மாமனாரும் தேவையில்லை… மாமியாரும் தேவையில்லை… கெத்து காட்டும் தனுஷ்..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தனுஷ் தம்பதியினர் கடந்த ஜனவரி 17ஆம் தேதி நள்ளிரவு தங்களுடைய 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு இருவரும் பிரிவதாக தனித்தனியாக அறிவிப்பை வெளியிட்டு மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு, குழந்தைகள் நலன் கருதி இருவரையும் மீண்டும் இணைத்து வைப்பதற்காக இரு குடும்பத்தினரும் நடத்தி வந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது.

இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் மூத்த மகன் யாத்ரா உடன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படம் வெளியானதை தொடர்ந்து, இருவருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டு இருவரும் இணைந்து விட்டதாக கூறப்பட்டது, விரைவில் இந்த ஜோடி அதிகாரபூர்வமாக தங்கள் இணைந்து விட்டோம் என்று அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் பிரிவதர்க்கு முன்பு சென்னை போயஸ் கார்டனில் மிகப் பிரம்மாண்டமாக சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டுவதற்கு திட்டமிட்ட தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர், இந்த வீடு கட்டுவதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது, இந்த பூமி பூஜையில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர், சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்த வீட்டின் கட்டுமான பணிகள் நடை பெற்று வந்தது.

இந்த நிலையில் போயஸ் கார்டனில் கட்டப்படும் வீட்டின் கிரகபிரவேசம் அன்று தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாக இணைந்து புதிய வீட்டில் குடியேறுவர்கள் என பலரும் எதிர்பார்க்க பட்ட நிலையில், கிரக பிரவேசம் அன்று தனுஷ் அவருடைய தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அவருடைய தாய் மட்டுமே கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த நிகழ்வில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா, மாமனார் ரஜினிகாந்த், மாமியார் லதா ரஜினிகாந்த் யாரும் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா – தனுஷ் இருவருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டு மீண்டும் இணைந்த அடுத்த ஒரு சில நாட்களிலே இருவருக்கும் இடையில் மீண்டும் பிரச்சனை ஏற்படும் பிரிந்துள்ளார்கள், கடந்த ஜனவரி மாதம் புதிய வீடு கிரகப்பிரவேசம் நடந்த திட்டமிட்டு, மாமனார் ரஜினிகாந்த், மாமியார் லதா ரஜினிகாந்த், மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் வருகைக்காக தகவலும் அனுப்பியுள்ளார் தனுஷ்.

ஆனால் மாமனார் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை, இதனால் கடந்த ஜனவரி மதம் கிரகப்பிரவேசம் நடந்த திட்டமிட்டிருந்த தனுஷ் குறிப்பிட்ட அதே தேதியில் நடத்தவில்லை, இருந்தாலும், மாமனார் மற்றும் மாமியார் தரப்பில் இருந்து ஏதாவது புதிய வீடு கிரகபிரவேசத்துக்கு வருவது குறித்து தகவல் வருகிறதா என காத்திருந்த தனுஷ்க்கு எந்த ஒரு தகவலும் வரவில்லை என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பொறுமை இழந்த தனுஷ், மாமனாரும் தேவையில்லை, மாமியாரும் தேவையில்லை என்கிற முடிவுக்கு வந்த பின்பு அதிரடியாக தன்னுடைய தாய் மற்றும் தந்தையுடன் போயஸ் கார்டனில் கட்டியுள்ள புதிய வீட்டின் கிரகப்பிரவேசம் செய்து முடித்துள்ளார் என்கிறது சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.