பழையபடி நிரந்தரமாக வீட்டிலே முடங்கும் சிம்பு… என்ன காரணம் தெரியுமா.?

0
Follow on Google News

கடந்த சில வருடங்களாக சிலம்பரசன் படப்பிடிப்பு தளத்திற்கு ஒழுங்காக வருவதில்லை, இயக்குனர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை, சிலம்பரசனை நம்பி படம் எடுக்கின்ற தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடியவர் சிலம்பரசன் என்கின்ற தொடர் குற்றச்சாட்டின் காரணமாக, சிலம்பரசனை வைத்து படம் எடுப்பதற்கு பல முன்னணி தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தயங்கி வந்தனர்.

இதனால் சில காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கியிருந்த சிலம்பரசன், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது, இந்த நிலையில் மாநாடு படத்திற்கு முன்பு பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கி கிடந்த நடிகர் சிம்பு, மாநாடு பட வெற்றிக்குப் பின்பு தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தினார்.

மாநாடு படத்திற்கு முன்பு கமிட்டாகி படப்பிடிப்பு தொடங்கிய படங்களில் மட்டும் தொடர்ந்து நடித்து கொடுத்த சிம்பு, ஏற்கனவே கமிட்டாகி படப்பிடிப்பு தொடங்காத படங்களில் இருந்து விலகி கொண்டார், இதற்கு காரணம், மாநாடு படத்திற்கு முன்பு குறைந்த சம்பளத்தில் கமிட்டாகி இருந்தார், ஆனால் மாநாடு பட வெற்றி தான், மாநாடு படத்திற்கு அடுத்து சிம்பு நடிப்பில் அடுத்த வெளியான வெந்து தணிந்தது காடு படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

இருந்தும் மாநாடு வெற்றியை சுட்டிக்காட்டி தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ள சிலம்பரசன், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதையைக் கேட்டு விட்டு. சுமார் 40 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம், பல தயாரிப்பாளர்கள் 40 கோடி என்றதும் வேற எந்த ஒரு வார்த்தையும் சொல்லாமல் தெரிந்து ஓடி வருகிறார்களாம். மேலும் சில தயாரிப்பாளர்கள் கொஞ்சம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டால் அதற்கு ரொம்ப காரர் காட்டுகிறாராம் சிம்பு.

இந்த நிலையில் சிம்பு தற்பொழுது நடித்து வரும் பத்து தலை படத்தில் நடிக்க மாநாடு படம் வெளியாவதற்கு முன்பு 6 கோடி சம்பளத்தில் கமிட்டாகி இருந்தார், தற்பொழுது 2 கோடி சேர்ந்து 8 கோடி அந்த படத்தில் சம்பளம் வாங்கியுள்ளார் சிம்பு, இந்த நிலையில் கையில் வேறு எந்த படமும் இல்லை என்றாலும், அதிக சம்பளம் கேட்பதால் பழையபடி வீட்டிலே முடங்கும் சூழல் சிம்புவுக்கு ஏற்பட்டுள்ளது.