தீபிகபடுகோனை நெருங்க கூட முடியாது… சிம்புவுக்கு எதற்கு இந்த ஓவர் பில்டப்…

0
Follow on Google News

பாலிவூட் நடிகர், நடிகைகள் ஒரு படத்தில் நடித்தால், அவர்களின் அட்ராசிட்டி எந்த அளவுக்கு இருக்கும் என்பதற்கு தற்பொழுது சந்திரமுகி 2 படத்தில் நடித்து வரும் கங்கனா ரனவ்த் உதாரணம். ஹைதராபாத்தில்சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து வந்த நடிகை கங்கானா ரனவ்த் உடன் சுமார் 30 நபர்களை அழைத்து வந்துள்ளார்.

பொதுவாக ஒரு நடிகை தன்னுடன் மேக்கப் மேன் மற்றும் காஸ்ட்யூமர் டிசைன் ஆகியோரை தான் உடன் அழைத்து வருவார்கள். ஆனால் கங்கனா ராணத் அவருக்கென தனி சமையல்காரர் முதல் மும்பையில் இருந்து அழைத்து வந்துள்ளார். மேலும் பெரும்பாலும் ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெறும் படப்பிடிப்பின் போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு, அங்கே ராமோஜி சிட்டியிலே இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தங்கி விடுவார்கள்.

ஆனால் கங்கனா தன்னுடன் அழைத்து வந்த சுமார் 30 நபர்களை அந்த ராமோஜி சிட்டியில் உள்ள ஓட்டலில் தங்க வைத்து விட்டு, இவருக்கென தனியாக ஹைதராபாத் நகரில் நட்சத்திர ஓட்டல் வேண்டும் என்று அங்கே தங்கி வந்துள்ளார். மேலும் அவர் மும்பையில் இருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் வருவதற்கு தனி விமானதில் வைத்துள்ளார், இது அனைத்துமே முழுக்க முழுக்க தயாரிப்பாளர்கள் செலவில் தான் அடங்குகிறது.

இதேபோன்று இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சிங்கம் 2 படத்தின் வெற்றி விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஹிந்தி நடிகர் அஜய் தேவகனை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்கள். அப்போது அஜய் தேவகன் தரப்பிலிருந்து பல கோரிக்கைகள் தெரிவித்துள்ளனர். அதாவது அஜய் தேவகன் மும்பையில் இருந்து சென்னை வருவதற்கு தனி விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவருடன் சுமார் 12க்கு மேற்பட்ட உதவியாளர்கள் வருவார்கள், அவர்களுக்கு பிசினஸ் கிளாஸில் டிக்கெட் புக் செய்ய வேண்டும். மேலும் அஜய் தேவகன் மற்றும் அவருடைய உதவியாளர்கள் அனைவரும் சென்னையில் தங்குவதற்கு ஒரு நச்சத்திர ஹோட்டலில் உள்ள ஒரு ப்லோர் முழுவதும் புக் செய்ய வேண்டும். மேலும் அஜய் தேவகன் கலந்து கோவதற்காக ஒரு தொகையும் பேசப்பட்டுள்ளது.

இதெயெல்லாம் கேட்ட இயக்குனர் ஹரி, என்னடா இது, வெற்றி விழாவுக்கு செலவு செய்யும் பட்ஜெட்டை விட அஜய் தேவகனுக்கு செய்யும் செலவு அதிகமாக இருக்கே என, அந்த விழாவுக்கு அஜய் தேவகனை லாபத்தை தவிர்த்தார் இயக்குனர் ஹரி. இப்படி பாலிவுட் நடிகர், நடிகைகளை ஒரு நிகழ்ச்சிக்கு புக் செய்தாலோ அல்லது ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட் செய்தாலோ அவர்களின் அட்ராசிட்டி மிகப்பெரிய அளவில் இருக்கும்.

அந்த வகையில் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய செலவுகளை ஏற்படுத்தும் அந்த வகையில் ஹிந்தி நடிகை தீபிகா படுகோன், சிம்பு நடிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக பேச்சு வார்த்தை நடை பெற்று வருவதாக கூறப்படும் தகவல்கள் எந்த விதத்திலும் உண்மை இல்லை என்றே கூறப்படுகிறது. காரணம் தீபிகா படுகோன் சிம்புவை விட அதிக சம்பளம் வாங்க கூடியவர், மேலும் அவர் வந்து போகும் செலவுகள் எல்லாம் கணக்கிடும் பொழுது படத்தின் பட்ஜெட் தாங்காது என்றும்,

மேலும் இதுவரை தீபிகா படுகோன் தரப்பில் சிம்பு நடிக்க இருக்கும் படம் குறித்து எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்கின்றது பாலிவுட் வட்டாரங்கள். அதனால் சிம்பு நடிக்க இருக்கும் பட குழுவினரே தான் திட்டமிட்டு படத்தின் விளம்பரத்திற்காக இது போன்ற தகவலை பரப்பி விட்டிருக்க வேண்டும் என கூறப்படுகிறது.இந்நிலையில் சிம்பு நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.