பப்ளிசிட்டிக்காக சிம்புவே கிளப்பி விட்ட வேலை தானா இது.? அதுக்கு தீபிகா படுகோன்லாம் ஓவர் தான்..

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாடு வெற்றிக்கு பின்பு சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர்ந்து அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வரும் சிம்பு, தோல்வி அடைந்த படங்களை உதறி தள்ளிவிட்டு இன்னும் மாநாடு வெற்றியை வைத்தே உருட்டி வருகிறார்.

மாநாடு படத்திற்கு முன்பு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சிம்பு, மாநாடு வெற்றிக்கு பின்பு தன்னுடைய சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி கதை சொல்ல வரும் இயக்குனர்களையும், கால் சீட் கேட்டு வரும் தயாரிப்பளர்களையும் தெறித்து ஓட விட்டு கொண்டிருக்கிறார். சுமார் 40 கோடி வரை சம்பளம் கேட்டு வந்த நடிகர் சிம்புவை யாரும் அவ்வளவு பெரிய சம்பளத்துக்கு கமிட் செய்யாததால், தன்னுடைய சம்பளத்தை 25 கோடியாக குறைத்து கமல்ஹாசன் தயாரிப்பில் கமிட்டாகி உள்ளார்.

வெந்து தனித்தது காடு, பத்து தல என தொடர்ந்து சிம்பு நடித்த படம் தோல்வியை தழுவியதால், அடுத்து கமல்ஹாசன் தயாரிக்கும் சிம்பு நடிக்க இருக்கும் படம் பற்றி பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் தற்பொழுது சிம்புவுக்கு ஜோடியாக இந்த படத்தில் பாலிவூட் நடிகை தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில்.கமலஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தின் முழு பட்ஜெட் 100 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் இதற்கு முன்பு மாநாடு வெற்றி பெற்ற பின்பு சுமார் 40 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டு வந்த நடிகர் சிம்புவுக்கு அவ்வளவு தொகை கொடுத்து யாரும் சிம்புவை கமிட் செய்ய முன்வராததால். தற்பொழுது கமல்ஹாசன் தயாரிப்பில் 25 கோடி ரூபாய் சம்பளத்தில் கமிட்டாகியுள்ளார்.

அந்த வகையில் சுமார் 100 கோடி ரூபா பட்ஜெட் படத்தில் சிலம்பரசனின் சம்பளம் 25 கோடி, நடிகை தீபிகா படுகோன் நடிப்பதற்கு 25 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால், மீதமுள்ள 50 கோடியில் எப்படி இந்த படத்தை எடுத்து முடிக்க முடியும் என்கின்ற ஒரு பெரும் கேள்வி எழுகிறது. அந்த வகையில் மிகப்பெரிய சம்பளம் கொடுத்து தீபிகா படுகோனை இந்த படத்தின் உள்ளே கொண்டு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

மேலும் இந்தப் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இன்னும் கதையை முழுமையாக தயார் செய்து முடிக்கவில்லை . அதற்கான பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் படத்திற்கான ஆரம்ப கட்ட வேலையில்தான் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் அடுத்த கட்டத்திற்கு அதாவது சிம்பு தவிர்த்து அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மற்றும் பிற நடிகர்கள் நடிகைகள் தேர்வு தேர்வு பற்றி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என கூறப்படுகிறது.

மேலும் சிம்புவுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிப்பதற்கான எந்த ஒரு பேச்சுவார்த்தையும் தீபிகா படுகோனிடம் நடத்தப்படவில்லை என பாலிவுட் வட்டாரங்களும் தெரிவிக்கிறது. அதுமட்டுமில்லை சிம்புவா.? யார் அந்த சிம்பு என கேள்வி கேட்கும் நிலையில் தான் தீபிகா படுகோனுக்கு சிம்பு என்கிற ஒரு நடிகர் இருக்கிறாரா என்று கூட தெரியுமா என பாலிவுட் சினிமா வட்டாரத்தில் இந்த விவகாரம் குறித்து கிண்டல் செய்து வருகிறார்கள்.

அப்படி இருக்கையில் தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன்காக ஒரு பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே தான் தனக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார் என சிம்புவே அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் கிளப்பிவிட்டிருக்கலாம் அல்லது படக்குழுவினர் கூட படத்தின் ப்ரோமஷனுக்காக செய்திருக்கலாம் என்கிறது சினிமா வட்டாரங்கள்.