தமிழர்கள் பிச்சை எடுக்கிறார்களா.? என்ன திமிர் பேச்சு… ரஜினி மக்களுக்கு எதிராக கொந்தளிக்கும் தமிழர்கள்.

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இன்று சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த், கர்நாடகாவில் கண்டக்டராக இருந்தவரை இன்று உச்ச நடச்சத்திரமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம் தமிழக மக்கள் தான், அதற்காக தான் உப்பிட்ட தமிழ் மண்னை நான் மறக்க மாட்டேன், என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா என்று ரஜினி, அவருடைய பாடல்களில் இடம் பெற செய்து வந்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு மேடைகளிலும் என்னை வாழ வைத்த தமிழக மக்களே என்று தான் தன்னுடைய உரையை தொடங்குவர், அந்த வகையில் கர்நாடகாவில் இருந்து வந்திருந்தாலும் தமிழக மக்களுக்கு விசுவாசமாக தான் ரஜினியின் செயல்பாடுகள் இருந்து வந்துள்ளது, ஆனால் அவரை பல பிரச்சனைகளில் சிக்க வைப்பது அவருடைய குடும்பத்தினர் தான், தற்பொழுது ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மிக பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படத்தில் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ரஜினி மகள் ஐஸ்வர்யா, ’அப்பாவை சங்கின்னு சொல்லும்போது கோபம் வரும். இப்போது சொல்கிறேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது. சங்கியாக இருந்திருந்தால் அவர் லால் சலாம் படத்தில் நடித்திருக்கமாட்டார். அவர் மனிதநேயவாதி.

ஒரு சங்கி இந்தப் படத்தைப் பண்ண முடியாது. ஒரு மனிதநேயவாதிதான் இந்தப் படத்தை பண்ண முடியும். அந்த தைரியம் அவருக்குமட்டும் தான் இருக்கு.  என ரஜினிகாந்த் மகள் பேசிய பேச்சு, அப்படியானால் சங்கி என்பவர்களுக்கு மனித நேயம் இல்லையா என்கிற சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் மற்றோடு பெரும் பிரச்சனை வெடித்துள்ளது. லால் சலாம் படத்தில் ஹீரோயினாக நடிகை தன்யா பாலகிருஷ்ணா நடித்துள்ளார்.

இவர், ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, ராஜா ராணி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர், பெங்களூருவை சேர்ந்த தான்யா பாலகிருஷ்ணா. சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் CSK vs RCB  அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது நடிகை தன்யா பாலகிருஷ்ணா தெரிவித்த ஒரு கருத்து ஒட்டு மொத்த தமிழக மக்களையும் கொந்தளிக்க வைத்தது.

அதாவது தமிழர்களை இழிவு படுத்தும் விதத்தில், “தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்கிரமித்து அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால் தருகிறோம்.” என தண்ணீருக்காக கர்நாடகாவில் தமிழர்கள் பிச்சை எடுக்கிறீர்கள், பெங்களூரை தமிழர்கள் ஆக்கிரமித்து அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள் என்பது போன்ற ஒரு கருத்தை தெரிவித்த தன்யாவுக்கு எதிராக தமிழர்கள் கடும் எதிர்ப்பு அப்போது தான்யா தெரிவித்து இருந்தார்கள்.

தமிழர்களின் எதிர்ப்பின் காரணமாக இனி நான் தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன். நான் நடிப்பதாக சொன்ன தமிழ் படங்களில் இருந்தும் வாபஸ் பெறுகிறேன். நான் இனி தமிழ் சினிமாவுக்கு வரவே மாட்டேன்” என தெரிவித்து இருந்த நிலையில், தமிழர்களை இழிவு படுத்தியை தான்யாவை ரஜினி மகள் லால் சலாம் படத்தில் நடிக்க வைத்துள்ளது, தமிழர்களை பிச்சை எடுக்கிறீர்கள் என்று சொன்ன கர்நாடகாவை சேர்ந்த நடிகை தான்ய நடித்த லால் சலாம் படத்தை சோற்றில் ஒப்பு போட்டு சாப்பிடும் தன்மான உள்ள தமிழன் எவனாவது ஒருவன் பார்ப்பானா.? ஒவ்வொரு தமிழனும் படம் கற்பிக்க வேண்டிய தருணம் இது, என தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளப்பி வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.