இமான் சர்ச்சையில் இருந்து காப்பாற்றி கொள்ள சிவகார்த்திகேயன் செய்த வேலை… என்ன தெரியுமா.?

0
Follow on Google News

தனியார் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தொடங்கி தற்போது தமிழ் திரையுலகில் டாப் 10 ஹீரோக்களில் மிக முக்கியமான ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சமீப காலமாகவே தனது குடும்ப புகைப்படங்களையும், தனது வீட்டில் நடக்கும் விசேஷங்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார். சிவகார்த்திகேயன் இவ்வாறு நடந்து கொள்வதின் பின்னணி தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் பல கஷ்டங்களைக் கடந்து சாதனைகள் படைத்தவர் இசையமைப்பாளர் டி.இமான், ஏ.ஆர்.ரகுமானுக்கு பின் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் திரைத்துறையில் இனிமையான பாட்டுகளை வழங்கி ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் டி இமான். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் டி இமான் கூட்டணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மக்களால் மிகவும் விரும்பி வரவேற்கப்பட்ட பெரும் கூட்டணியாக இருந்தது.

சில மாதங்களுக்கு முன்பாக இசையமைப்பாளர் டி. இமான், தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை வழங்கும் வகையில் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். அதாவது, சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் இனி சிவகார்த்திகேயன் உடன் எந்த படத்திலும் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை எனவும் தனது குழந்தைகளுக்காக தான் எந்த உண்மையையும் வெளியே சொல்லாமல் அமைதியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்வை ஏற்படுத்தி இருந்தது.

அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் தனது மீது ஏற்பட்ட கலங்கங்களை மறைப்பதற்காக பிரபல யு டியூபர்களுக்கு பல கோடி ரூபாயை கைமாற்றி விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது இரண்டாவது மகனுக்கு பெயர் சூட்டும் விழாவை தனது வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவை தனது இணைய பக்கத்திலும் வெளியிட்டிருந்தார். நடிகர் சிவகார்த்திகேயன்,

இசையமைப்பாளர் டி. இமான் குறித்த விவகாரம் வெளிவருவதற்கு முன்பு வரை தனது குடும்பம் பற்றியோ அல்லது தனது மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படங்களையோ சமூக வலைதளங்களில் பதிவிடாமல் மறைவாகவே வைத்திருந்தார். ஆனால் தற்போது தனது குடும்பத்தில் எந்த சுப காரியங்கள் நடந்தாலும் அதை இணையத்தில் பதிவிட்டு விடுவார் .

இது அவர் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இணையத்தில் தன்னை குறித்து வெளியான தகவல்களை மறைப்பதற்காக தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது. இசையமைப்பாளர் டி இமான் மூலம் சரிந்து போன தனது இமேஜை தூக்கி நிறுத்துவதற்காகவே சிவகார்த்திகேயன் இவ்வாறு தன் மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார் என சினிமா விமர்சகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் சிவகார்த்திகேயன் அடுத்து கமிட் ஆகி இருக்கும் படத்தின் இயக்குனரிடம் சமூக வலைதளங்களில் தனது பெயர் மிகவும் டேமேஜ் ஆகி இருப்பதாகவும் மீண்டும் தனது பெயரை ரசிகர்கள் மத்தியில் தூக்கி நிறுத்தும் வகையில் கதையை மாற்றி எழுதும் படி கெஞ்சி கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதிலிருந்து நடிகர் சிவகார்த்திகேயன் இழந்த தனது இமேஜை மீண்டும் கொண்டுவர படாத பாடு பட்டு வருவதாக கூறப்படுகிறது.