சார் உங்க பிரச்ச்னைக்கு பணம் கொடுத்து உதவி இருக்கேன்… யுவனை ஒரே வார்த்தையில் வாயடைக்க செய்த ஆர்.கே.சுரேஷ்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக “தம்பிக்கோட்டை, சலீம், தர்மதுரை” முதலிய ஹிட் படங்களை தயாரித்த ஆர்.கே. சுரேஷ், விநியோகிஸ்தராகவும் பல வெற்றி திரைப்படங்களை வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளராக இருந்த ஆர்.கே.சுரேஷை தன்னுடைய தாரை தப்பட்டை திரைப்படத்தில் வில்லன் ரோலில் இயக்குநர் பாலா அறிமுகம் செய்துவைத்தார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த ஆர்.கே. சுரேஷ்.

தற்போது தானே இயக்கி நடிக்கும் “தென் மாவட்டம்” திரைப்படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், அது குறித்து இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜ – ஆர் கே சுரேஷ் இடையில் மிக பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. ஆருத்ரா மோசடி வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டு பரபரப்பாகத் தேடப்பட்டவர் நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ்.

ஆருத்ரா விவகாரத்தில் இருந்து வெளியே வந்துள்ள ஆர்.கே,சுரேஷ் தற்பொழுது அவர் நடித்துள்ள ‘காடுவெட்டி’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக வந்திருந்தார். அந்த நிகழ்வில் பேசிய ஆர்.கே.சுரேஷ். என்னைத் தொடர்புபடுத்தி நிறைய கட்டுக்கதைகள் வருகிறது. எல்லா அரசியல்வாதிகள் எல்லா சாதிக்காரர்களுடனும் எனக்கு பழக்கம் உண்டு என ஆருத்ரா விவகாரத்தில் தனக்கு எந்த வித தொடர்பும் இல்லை என விளக்கம் கொடுத்து பேசி இருந்தார் ஆர்.கே.சுரேஷ்.

இந்த நிகழ்வுக்கு பின்பு தனது எக்ஸ் பக்கத்தில், ‘தென் மாவட்டம்’ என அடுத்து ஒரு படத்தை இயக்கி, நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஆர்.கே.சுரேஷ், அந்த படத்தின் பர்ஸ்ட லுக் போஸ்டரை வெளியிட்டார். தென் மாவட்டம் திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கில் இசை என்ற இடத்தில் யுவன் சங்கர் ராஜா என்ற பெயர் இடம்பெற்ற நிலையில் பலரும் யுவன் சங்கர் ராஜாவை டேக் செய்து இது உண்மையா.? என கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

இதற்கு விளக்கம் கொடுத்த யுவன், இந்தப் படத்திற்குத் தான் இசையமைக்கவில்லை எனவும் அதற்காக யாரும் தன்னிடம் பேசவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இது இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் இதற்கு உடனடியாக பதிலளித்திருக்கும் ஆர்.கே. சுரேஷ், “யுவன் சார் நீங்கள் படத்திற்கும், லைவ் கான்சர்ட்டிற்கும் ஒப்பந்தமாகி இருக்கிங்க. ஒப்பந்தத்தை தெளிவாக சரிபார்க்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.

யுவன் பதிவால் ஆர்.கே.சுரேஷை விமர்சித்த ரசிகர்கள், தற்போது ஆர்.கே.சுரேஷ் பதிவால் குழப்படைந்துள்ளனர். இந்நிலையில் அடுத்தடுத்து யுவனுக்கு கிளியர் செய்யும் விதமாக பதிவுகளை பதிவிட்டுள்ள ஆர்.கே.சுரேஷ். அந்த பதிவுகளில், “மாமனிதன் படத்தின் வெளியீட்டின்போது ஏற்பட்ட பிரச்சனையில் உங்களுக்கு பணஉதவி செய்து அந்த சமயத்தில் உங்களுக்கு உற்ற நண்பனாக ஒரே நாளில் பிரச்சினை முடித்தோம். ஒப்பந்தத்தை சரியாக பாருங்கள் சகோதரரே. தென் மாவட்டத்தில் சந்திப்போம், நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

ஆர்.கே. சுரேஷின் இந்த ட்விட்டிற்கு யுவன் சங்கர் ராஜா திரும்ப பதிலளிக்கவும் இல்லை, தான் போட்ட அந்த ட்விட்டைடையும் நீக்கவும் இல்லை. இதனால் யார் சொல்வது உண்மை என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்நிலையில் ஆர்கே சுரேஷின் இயக்கம் எழுத்து மற்றும் நடிப்பில் உருவாக உள்ள தென் மாவட்டம் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பரா.? என்கிற குழப்பம் நீடித்து வருகிறது.