குடித்துவிட்டு கணவர் கொடுமை… அப்பா சொல்ல சொல்ல கேட்காத ராஜ்கிரண் மகள்..

0
Follow on Google News

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா காதல் கண்ணை மறைக்க தந்தை சொல்லை கேட்காமல் சின்ன திரையில் நடித்து வந்த முனீஸ் ராஜா என்பவரை 2022 ஆம் ஆண்டு பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்திற்கு ராஜ்கிரண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முனீஸ்ராஜா ஒரு மட்டமான புத்தி கொண்டவர் என்றும் பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமானவர் என்றும் அது மட்டும் இன்றி ஜீனத் பிரியா தனது உண்மையான மகள் இல்லை என்றும் அவர் தனது வளர்ப்பு மகள் என்றும் தன்னுடைய பேச்சை மீறி திருமணம் செய்து கொண்ட அவருக்கும் எனக்கும் இனி எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் தொடர்ந்து ராஜ்கிரண் மீது முனீஸ்ராஜா – ஜீனத் பிரியா இருவரும் அவதூறு பரப்புவதாக ராஜ்கிரண் மனைவி போலீஸ் புகார் அப்போது தெரிவித்து இருந்தார், இது குறித்து ஜனத்பிரியா அப்போது கூறுகையில், என்னை அவர்கள் வீட்டில் வேலைக்காரியாக தான் நடத்தினர். தற்போது நான் திருமணம் செய்து விட்டதால் அவர்களுக்கு கஷ்டமாக உள்ளது ஆகவே எனது மீது புகார் அளித்துள்ளனர். ராஜ்கிரண் நினைத்திருந்தால் இந்த புகார் வருவதை தவிர்த்திருக்கலாம் எங்களது நகைகளை எங்களுக்கு கொடுத்து விட்டு எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என பிரியா தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இப்போது பிரியா முனீஸ் ராஜாவை பிரிந்து விட்டதாக திடீர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், “ நான் 2022 ஆம் ஆண்டு நடிகர் முனீஸ்ராஜாவை திருமணம் செய்துகொண்டேன். அவை மீடியா மூலமாக உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த திருமணத்திற்கு பிறகு நாங்கள் பிரிந்துவிட்டோம். பிரிந்து சில மாதங்கள் ஆகின்றன.

எங்கள் திருமணம் சட்ட பூர்வமான திருமணம் கிடையாது. இந்த கல்யாணத்திற்கு பிறகு என்னை வளர்த்த அப்பாவை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டேன். அவரை நான் கஷ்டப்படுத்தி இருந்தாலும் எனக்கு ஒரு பிரச்சனை வந்தபோது அவர் என்னை கைவிடாமல் காப்பாற்றினார். இது நான் எதிர்பார்க்காதக் கருணை. எத்தனை முறை நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டாலும் போதாது. என்னை மன்னிச்சிடுங்க டாடி” என்று கூறியிருந்தார்.

இப்படியான நிலையில்தான் இப்போது முனீஸ் ராஜாவை பிரிந்த பிறகு பல விஷயங்களை பிரியா பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அதில், பேசிய அவர், “முனீஸ் ராஜாவை தான் பிரிந்ததற்கான காரணம் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை வீணாக போனதுதான். அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் முடிந்திருப்பதாக அவர் என்னிடம் சொல்கிறார். நான் அவருடைய அதிகாரப்பூர்வமான மனைவி கிடையாது என்றும் என்னிடம் சொல்கிறார். நான் என்னுடைய உறவினர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்து முனீஸ் ராஜாவுக்கு கொடுக்க வேண்டும் என்று அவர் நினைத்துதான் என்னை திருமணம் செய்து இருக்கிறார்.

ஆனால் நான் அப்படி செய்யவில்லை என்பதால் அவர் அடிக்கடி குடிச்சிட்டு வந்து என்னை அடிக்கிறார். குடிச்சிட்டு வந்தால் அவர் அவராகவே இருக்க மாட்டார். ரொம்பவே மாறி விடுவார். அதனால் நான் ஆரம்பத்தில் அவரை திருத்தி விடலாம் என்று முயற்சி எடுத்தேன். பிறகு அந்த முயற்சி எல்லாம் வீணாக போன பிறகு மன அழுத்தத்தில் நான் இருந்தேன். அந்த நேரத்தில் எனக்கு மருத்துவ ரீதியாகவும் பணரீதியாகவும் உதவி செய்தது என்னை வளர்த்த ராஜ்கிரண் அப்பா தான். அவர் மட்டும் இல்லை என்றால் என் நிலைமை எப்படியோ ஆகியிருக்கும்.

அதோடு முனீஸ் ராஜா நீ என்னை பிரிந்து சென்று விட்டாய் என்னை பற்றி எல்லோரும் கேவலமாக பேசுவார்கள், அதனால் உன்னை பற்றியும் உன்னுடைய அம்மாவை பற்றியும் நான் தவறாக பேசுவேன் என்று சொல்கிறார். அதுபோல எனக்கு உதவி செய்த நடிகர் என்டிஆர் மனைவியையும் கேவலப்படுத்துவேன், உன் குடும்பத்தாரை கொலை செய்வேன் என்று கூறுகிறார், ஆனால் என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று நான் வெளியே வந்து விட்டேன் என்று தன்னுடைய தந்தை ராஜ்கிரண் பேச்சை மீறி திருமணம் செய்து அதனால் பட்ட வேதனையை கன்னீருடம் தெரிவித்துள்ளார்.