அடிச்சு விட்ட பயில்வான்…. திரும்ப வந்து அடித்து துவைத்த ரோபோ சங்கர்…

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் ரோபோ சங்கர். இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஜோடி நம்பர் உள்ளிட்ட விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ரோபோ சங்கர் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார்..

தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற என பல முன்னணி நடிகர்களோடு முக்கியமான கேரக்டரில் நடித்து வந்த ரோபோ சங்கர் சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. பலரும் அவரது மெளிர்ந்த உடலின் புகைப்படங்களை பகிர்ந்து ரோபோ சங்கருக்கு என்னவானது என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.

பொதுவாகவே ரோபோ சங்கர் ஜிம்க்கு சென்று உடல் கட்டுமஸ்தாக வைத்து கொள்கிறவர். திடீரென அவர் கடுமையாக உடல் இளைத்தது குறித்து பல்வேறு கருத்துகள் பரவி வந்தன. ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை என்றும், அவர் எழுந்து நிற்கவே முடியாமல் சிரமப்படுகிறார் என்றும் தகவல்கள் வெளியானது, ஆனார் அவரது மனைவி, அவர் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ஒரு படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்ததாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த பரபரப்புக்கு இடையில், நடிகர் பயில்வான் ரங்கநாதன், ரோபோ சங்கரின் உடல் நிலை இப்படி ஆனதற்கான ஷாக்கிங் தகவலை சில தினங்களுக்கு மும்பு வெளியிட்டு இருந்தார். அப்போது பயில்வான் கூறுகையில் சினிமா நடிகர்கள் பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற நடிகர்கள் உடல் எடையை குறைக்க எந்தவித ரசாயன பொருட்களைப் உட்கொள்ளாமல் தகுந்த உடற்பயிற்சி செய்து குறைத்தார்கள்.

அண்மையில் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்த நிலையில் இருக்கும் போட்டோ பார்த்து அதிர்ந்து போனேன். ரோபோ சங்கர் மிமிக்ரி கலைஞராக இருக்கும்போதிலிருந்தே எனக்கு தெரியும். அந்த சமயத்தில் அவர் நன்றாக ஒர்க் அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக பார்த்துக்கொண்டார். அவர் பிரபலமான பின்னர் சேரக்கூடாத நண்பர்களுடன் சேர்ந்து மதுவுக்கு அடிமையானார். மது குடிக்காமல் தூக்கமே வராது என்கிற நிலைக்கு அவர் மாறிவிட்டார்.

அவர் பப்ளிக்காக ஓட்டலில் மது அருந்தியதை பலரும் பார்த்திருக்கின்றனர். மதுப்பழக்கத்தால் அவருக்கு வந்த மஞ்சல் காமாலை தான் அவர் இந்த நிலைக்கு வந்ததற்கு முக்கிய காரணம். தற்போது அவர் நிற்கக்கூட முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார் என அவரை பார்த்தவர் சொன்னார்கள்” என பயில்வான் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இதனால் மது அருந்தியதால் தான் ரோபோ சங்கருக்கு நோய் ஏற்பட்டுள்ளது என்கிற பரபரப்பை பயில்வான் ஏற்படுத்தி இருந்தார். இந்த நிலையில் தற்பொழுது நான் வந்துட்டேன் சொல்லு, திரும்ப வந்துட்டேன் சொல்லு, என ரோபோ சங்கர் உடல்நலம் தேறி மீன்டும் வந்துள்ளார், அவருக்கு என்னாச்சு என ரோபோ சங்கர் கூறுகையில், நான் உடல் எடையை குறைப்பதற்காக டயட் இருந்தபோது எனக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக எனது உடல் எடை வெகுவாக குறைந்துவிட்டது. சரியான நேரத்தில் நான் நல்ல மருத்துவர்களிடம் சென்றதால் அவர்கள் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர். என்னுடைய மனைவியும் குழந்தைகளும் தான் என்னுடைய கடினமான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அதனால் தான் என்னால் விரைவில் மீண்டு வர முடிந்தது. ஆனால் என்னுடைய மனக் கஷ்டத்தை போக்கியது விஜய் டிவி ராமர் தான். அவரின் காமெடிகளை பார்த்து பார்த்து சிரித்து தான் நான் சீக்கிரம் குணமடைந்தேன் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஒருவர் உடல்நலம் குறையில்லாமல் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை பற்றி வாய்க்கு வந்ததை அடித்து விட்டு பரபரப்பை ஏற்படுத்திய பயில்வான் ரங்கநாதன் இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி கட்டு கதைகளை அவிழ்த்து விட்டு வண்டியை ஓட்ட போகிறார் என பயில்வானை சரமாரியாக வெளுத்து வாங்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.