அது வேற வாய்… இது நார வாய்… அந்தர் பல்டி அடித்த நடிகர் சத்யராஜ்…

0
Follow on Google News

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற்ற காவிரி நதிநீர் தொடர்பாக போராட்டத்தில் சத்யராஜ் மேடையில் பேச வந்த போது, ரஜினிகாந்த் அந்த இடத்திற்கு வருகிறார், அப்போது அங்கிருந்த மீடியாக்கள் சத்யராஜ் பேச வருவதை கவர் செய்யாமல் ரஜினியை சூழ்ந்து கொண்டு பேட்டி எடுக்கிறார்கள், அங்கிருந்த ரசிகர்களும் ரஜினிகாந்தை பார்த்து ஆரவாரம் செய்கிறார்கள்.

ஒரு வழியாக ரஜினிகாந்த் பேட்டி கொடுத்துவிட்டு மேடைக்கு வருகிறார், சத்யராஜுக்கு உச்சக்கட்ட டென்ஷன், அந்த டென்ஷனுடன் அவருடைய பேச்சை ஆரம்பிக்கிறார் சத்யராஜ். தன்னுடைய பேச்சை தொடங்கிய சத்யராஜ் பொதுவா ஒரு மேடைகளில் சில பெயர்களை சொன்னால் கைதட்டல் வாங்கலாம், யாருடைய பெயரைச் சொன்னால் நீங்கள் எல்லாம் நீங்கள் இங்கே கை தட்டுவீர்கள், என தெரிந்து அவர்களை பெயரை சொல்லி இங்கே கைதட்டல் வாங்கலாம்.

ஆனால் அவங்க பெயரைச் சொல்லி கைதட்டல் வாங்குவதற்கு பதிலா நான் நாக்கை பிடிக்கும் கொண்டு சாவேன் என ஆக்ரோஷமாக சத்தியராஜ் பேசியிருந்தார். மேலும் இங்கே வந்ததற்கு வித்த காட்டுவதற்கு அல்ல தமிழ்நாட்டின் கன்னடத்துக்காரன் அடிக்கிறான், அதற்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம், ஒவ்வொரு நடிகரின் பெயரைச் சொல்லி கைதட்டல் வாங்க வரவில்லை.

அதிகமாக சம்பளம் வாங்குகின்ற பெயரைச் சொன்னால் அதிகமா கைதட்டுவீங்க, அதைவிட கம்மியா சம்பளம் வாங்குற நடிகர் பெயரை சொன்னால் கம்மியா கைதட்டுவீங்க, அப்படி பெயரச்சொல்லி கைதட்ட வாங்குவதை விட நாக்கை பிடுங்கி சாவான் டா இந்த தமிழன் என ஆக்ரோஷமாக ரஜினிகாந்தை மேடையில் வைத்து கொண்டே பேசி இருந்தார் சத்யராஜ்.

அதாவது தமிழ் சினிமாவில் மிக பெரிய உச்சத்தில் இருக்கும், தற்பொழுது இருப்பதை விட அந்த காலகட்டத்தில் இதை விட பல மடங்கு உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்த் பெயரை சொன்னாலே கைதட்டல் பறக்கும் அப்படி இருந்த காலத்தில் ரஜினிகாந்தை மேடையில் வைத்து கொண்டே, மறைமுகமாக கடுமையாக தாக்கி பேசிய சத்யராஜ்.

அதே போன்று ரஜினிகாந்த தன்னுடைய அரசியல் அறிவிப்பை அறிவித்து, தன்னுடைய அரசியல் ஆன்மீக அரசியல் என தெரிவித்த பின்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சத்தியராஜ், அரசியல் என்றால் அப்படியே குதிக்க வேண்டும், ஆனால் ஒரு தொழில் என்று வந்துவிட்டு, அந்த தொழிலுக்கு ஏதாவது ஒரு பெயர் வைக்கக்கூடாது. ஆன்மீக அரசியல் என அந்த தொழிலுக்கு ஒரு பெயர் என ரஜினிகாந்தை கலாய்த்து பேசி இருப்பார் சத்யராஜ்.

மேலும் நம்ம என்ன நிம்மதியை தேடி மலைக்கலாமா போகிறோம் என்று ரஜினிகாந்த் ஆன்மீக பயணமாக இமயமலை செல்வதையும் கலாய்த்து இதற்கு முன்பு பேசி இருந்தார் சத்தியராஜ். இப்படி தொடர்ந்து ரஜினிகாந்தை மறைமுகமாக மிக கடுமையாக எதிர்த்து வந்த சத்யராஜ், தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ் நடிக்க இருக்கிறார்.

அதாவது இதற்கு முன்பு யார் பெயரை சொன்னால் நீங்கல்லாம் கை தட்டுவீங்க, அப்படி ஒரு பெயரை சொல்லி கை தட்டல் வாங்குவதற்கு பதில் நாக்கை பிடுங்கி கொண்டு சாவேன் என நரம்பு புடைக்க ரஜினிகாந்தை மறைமுகமாக பேசிய சத்யராஜ், தற்பொழுது ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்க என்ன காரணம், பணம் தானே, என சத்யராஜை இது வேற வாய், அது நாற வாய் என வடிவேலு காமெடியை வைத்து பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

மேலும் இதற்கு முன்பு கன்னடர்களை கடுமையாக பேசிய சத்யராஜ் நடித்த பாகுபலி படத்தை கர்நாடகவில் திரையிடமாட்டோம் என அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, சத்யராஜ் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.