சத்தமே இல்லாமல் கடவுளாக வாழ்ந்து வரும் சந்தானம்… அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளலாக வாழும் சந்தானம்..

0
Follow on Google News

திரையுலகிலும் சரி, நிஜ வாழ்விலும் சரி பிறருக்கு உதவி செய்வதை வெளிப்படையாக வீடியோ எடுத்து இணையதளங்களில் பதிவிட்டு அதன் மூலம் பப்பிளிசிட்டி தேடும் பலபேரை நாம் பார்த்திருக்கிறோம். அதிலும் சிலர் பப்ளிசிட்டி செய்வதற்காகவே உதவி செய்வதும் வழக்கம்தான். ஆனால் தற்போது நடிகர் சந்தானம் தன்னுடன் பணியாற்றிய சக நடிகருக்காக மறைமுகமாக அவர் செய்திருக்கும் விஷயம் தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

90ஸ் கிட்ஸ்கள் பல விஷயங்களை இப்போது மறக்க முடியாது என்று புலம்பிக் கொண்டிருப்பதை கேட்டு இருப்போம். அதில் லொள்ளு சபா நிகழ்ச்சியும் ஒன்று. அந்த காலகட்டத்தில் பலருடைய வீட்டில் டிவிகள் இல்லை என்றாலும் பக்கத்து வீட்டில் எட்டி எட்டிப் பார்த்த நிகழ்ச்சிகளில் லொள்ளு சபா நிகழ்ச்சியும் இருக்கும். இப்போது எல்லா வீட்டிலும் டிவி இருக்கிறது. அதோடு கையில் மொபைல் போன் மூலமாக எல்லா சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் இருந்த இடத்தில் இருந்து பார்க்க முடிகிறது.

ஆனால் அந்த காலகட்டத்தில் அப்படி கிடையாது. ஆனாலும் லொள்ளு சபா நிகழ்ச்சி பலருடைய ஃபேவரைட் ஆக இருக்கும். டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் நேரத்தில் மட்டும்தான் அதைப் பார்க்க முடியும். அதற்காகவே அந்த நிகழ்ச்சிக்காக பலர் டிவி முன்பு காத்திருப்பார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் இப்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாக மாறி இருக்கிறார்கள்.

அதில் முக்கியமாக யோகி பாபு, சந்தானம் போன்றோரை சொல்லலாம்.இவர்களோடு நடித்த பலரும் இப்போது திரைப்படங்கள் சினிமா சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் சுவாமிநாதன், சந்தானம் பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு கருத்துக்களை பெற்று வருகிறது. ஒரு கட்டத்திற்கு பிறகு சந்தானம் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்ததும் அவருடைய மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்துள்ளதால் நல்ல ஒரு ரீச்சில் இருந்தார்.

அந்த நேரத்தில் தான் சந்தானத்துடன் இணைந்து பணியாற்றிய பாலாஜி உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் பொழுது தேவையான அனைத்து உதவிகளையும் சந்தானம் வழங்கி வந்ததாகவும், ஆனால் உடல் நலம் சரியில்லாமல் பாலாஜி இறந்து போக அப்போதும் சந்தானம்தான் அந்த குடும்பத்திற்கு 10 லட்சம் கொடுத்து உதவிக்கரம் நீட்டியதாக சுவாமிநாதன் கூறியிருக்கிறார்.

பாலாஜியின் மறைவிற்குப் பிறகு அவருடைய மனைவிக்கு சந்தானம் புதியதாக ஒரு வீடு கட்டி கொடுத்தாராம்.அதனால் அவருடன் நடித்த சக நடிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் சந்தானம் முதல் ஆளாக வந்து நிற்பார் என சுவாமிநாதன் கூறியிருக்கிறார். இதற்கு முன் நாம் கேள்விப்பட்ட வடிவேலு செய்திகளை எல்லாம் பார்க்கும் பொழுது அவரோட நடித்த சக நடிகர்கள் எத்தனையோ பேர் உடல் நலம் சரியில்லாமல் இறந்து போயிருக்கின்றனர்.

அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தக்கூட வடிவேலு வரவில்லை. ஆனால் சந்தானம் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து உதவியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் டிவி kpy பாலா தனது வருமானத்திற்கு மிஞ்சியே பிறருக்கு உதவி செய்து வருகிறார்.. இதை ரசிகர்கள் பெரிதும் வரவேற்று வந்த நிலையில் தற்போது சந்தானம் மறைமுகமாக செய்த உதவிகளை பார்த்து இவர் kpy பாலாவையே மிஞ்சிட்டாரே என ரசிகர்களால் பாராட்ட பட்டு வருகிறார்.