தமிழ் நடிகர்களுக்கு தண்ணி காட்டிய ரஜினிக்கு… தெலுங்கில் இருந்து வந்த மிக பெரிய ஆப்பு..

0
Follow on Google News

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்பொழுது விஜய் நடிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருந்த பொழுது, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜை நேரில் அழைத்து, நாம் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் அதற்கான கதையை தயார் செய்யுங்கள் என கேட்டுள்ளார். பொதுவாகவே நடிகர் ரஜினிகாந்த் அந்தந்த காலகட்டத்தில் எந்த இயக்குனர் முன்னணியில் இருக்கிறார்களோ.! அவர்களை நேரில் அழைத்து தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுக்கக் கூடியவர்.

அதாவது ரஜினிகாந்த் அந்தந்த காலகட்டத்தில் எந்த குதிரை ஓடுகிறதோ அந்த குதிரை மீது அமர்ந்து கொண்டு எளிதாக சவாரி செய்யக் கூடியவர் ரஜினிகாந்த். இந்நிலையில் விக்ரம் என்கின்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்து இன்றைய காலகட்டத்தில் மிக விரைவாக ஓடிக் கொண்டிருக்கின்ற குதிரையான லோகேஷ் கனகராஜ் மீது சவாரி செய்யும் ரஜினியின் திட்டம் தான் இது.

அதன்படி லோகேஷ் கனகராஜ் உடன் இனைந்து படம் பண்ணுவது குறித்து ரஜினிகாந்த் பேசிய போது, தான் அடுத்து கார்த்திக் நடிப்பில் கைதி 2 படம் இயக்க இருப்பது பற்றியும், தனக்காக கார்த்திக் எதிர்பார்த்து இருப்பது பற்றியும் தெரிவித்துள்ளார் லோகேஷ், ஆனால் அதற்கு நீங்க கார்த்திக்கிடம் என்னுடைய படத்தை இயக்கிவிட்டு வருகிறேன் என சொல்லுங்க அவர் ஒன்றும் சொல்ல மாட்டார் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

அதே போன்று இந்த தகவல் அறிந்த கார்த்திக், ரஜினி சார் விரும்பத்திற்கு எதிராக செய்தால் அது தர்மசங்கடமாகிவிடும் என ரஜினி சார் படத்தை முடித்துவிட்டு வாங்க என லோகேஷ் கனகராஜிடம் கார்த்திக் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது போன்று நடந்து கொள்வது ரஜினிக்கு இது முதல் முறையல்ல, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா படம் அண்ணாத்தே படம் தொடங்குவதற்கு முன்பு படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடைபெற்றது.

அந்த காலகட்டத்தில் சிறுத்தை சிவாவை அழைத்து கதை கேட்டு அண்ணாத்தே படத்தை உடனே தொடங்குவோம் என ரஜினி தெரிவிக்க, சூர்யா சார் எனக்காக கங்குவா படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் என சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார், உடனே சூர்யாவை தொடர்பு கொண்டு கன்வின்ஸ் செய்து அந்த காலகட்டத்தில் ஓடுகிற குதிரையாக இருந்த சிறுத்தை சூர்யா மீது சவாரி செய்தார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் மற்றும் லால் சலாம் படத்தை முடித்துவிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ரஜினிகாந்த் திட்டமிட்டு இருந்த நிலையில், அந்த படத்திற்கு புதிய சிக்கல் தற்போது ஏற்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கி கொண்டிருந்த போது, தெலுங்கு சினிமாவில் முக்கியமான ஒரு தயாரிப்பாளரிடம் சுமார் ஐந்து கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகை பெற்று நடிகர் பிரபாஸை வைத்து ஒரு படம் இயக்குவதற்காக கமிட் ஆகி இருந்துள்ளார்.

அந்த வகையில் அட்வான்ஸ் வாங்கி பல நாட்கள் கடந்து விட்டது, தற்பொழுது லியோ படத்தை முடித்துவிட்டு எங்கள் படத்தை இயக்க வேண்டும் என கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார் தெலுங்கு சினிமா துறையைச் சார்ந்த தயாரிப்பாளர், ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகி உள்ளதாகவும் அந்த படத்தை முடித்துவிட்டு வருகிறேன் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்ததற்கு அதற்கெல்லாம் அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஏற்கனவே கமிட்டாகி இருந்த பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்கி விட்டு தான் அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு வரும் சூழல் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இதற்கு முன்பு தமிழ் நடிகர்களை கன்வின்ஸ் செய்து அவர்கள் படத்தை இயக்க இருந்த இயக்குனர்களை தன் இயக்க வைத்த ரஜினிகாந்துக்கு தற்பொழுது தெலுங்கு சினிமா மூலம் மிகப்பெரிய இடியாய் விழுந்துள்ளது இந்த செய்தி.