காற்றில் பறக்கும் மானம்… பணம் கொடுத்து முடி மறைக்க துடிக்கும் சிவகார்த்திகேயன்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் குறித்து இசையமைப்பாளர் டி.இமான் அளித்த பேட்டி, அவரது ஒட்டுமொத்த இமேஜையும் காலிசெய்துள்ளது எனலாம். அந்தப் பேட்டியில் இசையமைப்பாளர் டி. இமான், சிவகார்த்திகேயனுடன் தான் இந்த ஜென்மத்தில் இணைந்து பணியாற்ற முடியாது எனவும், அவர் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துவிட்டதாகவும் சொன்னார். மேலும் இதுகுறித்து தான் வெளிப்படையாகப் பேசமுடியாது எனவும், இதுபற்றி தான் பேசினால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடும் எனவும் கூறினார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும், டி.இமானின் மனைவிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளதாகவும், அதனால் தான், டி.இமான் தனது முதல் மனைவி மோனிகா ரிச்சர்டை விவாகரத்து செய்துவிட்டார் என நெட்டிசன்கள் தொடர்ச்சியாகப் பேசினர். இதனைத்தொடர்ந்து, மோனிகா ரிச்சர்ட், தங்களது விவாகரத்துக்கு சமாதானம் செய்யமுயன்றவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்றும், அவரை துரோகம் செய்தார் என்று இமான் கூறக்கூடாது எனவும், அவர் மிகவும் பாவம் என்றும் ஊடகத்தினரிடம் பேசியுள்ளார்.

இதனிடையே, மூத்த பத்திரிகையாளரும், யூடியூபருமான பிஸ்மி சில மாதங்களுக்கு முன்பு, சிவகார்த்திகேயன் மற்றும் இமான் இடையேயான மோதல் தொடர்பாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், இமானுக்கு வெளியில் சொல்ல முடியாத அளவிலான ஒரு மோசமான துரோகத்தை சிவாகார்த்திகேயன் செய்துள்ளார். அதனால், சிவகார்த்திகேயன் உடன் இனி சேர்ந்து பணியாற்றிவிடவே கூடாது என இமான் முடிவு செய்துள்ளார் “ என பிஸ்மி தெரிவித்து இருந்தார். இந்த வீடியோவையும் தற்போது பலரும் பகிர்ந்து, சிவாகார்த்திகேயனை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வலைப்பேச்சு பிஸ்மி தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ள விஷயம் ரசிகர்களை பதை பதைக்க வைத்துள்ளது. சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் உள்ளே நுழைந்து தனது திறமையால் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் நடிகர் தனுஷ் 3 படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைத்த நிலையில், அவரது தயாரிப்பில் எதிர்நீச்சல், காக்கிச் சட்டை உள்ளிட்ட படங்களில் மாஸ் ஹீரோவாக்கி அழகு பார்த்தார். ஆனால், அதன் பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிவகார்த்திகேயன் தனுஷை விட்டு வெளியே வந்த நிலையில் தனியாக தயாரிப்பு நிறுவனம் எல்லாம் ஆரம்பித்து படங்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார்.

டி. இமான் சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டை அடுக்கி உள்ள நிலையில், அது என்ன மாதிரியான துரோகம், இதுபற்றி நீங்க சிவகார்த்திகேயனிடம் நேரடியா பேசுனீங்களான்னு கேட்க, அதெல்லாம் பேச வேண்டிய அளவுக்கு பேசிவிட்டேன் என சண்டை போட்டதையே சொல்லி உள்ளார். மேலும், இது பற்றி விளக்கினால் பசங்க லைஃப் பாதிக்கும் என இமான் பேசியிருப்பது பல சந்தேகங்களை கிளப்பி உள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக அந்தணன் தனது கருத்தை தெரிவித்த நிலையில், தற்போது வலைப்பேச்சு பிஸ்மி “உடன்பிறந்த தம்பியாகவே நினைத்தவரின் குடும்பத்தில் பொறுக்கித்தனத்தை காட்டியதைவிட கேடுகெட்ட செயல் வேறு எதுவுமில்லை” என சிவகார்த்திகேயனை குறிப்பிடாமல் மறைமுகமாக இந்த பிரச்சனைக்கு உண்டான காரணம் இதுதான் என பதிவிட்டுள்ளார். மேலும் அதில் யார் பெயரையும் பிஸ்மி குறிப்பிடாவிட்டாலும், அவர் சிவகார்த்திகேயனை தான் மறைமுகமாக விமர்சிப்பதாக பிஸ்மியின் அந்த டிவீட்டை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தேசிய விருது வென்ற இசையமைப்பாளரான டி. இமான் மற்றும் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் இடையேயான இந்த பிரச்னை தற்போது கோலிவுட்டில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதுபற்றி தெளிவான புரிதல் இல்லாத ரசிகர்களும் இருவரின் தனிப்பட்ட விவரங்களை கொண்டு மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தொடர்ந்து பேசுபொருளாகி வரும் இந்த விவகாரம் குறித்து, சிவகார்த்திகேயன், இமான் ஆகிய இருதரப்புக்கு மட்டுமே தெரியும்.

மேலும் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இதுகுறித்து சிவகார்த்திகேயன் வாயை திறந்தால் மட்டும் தான், உண்மை என்ன என்பது தெரியவரும். ஒரு விஷயத்தை சொல்லும் போது அதை தெளிவாக சொல்ல வேண்டும், இல்லை என்றால் சொல்லவே கூடாது. இப்படி பட்டும்படாமல் டி இமான் சொன்னது இணையத்தில் மிகப்பெரிய புயலை கிளப்பி உள்ளது.

இந்நிலையில் டி இமான் விவகாரத்தில் சிவகார்த்திகேயன் மானம் காற்றில் பறந்து வரும் நிலையில், தன்னுடைய ஐடி விங்கிடம் பணத்தை கொடுத்து சமூக வலைதளத்தில் தன்னுடைய இமேஜை காக்க சிவகார்த்திகேயன் கடுமையாக போராடி வருவதாக கூறப்படுகிறது.