ரஜினிக்கு அவ பெயரை ஏற்படுத்தும் பேரன்… பிள்ளையை கண்டிச்சு வளர்க்க வேண்டாமா. இதெல்லாம் இந்த வயசுக்கு தேவையா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக, 18 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து இருந்தவர்கள் தனுஷ்-ஐஸ்வர்யா இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கையில், கடந்த ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மேலும், இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலரும் பல முயற்சி செய்தும், எந்த ஒரு பலனும் இல்லை.

மேலும், ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்தாலும் முறையாக அவரை விவாகரத்து செய்ய வில்லை, அதோடு பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். தனுஷ் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார், ஐஸ்வர்யா அவருடைய தந்தையை வைத்து லால் ஸலாம் படத்தை இயக்குவதில் பிசியாக உள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க, தனுஷ் போயஸ் கார்டனிலேயே புதிதாக வீடு கட்டி குடியேறி இருக்கிறார். போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீட்டில் தான் தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவும் இருக்கிறார். போயஸ் கார்டனில் வீடு கட்டுவது தனுசுக்கு கனவாக இருந்தாலும் விவாகரத்திற்கு பிறகு தன்னுடைய மகன்களை சந்தித்து பேச வசதியாக இருப்பதற்காக தான் போயஸ் கார்டன் புதிய வீட்டிற்கு அடிக்கடி வருகிறார்.

அதே போல் நடிகர் தனுஷின் மகன்கள் தாய்-தந்தை இருவரும் இருக்கும் இரு வீட்டிலையும் நேரம் செலவிடுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேரன் மற்றும் தனுஷுன் மூத்த மகன் ஆன யாத்ரா பைக் ஓட்டும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த வீடியோ பதிவில் அவர் பைக் ஓட்ட அவருக்கு உதவியாளராக ஒருவர் சொல்லிக்கொடுக்கிறார்.

இதனை பார்த்த ஒருவர் போட்டோ வீடியோ எடுக்க, அந்த உதவியாளர் யாரும் போட்டோ வீடியோ எடுக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார். பொது சாலையில் தான் எடுக்கிறோம் என்று கூறி அவர் எடுத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு இன்னும் 18 வயதே ஆகவில்லை. அதற்குள் பைக் ஓட்ட பழகுவது தவறானது.

அதுவும் ஆர்15 பைக் ஓட்டுவது மிகவும் தவறு. அப்படி ரஜினிகாந்த் பேரன் ஓட்டி பழக வேண்டும் என்றால் பாதுகாப்பான இடத்தில் தான் ஓட்ட வேண்டும். ஆனால் லைசன்ஸ் இல்லாமல் பைக் ஓட்ட பழக்குவது குற்றம் என்று பதிவிட்டு வருகின்றனர். இதை தனுஷ் தனது மகனுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் ஒருசிலரோ மிகவும் மெதுவாக தெருக்களில் தான் அவர் ஓட்டி பழகுகிறார், கற்றுக்கொள்வது ஒரு தவறா என்றும் கமெண்ட் செய்கிறார்கள். மேலும் பைக் ஓட்டி பழகினால் என்ன தவறு என தனுஷ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வழக்கமாக டிடிஎப் வாசன் தான் பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்குவார். ஆனால் தற்போது தனுஷ் மகனும் அதுபோன்ற சர்ச்சையில் சிக்கி குட்டி டிடிஎப் ஆக மாறி இருக்கிறார் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். அதே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரை நாசம் செய்யவே இப்படி செய்கின்றனர் என்றும் பலர் திட்டி வருகின்றனர். இதை ரஜினி- தனுஷ் தான் சொல்லி தரணும் என்று கூறி இருக்கிறார்கள்.