அந்த விஷயத்தில் படு மோசம்… வீட்டுக்குள்ளே விடாதீங்க… சிவகார்த்திகேயனை அசிங்க படுத்திய சினிமா பிரபலம்..

0
Follow on Google News

சிவகார்த்திகேயன் எனக்கு மிக பெரிய துரோகத்தை செய்துவிட்டார், தம்பி மாதிரி நினைத்து பழகினேன் ஆனால் அவர் செய்த துரோகத்தை என்னால் மன்னிக்கவே முடியாது, இந்த ஜென்மத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து படம் பண்ணுவதற்கு வாய்ப்பே இல்லை என இசை அமைப்பாளர் இமான் பேட்டி ஒன்றில் பேசிய பின்பு சிவகார்த்திகேயன் – இமான் இருவருக்கும் இடையில் நடந்தது என்ன என்கிற விவாதம் அனல் பறந்து வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் – இமான் இருவருக்கும் இடையில் நடந்த பிரச்சனைக்கு பின்பு தான் இமான் அவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்தார், அதனால் இமான் அவரது மனைவியை விவாகரத்து செய்வதற்கு பின்னணி காரணம் சிவகார்த்திகேயன் தான் என பலரும் சதேகத்தை எழுப்பி வந்தனர், இந்த விவகாரத்தில் சிவகார்த்திகேயன் அமைதியாக இருக்க, அணல் இமான் முன்னாள் மனைவி சிவகார்த்திகேயன் நல்லவர் , வல்லவர் என பேட்டி கொடுத்தார்.

மேலும் இமான் தான் படு மோசம் என்று இமான் முன்னாள் மனைவி மௌனிகா பேட்டியை பார்த்த பலர், சிவகார்த்திகேயன் தான் இமான் முன்னாள் மனைவி மௌனிகாவை பேட்டி கொடுக்க வைத்து தன்னை யோக்கியனாக காட்ட முயற்சிக்கிறார் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் இமான் குடும்பத்தில் சிவகார்த்திகேயன் செய்த வேலையால் மிக பெரிய அளவில் சிவகார்த்திகேயன் இமேஜ் டேமேஜ் ஆகி வரும் நிலையில்.

தன்னுடைய இமேஜை காப்பாற்றி கொள்ள பல்வேறு யுத்திகளை சிவகார்த்திகேயன் கையாண்டு வருவதாக சினிமா துறையை சேர்ந்தவர்கள் பேட்டி கொடுத்து வருகிறார்கள், அதாவது தனக்கு எதிராக இந்த விவகாரத்தில் பேசுகின்றவர்கள் பேச்சுக்களை இருட்டடிப்பு செய்யவும், தன்னை பற்றி புகழ் பாடவும், மேலும் ஊடகங்கள் இந்த விவகாரத்தை பெருசு படுத்தாமல் இருக்கவும் சிவகார்த்திகேயன் பணத்தை வாரி இறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அப்படி சிவகார்த்திகேயன் பணத்தை வரி இறைப்பதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சினிமா துறையை சேர்ந்த முக்கிய பிரபலம் சிவகார்த்திகேயனை நார் நாராக கிழித்துள்ள சம்பவமும் அரங்கேறி உள்ளது, அதாவது அந்த முக்கிய பிரபலம் என்ன சொல்லியுள்ளார் என்றால்,

தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்தவன் போல பொது இடம் மற்றும் படத்தில் வேஷம் போடுவான். ஆனால் நிஜத்தில் கில்மா வேலை செய்வான். உண்மை வெளியே வந்தால்.. கோடிக்கணக்கில் பணத்தை விட்டெறிந்து தவறை மூடி மறைப்பான். அதையும் மீறி யாராவது உண்மை பேசினால்.. சோஷியல் மீடியா, யூட்யூப் சேனல்களை தன் ஐ.டி.டீமை வைத்து முடக்குவான். படத்திலும், பொதுவெளியிலும் யோக்கியன். நிஜத்தில் மட்டமான ஃப்ராடுப்பய. என தெரிவித்தவர்,

மேலும் ப்ரின்ஸ் ஏதோ பெரிய சம்பவம் பண்ணிட்டான் போல. பாவம் சும்மா விடாது. உஷாரய்யா உஷாரு. உங்க குடும்பம் உஷாரு. எவனா இருந்தாலும்.. நீங்க இருக்கறப்ப மட்டும் வீட்டுக்குள்ள விடுங்க. நெருங்கிய நண்பனா இருந்தாலும். வாசல், கொல்லைப்புறம், மொட்டைமாடி… CCTV அவசியம். எப்படி வேணாலும் தவ்வி வருவானுங்க என சினிமா முக்கிய பிரபலம் சிவகார்த்திகேயன் பெயரை குறிப்பிடாமல் நார் நாராக கிழித்துள்ளார், அந்த முக்கிய பிரபலம் வேறு யாரும் இல்லை பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தான்.