ராஜ்கிரண் மருமகன் பிளே பாய்… அப்பா சொல்ல சொல்ல கேட்காமல் நம்பி மோசம் போன ராஜ்கிரண் மகள்…

0
Follow on Google News

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா, சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு முனீஸ் ராஜா, நான் படத்தில் தான் காமெடியன், நிஜத்தில் பக்கா வில்லன் என, ராஜ்கிரண் மகளை ஏமாற்றி திருமணம் செய்து அடித்து, பணம், நகை கேட்டு சித்திரவதை செய்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் ராஜ்கிரண் மகளை மட்டும் தான் ஏமாற்றினார் என்று பார்த்தால், அதுதான் இல்லை, இவர் Play Boy ஆக பல பெண்களை காதலித்தும், திருமணம் செய்தும் ஏமாற்றியிருக்கிறார். அதோடு முனீஸ் ராஜா அந்த பெண்களிடம் பேசிய ஆடியோக்களும் வெளியாகி, இவரின் காதல் லீலைகளும் அம்பலமாகியுள்ளது. இயக்குனரும், நடிகருமான ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா, கடந்த 2019 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவோடு facebook மூலமாக அறிமுகமாகியிருக்கிறார்.

அப்போது நட்பாக தொடங்கிய இவர்களுடைய பழக்கம், பிறகு காதலாக தொடங்கி, திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் முடிவு எடுத்தனர். அந்த நேரத்தில் முனீஸ் ராஜாவின் காதல் பற்றி, பிரியா, ராஜ்கிரண் மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் சொல்லும் போது, ராஜ்கிரணும் அவருடைய மனைவியும் இந்த திருமணம் வேண்டாம், நாங்கள் விசாரித்து பார்த்த வரைக்கும் முனீஸ் ராஜா பற்றி யாரும் நல்ல விதமாக சொல்லவில்லை என்று பிரியாவை தடுத்திருக்கின்றனர்.

ஆனாலும் பிரியா வீட்டின் எதிர்ப்பையும் மீறி முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். அப்போது ராஜ்கிரண், பிரியாவை, சீரியல் நடிகர் முனீஸ் ராஜா காதலித்து ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார். என்னுடைய சொத்துக்கள் மற்றும் எனக்கு இருக்கும் பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தான் திருமணம் செய்து இருக்கிறார். அதனால் எனக்கும் இனி பிரியாவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என அறிவித்திருந்தார்.

ஆனால் பிரியாவிற்கு திருமணம் முடிந்த ஒரு வருடத்திற்குள் முனீஸ் ராஜாவின் சுயரூபம் தெரியவந்துள்ளது. அப்போது அவர் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்துகிறார், அவருடைய அம்மா, தங்கை எல்லோரும் என்னை அடிக்கிறார்கள், நகை, பணம் கேட்டு மிரட்டுகிறார்கள் என சொல்லி முனீஸ்ஸை பிரிந்துவிட்டார். இந்த நிலையில் ராஜ்கிரண் மகளை மட்டும் முனீஸ் ஏமாற்றவில்லை, பல பெண்களை ஏமாற்றியிருக்கிறார் என்ற பல ஆடியோக்கள் வெளியாகியுள்ளது.

முதல் ஆடியோவில் முனீஸ் ராஜா ஒரு பெண்ணிடம், நீ யார வேணா கல்யாணம் பண்ணிக்க, ஆனால் நான் தான் உனக்கு எல்லாம் என்று பேசியிருக்கிறார். அடுத்து இரண்டாவது ஆடியோவில், நீ என்ன கம்யூனிட்டி சொல்லு, இது நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். அதனால இதுல மறைக்காமல் உண்மையை சொல்லு. நான் ஏற்கனவே ஒரு என்கேஜ்மென்ட் பண்ணி மன உளைச்சலில் இருக்கிறேன் என்று அந்த பெண்ணை மிரட்டியிருக்கிறார்.

அதை தொடர்ந்து மூன்றாவது ஆடியோவில், நான் உன்னிடம் எவ்வளவு பாசம் வச்சிருக்கேன்னு Explain பண்ணனுமா? நீ என்கிட்ட I love you-னு சொல்லு, கட்டிக்கிறேன்னு சொல்லு, என்று முனீஸ் ராஜா பேசியிருக்கிறார். இப்படி இவர் பல பெண்களிடம் பேசியதை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு Play Boy ஆக இருந்திருக்கிறார். இப்படி இவரிடம் ஏமாந்த பல பெண்களில் ஒருவராக தான் ராஜ்கிரண் மகளான பிரியாவும் இருக்கிறார்.

பிரியாவை இவர் வெறும் தாலி மட்டும் கட்டி கூட்டி சென்றிருக்கிறார். பிரியாவோ எத்தனை முறை பதிவு திருமணம் செய்ய வேண்டும் என சொல்லியும் கேட்காமலயே இருந்திருக்கிறார். ஏனெனில் அவர் ஏற்கனவே ஒரு பெண்ணை பதிவு திருமணம் செய்திருப்பதால், அந்த ரெக்கார்ட் இருக்கும், அந்த பெண்ணை விவாகரத்து செய்தால் தான் பிரியாவை திருமணம் செய்ய முடியும் என பதிவு திருமணம் செய்யாமலும் டிமிக்கி கொடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில் தான் தற்போது இவர் பல பெண்களை ஏமாற்றியிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனை பார்த்த பலரும், பார்க்க டம்மி பீஸா இருக்க, ஆனா பயங்கரமான ஆளா இருக்கியேடா என்றும் விமர்சித்து வருகின்றனர்.