நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது? ரஜினியின் எதிர்ப்பையும் மீறி அந்த செயலில் இறங்கிய தனுஷ்..

0
Follow on Google News

நடிகர் தனுஷ் அவருடைய மாமனார் ரஜினிகாந்த் குடியிருக்கும் போயஸ் கார்டன் வீட்டின் அருகிலேயே சுமார் 150 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாக மாமனார் ரஜினிகாந்த் வீட்டை விட பல மடங்கு பெரியதாக கட்டி முடித்து சமீபத்தில் தன்னுடைய தாய் தந்தைகள் உடன் புதிய வீட்டின் கிரக பிரவேச நிகழ்வை முடித்துள்ளார் நடிகர் தனுஷ்.

போயஸ் கார்டனில் ஒரு ஸ்கொயர் பீட் நிலம் பல லட்சம் மதிப்பு. அப்படி விலை உயர்ந்த போயஸ் கார்டனில் நீண்ட நாட்களாக இருந்த காலி கிரவுண்டை தனுஷ் விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால் தனுஷ் அந்த இடத்தை விலைக்கு வாங்குவதற்கு முன்பு அந்த இடத்தில் ஏதேனும் வில்லங்கம் இருக்கின்றதா என்று சோதனை செய்த பின்பு தான் அந்த இடத்தை வாங்கி உள்ளார்.

ஆனால் அதே ஏரியாவில் ரஜினிகாந்த் குடியிருப்பதால், மருமகன் வாங்க இருக்கும் அந்த இடம் குறித்து விசாரித்ததில் அந்த இடம் வாஸ்து சாஸ்திரப்படி சரியில்லாத இடம் என ரஜினிகாந்துக்கு தகவல் வந்துள்ளது. பொதுவாக ரஜினிகாந்த் ஆன்மீகம் மற்றும் ஜாதகத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். தனுஷ் அந்த இடத்தை வாங்குவதற்கு முன்பே இந்த இடம் வாஸ்து சாஸ்து படிசரி இல்லை, அதனால் இதை வாங்க வேண்டாம் என எச்சரித்த ரஜினி.

இதையும் மீறி இந்த இடத்தை வாங்கினால் வாஸ்து சாஸ்து படி, அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார், ஆனால் வாஸ்து சாஸ்து பார்த்து வீடு கட்டலாம், இடத்தில் என்ன வாஸ்து சாஸ்து இருக்கிறது என ரஜினிகாந்த் விருப்பத்துக்கு எதிராக தனுஷ் பிடிவாதமாக அந்த இடத்தை வாங்கி, புதிய வீட்டின் பூமி பூஜையை நடத்தியுள்ளார்.விருப்பம் இல்லாமலே பூமி பூஜையில் கலந்து கொண்டுள்ளார் ரஜினி.

தனுஷ் புதிய வீடு கட்ட தொடங்கிய குறுகிய காலத்தில், அவருடைய மனைவி மற்றும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட உச்சகட்ட பிரச்சனை காரணமாக 18 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொண்டு இருவரும் பிரிந்தனர். தனுஷ் – ஐஸ்வர்யா பிரச்சனைக்கு காரணம் புதியதாக கட்ட பட்டு வரும் வீட்டின் இடம் தான், ஏற்கனவே அந்த இடம் வாஸ்து சாஸ்துப்படி சரியில்லை என எச்சரித்தேன், ஆனால் தனுஷ் கேட்கவில்லை என தனுஷ் மீது ரஜினிக்கு மேலும் கோபம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கடுமையான போராட்டத்திற்கு பின்பு, தான் நினைத்ததை சாதித்தது போன்று புதிய வீட்டை கட்டி முடித்த தனுஷ், மனைவி , மாமனார் குடும்பத்தினரும் புதிய வீட்டின் கிரக பிரவேசத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து உள்ளார், ஆனால் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து கிராக ப்ரவேசத்தில் கலந்து கொள்வது குறித்து முறையான எந்த ஒரு தழுவலும் தனுசுக்கு தெரியப்படுத்தவில்லை.

இதற்கு காரணம், தான் வாஸ்து சாஸ்து சரியில்லை என்று தெரிவித்தும், அதே இடத்தை வாங்கி தனுஷ் வீடு கட்டிய சில நாட்களில் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை, அப்படி இருக்கையில் அந்த வீட்டில் குடியிருந்தால் இன்னும் என்னென்ன பிரச்னையை சந்திக்க நேரிடும் என்பது போக போக தான் தெரியும், என தன்னுடைய குடும்பத்தினரிடம் புலம்பிய ரஜினிகாந்த், தனுஷ் மீது உள்ள கோபத்தை விட அவர் கட்டிய வீட்டின் மீது தான் அதிக கோபத்தில் ரஜினி இருப்பதால் புதிய வீட்டின் கிரக பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.