரிரு படங்களிலேயே குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து வயது ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார். சிவகார்த்திகேயன் படம் என்றாலே, காமெடியும் காதலுமாய் கலகலவென இருக்கும் என்பதாலேயே பேமிலி ஆடியன்ஸ் விரும்பிப் பார்ப்பார்கள். குறிப்பாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ போன்ற படங்கள் மூலம் குழந்தைகளின் மனதில் இடம்பிடித்தார்.

இப்படி தமிழ் சினிமாவில் படிப்படியாக வளர்ந்து முன்னணி கதாநாயகர்களின் வரிசையில் இடம்பிடித்துள்ள சிவகார்த்திகேயன், சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார். இப்படி சினிமாவில் உயரத்தை நோக்கி பயணிக்கும் இவர் நேரடியாக அஜித், விஜய்க்கு சமமாக சினிமாவில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டு இப்போது தலைக்குப்புற விழுந்துள்ளார்.

அண்மையில், வெளியான இமான் சர்ச்சையினால், சிவகார்த்திகேயனின் ஆசையெல்லாம் வீணாய்ப் போனது என்றுதான் கூற வேண்டும். இந்த சர்ச்சை இணையத்தில் வைரலாகியதில் இருந்து சிவகார்த்திகேயனின் மொத்த இமேஜும் சின்னாபின்னமாய் நொறுங்கிப் போனது. அவர் மீது இமான் வைத்த குற்றச்சாட்டுகளினால், சிவகார்த்திகேயன் பலரது வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி ரசிகர்கள் மத்தியில் அவரது பேர் டேமேஜ் ஆனது மட்டுமில்லாமல், இனி அவர் நடிக்கும் படங்களுக்கு மக்களிடமிருந்து வரவேற்பு கிடைக்குமா என்ற சந்தேகமும் உருவாகி வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாவீரன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து கமல் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், இவர் நடிப்பில் உருவான அயலான் படத்தை நான்கு வருட போராட்டத்திற்குப் பிறகு, ஒரு வழியாக இந்த தீபாவளி அல்லது பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டிருந்தார். இப்படம் ஏலியன் தொடர்பான கதை என்பதால் ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் தியேட்டருக்கு வருவார்கள், எனவே, விஜய், அஜித் படங்களுக்கு கிடைக்கும் லாபம் மாதிரியே பல கோடிகளை குவித்து விடலாம் என்றெல்லாம் கனவு கண்டிருக்கிறார்.

இப்படி, விஜய், அஜித் மாதிரியெல்லாம் ஆகணும்னு கனவோடு இருந்த சிவகார்த்திகேயனின் திட்டத்தில் திடீரென குண்டு விழுந்த மாதிரி இமான் சர்ச்சை வெடித்துள்ளது. இணையம் முழுவதும் சிவகார்த்திகேயனை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், படத்தை வெளியிட்டால், படத்தில் போட்ட பணத்தையே எடுக்க முடியுமான்னு சந்தேகம் நிலவி வருகிறது.

இப்படியான சூழலில் அயலான் படத்தை வெளியிட்டால் நஷ்டம் ஏற்படும் என்பதை உணர்ந்ததால், படத்தை தள்ளிப் போடலாம் என்ற யோசனையில் இருக்கிறார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே, படத்தை எடுத்து நாலு வருசமா இழுவையா போய்க் கொண்டிருக்கும் நிலையில், இந்த முறையும் ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகிறார் சிவ கார்த்திகேயன்…