ஏமாற்ற நினைத்த தனுஷ் … சிக்காமல் தப்பித்து கொண்ட சிவகார்த்திகேயன், அனிருத்..! என்ன நடந்துச்சு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் முன்னணி நடிகராக உயர்ந்த பின்பு, சொந்தமாக படம் தயாரித்தால் மட்டும் தான் தன்னுடைய படத்தில் தான் அதிகாரம் செலுத்த முடியும் என திட்டமிட்டவர், தயாரிப்பு நிறுவனம் தொடக்கி சொந்தமாக படம் தயாரிக்க தொடங்கினார், 3 படத்தை முதல் முதலில் தயாரித்த தனுஷ், அந்த படத்தில் இசை அமைப்பாளராக அனிருத் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார், அதே போன்று நடிகர் சிவகார்திகேயனுக்கு அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தயாரிப்பில் அடுத்து உருவான எதிர்நீச்சல் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக, மீண்டும் அனிரூத் இந்த படத்தில் இசை அமைத்தார். அனிருத் இசை அமைத்த முதல் இரண்டு படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. எதிர்நீச்சல் படத்துக்கு பின்பு சிவகார்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிக பெரிய ஹிட் கொடுத்தது.

இந்த படத்துக்கு பின்பு சிவகார்த்திகேயன் சம்பளம் கிடு கிடுவென உயர்ந்தது. இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்கு பின்பு மீண்டும் தனுஷ் தயாரிப்பில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு வந்துள்ளது. சிவகார்த்திகேயனும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்நீச்சல் படத்தில் வாங்கிய சம்பளம் தொகை சிவகார்த்திகேயனுக்கு பேசப்பட்டதை தொடர்ந்து தற்போது தனது மார்க்கெட் ஏற்ப சம்பளம் கேட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

அதற்கு தனுஷ், நான் பார்த்து சினிமாவில் வாய்ப்பு கொடுத்து,வாழ்க்கை கொடுத்த பையன் என் தயாரிப்பில் கொடுப்பதை வாங்கி கொண்டு நடித்துவிட்டு போக வேண்டியது தானே என கோபத்துடன் சிவகார்த்திகேயனுக்கு தகவல் அனுப்பியுள்ளார் தனுஷ், இதற்கு சிவகார்த்திகேயன், எனக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தார் என்று வேண்டுமானால் சொல்லட்டும், வாழ்க்கை கொடுத்தார் என்பதை ஏற்று கொள்ள முடியாது.

தனுஷ் தயாரிப்பில் அதிக சம்பளம் கொடுத்தாலும் இனி நடிக்க மாட்டேன் என மறுத்து பதில் அனுப்பியுள்ளார் சிவகார்த்திகேயன். இதே போன்று இசை அமைப்பாளர் அனிருத் அடுத்தடுத்து மற்ற படங்களில் இசை அமைத்து மிக பெரிய ஹிட் கொடுத்து தனது சம்பளத்தை உயர்த்தி கொண்டே சென்றாலும், தனுஷ் தயாரிப்பில் மட்டும் அவர் கொடுத்ததை தான் வாங்க வேண்டும் என நிலை அனிருத்துக்கு இருந்தது.

இதனை தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் அனிருத்துக்கு அழைப்பு வந்தால். இப்போதைக்கு முடியாது என தப்பித்து கொள்வாராம் அனிருத். இப்படி ஆரம்ப கட்டத்தில் தனது படத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட கேமரா மேன், துணைநடிகர்கள் தனுஷ் கொடுப்பதை வாங்கி கொள்வார்கள் என கூறப்படும் நிலையில், இதில் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் போன்றவர்கள் தான் தப்பித்து கொண்டார்கள் என்றும். ஆனால் சம்பளம் விஷயத்தில் நடிகைகளுக்கு தாரள மனது தனுஷ்க்கு உண்டு என்றும் கூறப்படுகிறது.

திமுகவுக்கு வெட்கமாக இல்லையா.? முக ஸ்டாலினுக்கு நோபல் பரிசு.. எதற்கு தெரியுமா.?