சிவகார்த்திகேயன் தப்பிக்கவே முடியாது… ஆடியோ ஆதாரம் இருக்கு .. கையும் களவுமாகப் மாட்டிய பரிதாபம்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், ஆரம்ப காலங்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பின்னர் படிபடியாக சினிமாவிற்குள் வந்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டதாகவும், குழந்தைகள் நலனுக்காக அதை வெளியில் சொல்ல முடியாது என்றும் இசையமைப்பாளர் டி இமான் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

இதனைய‌டுத்து, தனது முதல் மனைவி மோனிகாவை, இமான் விவாகரத்து செய்ததிற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று இணையவாசிகளும், ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் சிவகார்த்திகேயனை விளாசி வந்தனர். இந்த‌ ச‌ர்ச்சைக்கு ம‌த்தியில் உடனடியாக பேட்டியளித்த இமானின் முதல் மனைவி மோனிகா ‘சிவகார்த்திகேயன் எங்கள் குடும்ப நண்பர். டீசண்டான மனிதர்.

எங்களுக்கு விவாகரத்து நடக்கக்கூடாது என்று அவர் சமாதானம் பேச வந்தார். நல்ல எண்ணத்தில் நாங்கள் ஒற்றுமையாக வாழ அவர் நினைத்து முயற்சி செய்தார். நண்பரின் குடும்பம் பிரியக் கூடாது என நினைத்தார். இமானின் விவாகரத்து முடிவை ஏற்காமல் நியாயத்தின் பக்கம் சிவகார்த்திகேயன் நின்றதை துரோகம் என்று இமான் சொன்னதாக நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

தற்போது டி. இமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையேயான மோதல் பூதாகரமாக வெடித்த நிலையில் அதன் பின்னணி குறித்து வலைப்பேச்சு அந்தணன் பேசியிருக்கிறார். மேலும் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாகவே டி இமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையேயான பிரச்சினை குறித்து நாங்கள் வலைப்பேச்சில் பேசி இருந்தோம் என்று தெரிவித்தார். தற்போது அவர் கூறியதாவது, “சிவகார்த்திகேயன் டி இமானுக்கு போன் செய்து, அண்ணா என்னை மன்னித்து விடுங்கள். இப்போதே நான் உங்கள் வீட்டிற்கு வருகிறேன்.

உங்கள் காலில் வேண்டுமென்றாலும் நான் விழுகிறேன். தயவு செய்து நீங்கள் கொடுத்த பேட்டியை அந்த youtube சேனலில் இருந்து தூக்க சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு இமான் நீ என்னுடைய வீட்டிற்கே வர வேண்டாம். உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தயவுசெய்து நீ போனை வை என்று சொல்லி கட் செய்து இருக்கிறார்.” என்று பேசியுள்ளார்.

மேலும், “சிவகார்த்திகேயன் செய்ததுதான் மன்னிக்க முடியாத இன்னொரு குற்றம். அது என்னவென்றால் சிவகார்த்திகேயன் தன்னுடைய தனி இணையதள பிரிவிற்கு ஒரு கட்டளை இடுகிறார். அந்த கட்டளையில், இமான் கொடுத்த பேட்டி வைரல் ஆகாமல் தடுக்க வேண்டும். அதே நேரத்தில் தன்னைப் பற்றிய பாசிட்டிவான விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட வேண்டும் என்றுள்ளார். அதற்கான ஆடியோ ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது” என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, சிவகார்த்திகேயனை பற்றி யாரெல்லாம் முன்பு நன்றாக பேசியிருந்தார்களோ அது தொடர்பான வீடியோக்கள் அனைத்தையும் அந்த இணையதள பிரிவு சமூக வலைதளங்களில் பரப்பியது. குஷ்புவிடம் பல நடிகைகள் சிவகார்த்திகேயனை பற்றி நல்லவிதமாக சொன்னதையும், அது குறித்து குஷ்பு சிவகார்த்திகேயனுக்கு சர்டிபிகேட் கொடுத்ததையும் கட் செய்து அந்த இணையதள பிரிவு சமூகவலைதளங்களில் பரப்பியது. இது எதற்காக என்றால் இந்த வீடியோக்களை அதிகமாக பரப்பி டி இமானின் பேட்டியை கீழ் இறக்குவதற்காக..

இன்னொரு கூத்து என்னவென்றால், இந்தப் பிரச்சனை யாரால் வந்ததோ, அவரே முன்வந்து, சிவகார்த்திகேயன் மிகவும் நல்லவர் என்று பேட்டி கொடுக்கிறார். அதிலேயே தெரிந்துவிட்டது உங்களுடைய தண்டவாளம். ஒரு உண்மையை பொய்யாகவும், ஒரு பொய்யை உண்மையாகவும் மாற்ற முடியாது. சினிமாவில் அது எங்காவது ஒரு இடத்தில் வெளிப்பட்டே தீரும். இந்த விஷயத்தை மறைப்பதற்கு நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களில் இருந்தே தெரிகிறது நீங்கள் எவ்வளவு பெரிய பொய் என்று..” என்று பேசினார்.