விஜய்க்கு இடியாய் விழுந்த சிவகார்த்திகேயன் – இமான் விவகாரம்… கடும் சோகத்தில் விஜய் தரப்பு…

0
Follow on Google News

விஜய்யின் நடிப்பில் லோகேஷின் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் நாளை திரையில் வெளியாகவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரமாண்டமான வெற்றியை பெரும் என்பதே பலரது கணிப்பாக இருக்கின்றது. வழக்கமான விஜய் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட லியோ படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருவது உண்மைதான். இப்படத்தில் விஜய் வித்யாசமான ரோலில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என தெரிகின்றது. மேலும் லியோ விஜய் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. வசூலிலும் புதிய சாதனைகளை படைக்க போகிறது.

விஜய்க்கு அடுத்தப் படியாக குழந்தைகளின் விருப்பமான நடிகர் யாரென்றால் அது சிவகார்த்திகேயன்தான்.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராகவே வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் ராஜ்கமல் நிறுவனத்துடன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். மாவீரன் படத்தை தொடர்ந்து நடிக்கும் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் முருகதாஸுடன் இணைந்து தன்னுடைய 23வது படத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சிவகார்த்திகேயன். இது சம்பந்தமாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. முருகதாஸின் பிறந்த நாள் அன்று அவரை நேரில் போய் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்தப் படத்திற்கான ஒப்பந்தத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டார். தற்போது விஜய்க்கு லியோ படம் வெளியாகும் நேரத்தில் இமானுடன் இணைந்து ஒரு சம்பவமும் செய்துள்ளார். இதனால் சிவகார்திகையன் தான் ட்ரெண்டிங்கில் உள்ளார்.

டி.இமான் சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் இமான் பேசிய விடயம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியடைய ஏற்படுத்தியுள்ளது. அதில், சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்றும் அவரது முதல் மனைவி மோனிகாவுக்கும் நடந்த விவாகரத்துக்கு இவர் தான் காரணம் என்றும் ஓபனாக பேசியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இமானின் மனைவி மோனிகா விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது, “ “எங்களுடைய குடும்ப நண்பர் சிவகார்த்திகேயன். அவர் ரொம்பவே நாகரீகமான மனிதர். இமானுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பத்தின் மேல் அக்கறையாகவே இருப்பார். என்னுடைய மகள்களுக்கும் அவரை பிடிக்கும். இந்த நிலையில் எனக்கும் இமானுக்கு சண்டைகள் இருந்தன. அதற்கு சிவா நல்லது தான் கூறினார். இதனை தொடர்ந்து யாருக்கும் அவர் சர்போர்ட் செய்யவில்லை என்பதைத்தான் இமான் துரோகம் என்று சொல்கிறார் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் அதை வெளியில் வேறு மாதிரி புரிந்துகொள்கிறார்கள்.” என கவலையாக பேசியுள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு மோனிகா முதல் ஆளாக வக்காலத்து வாங்கி இருப்பது ஒரு சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் நெருப்பில்லாமல் புகையுமா எனவும் சத்தம் இல்லாமல் பேசப்பட்டு வருகிறது. அத்துடன் “ சிவகார்த்திகேயன் இப்படியெல்லாம் செய்வாரா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள். ஒரு சிலர் சிவகார்த்திகேயன் கள்ளத் தொடர்பில் இருந்ததாக புரளி களப்பி வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த செய்தி இணையத்தில் வைரலானதும் இதை தெரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் தன்னுடைய டெக்னிக்கல் டீமை அழைத்து இந்த செய்தி மேலும் டிரெண்டிங் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு உடனடியாக இமானுக்கு தொலைபேசியில் அழைத்தாராம். அதில் தயவு செய்து அந்த வீடியோவை அழிக்க சொன்னதாகவும் என் வீட்டார் இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் சொன்னாராம். இப்படியெல்லாம் தகவல்கள் பரவி வருகின்றனர்.

இதனால் நாளை ரிலீஸ் ஆக உள்ள தளபதி விஜயின் லியோ படத்தை பற்றிய ஹாஷ்டேக்கை விட சிவகார்த்திகேயன் ஹாஷ்டேக் தான் எக்ஸ் தளத்தில் முதலில் இடம்பிடித்துள்ளதாம். அதுமட்டுமின்றி நேற்று காலை முதல் #LeoFDFS #LeoBookingsUpdate #Thalapathy என பல ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் இருந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஹேஷ்டேக் அது எல்லாவற்றையும் பின்னுக்கு தள்ளி முதலில் உள்ளது. மேலும் நேற்றைய தினம் வரை யூடூப்பில் டிரெண்ட்டிங்கில் இருந்த லியோ பட பாடலை பின்னுக்குத் தள்ளி, சிவகார்த்திகேயன் மீதான இமான் பேட்டி முதலிடத்தை பிடித்துவிட்டது.