திருமணம் முடிந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை.. நடிகர் ரெடின் கிங்ஸிலியை ஒரு பொருட்டாகவே கருதாத மனைவி..

0
Follow on Google News

ரெடின் கிங்ஸ்லி தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக கலக்கி வருகிறார். நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படம் மூலம் பேமஸ் ஆன இவர், அடுத்தடுத்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தற்போது செம்ம பிசியான காமெடியனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் படத்தில் வந்தால் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது என்ற மைன்ட் செட்டுக்கு ரசிகர்கள் வந்துவிட்டதால், பல இயக்குநர்களின் முதல் சாய்சாக ரெடின் கிங்ஸ்லி தான் இருக்கிறார்.

மேலும் இவரின் கைவசம் தற்போது டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. அதோடு ரெடின் கிங்ஸ்லி ஒரு மிகப்பெரிய தொழிலதிபராகவும் இருக்கிறார். மேலும் பொருட்காட்சிகளை நடத்தும் மேனேஜராகவும் இருப்பதோடு, இவருக்கு கீழ் சுமார் 200க்கும் மேற்பட்டோரும் வேலை செய்கிறார்கள். இப்படி நடிப்பிலும் தொழிலிலும் மிகச் சிறந்து விளங்கிய இவர் தனது 46வது வயதில், சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார்.

தனது நீண்ட நாள் காதலியான சீரியல் நடிகை சங்கீதாவை மிகவும் எளிமையாக இருவீட்டார் முன்னிலையில் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் பல பிரபலங்கள் பங்கேற்றனர். இந்நிலையில்தான் திருமணம் ஆகி சில மாதங்களே ஆன நிலையில் மனைவி சங்கீதா, ரெடின் கிங்ஸ்லியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்றும், டார்ச்சர் செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை சங்கீதா 2009ஆம் ஆண்டு கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். 45 வயதாகும் நடிகை சங்கீதாவுக்கு ஷிவ்ஹியா என்ற மகளும் இருக்கிறாள் என பலரும் கூறி வந்தனர்.

ஆனால் இதனை மறுத்த சங்கீதா, எனக்கு மகள் இருப்பதாக செய்தி போடுகிறார்கள், உண்மையில் என்னுடன் இருக்கும் அந்த குழந்தை எனது சகோதரியின் மகள், ஆனாலும் எனது மகள் என்று செய்தி போட்டுக் கொண்டே இருக்கிறார்கள், நானும் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டேன் என்று கூறினார். இப்படி பல Controversy-ல் சிக்கி ரெடின் கிங்ஸிலியை திருமணம் செய்த சங்கீதா, அவரை ஒப்புக்கு சாப்பாவாகா தான் தன்னுடன் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்திற்கு முன்பே சங்கீதா, ரெடின் கிங்சிலியிடம், எனக்கு சமையல் தெரியாது, வீட்டு வேலைகள் பார்க்க தெரியாது, ஜாலியாக சேர்ந்து ஊர் சுத்துவேன், என் பிரண்ட்ஸோட வெளியில் போவேன் என்றெல்லாம் கண்டிஷன் போட்டு தான் திருமணம் செய்து இருக்கிறாராம். ஆனால் இதற்கெல்லாம் அப்போது ஓகே சொல்லி ரெடின் கிங்ஸிலியும் சங்கீதாவை திருமணம் செய்து இருக்கிறார்.

இருப்பினும் திருமணத்துக்குப் பிறகு, மிகவும் அதிகமாக வெளியே செல்ல ஆரம்பித்த சங்கீதா, ரெடின் கிங்ஸிலியை ஒரு தலையாட்டும் பொம்மை போல் தான் வைத்திருக்கிறாராம். சிலசமயம் சொல்லி விட்டு சங்கீதா வெளியே சென்றாலும், ரெடின் ஓகே சொல்லுவாராம், சிலசமயம் சொல்லாமலேயே வெளிய சென்றுவிடுவாராம்.

மேலும் அவர் சமைக்காமல் எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டே தான் இருப்பார் என்றும் எப்போது அவர் வீட்டுக்கு வருவார், எப்போது வெளியே போவார் என்று கூட ரெடின் கிங்சிலிக்கு தெரியாது என்றும், இதனால் மனைவி சங்கீதாவால், திருமண வாழ்க்கையில் ரெடின் கிங்ஸ்லி படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.