இரண்டு மகள்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா… ரஜினிக்கு தான் பெரும் தலைவலி..

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா கடந்த சில மாதங்களுக்கு அவருடைய வீட்டில் இருந்த நகை திருடு போய் விட்டதாக போலீஸ் புகார் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து நடந்த விசாரணையில். ஐஸ்வர்யா வீட்டில் நீண்ட வருடமாக வேலை செய்து வந்த ஈஸ்வரி, அங்கே சிறுக சிறுக திருடி வந்துள்ளார். 100 பவுனுக்கு மேல் தங்க நகைகளும், 30 கிராம் வைரமும், 4 கிலோ வெள்ளி பொருட்களும் மற்றும் திருடிய நகைகளை ஈஸ்வரி விற்றது தெரியவந்தது.

அதில் கிடைத்த பணத்தில் சோழிங்கநல்லூரில் ஈஸ்வரி நிலம் வாங்கி கட்டிய 2 மாடி வீட்டின் பத்திரங்களையும் போலீசார் மீட்டனர். மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தன்னை திருட தூண்டியதே ஐஸ்வர்யா தான் என்கிற பகீர் தகவலை தெரிவித்தார் வேலைக்கார பெண் ஈஸ்வரி. விசாரணையின் போது ஐஸ்வர்யா வீட்டில் மாடு மாதிரி உழைத்த எனக்கு, உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை ஐஸ்வர்யா தரவில்லை.

அதனால் தான் சின்ன சின்ன திருட்டுகளை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார் ஈஸ்வரி.அந்த திருட்டுகளை ஐஸ்வர்யா கண்டுபிடிக்காததால், பின்னர் நகைகளை திருட தொடங்கியதாகவும், அதை வைத்து தான் வீடு வாங்கியதாக தெரிவித்த ஈஸ்வரி. மேலும் இன்னும் கொஞ்ச நாள் விட்டிருந்தால் நிறைய திருடி இருப்பேன் எனவும் கூறி இருக்கிறார்.

நிறைய சம்பளம் கொடுத்திருந்தால் நான் ஏன் திருட போகிறேன். இது தான் தன்னை திருட தூண்டியதாகவும் போலீஸ் விசாரணையில் ஈஸ்வரி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். இப்படி தன்னுடைய வீட்டில் பல காலமாக நகைகள் சிறுக சிறுக திருடி, வேலை கார பெண் நிலம் வாங்கி வீடு கட்டும் வரை எதுவுமே தெரியாயமால் அலட்சியமாக ஐஸ்வர்யா இருந்துள்ளார் என்றால் அவருடைய வீட்டில் எந்தளவுக்கு பொறுப்புடன் உள்ளார் என்கிற விமர்சனம் எழுந்தது.

ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ஒரு பக்கம் நகை திருடு போய் விட்டது என கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், சமீபத்தில் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது சொகுசு காரின் சாவி தொலைந்து விட்டதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் ஏப்ரல் 23ஆம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது தனது காரின் மற்றொரு சாவி காணாமல் போனதாக புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சௌந்தர்யா கார் சாவியை காணவில்லை என சௌந்தர்யா புகார் தெரிவித்துள்ளது, பொறுப்பு இல்லாமல் பொருட்களை தொலைத்துவிட்டு இன்னும் என்னன்னா பொருட்களை காணவில்லை என ரஜினி மகள்கள் புகார் தெரிவிக்க போகிறார்கள் என பலரும் கலாய்த்து வரும் நிலையில்.

கடந்த மாதம் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை காணவில்லை என புகார் கொடுக்கப்பட்டு, வேலைக்கார பெண் சிறுக சிறுக திருடியது கூட தெரியாமல் ரஜினிகாந்த் மகள் அப்படி என்ன வீட்டில் பொறுப்பாக இருக்கிறார் என ரஜினிகாந்த் பெயரும் விமர்சனத்துக்கு உள்ளானது, இப்போது இரண்டாவது மகள் கார் சாவியை தொலைத்துவிட்டு போலீஸ் புகார் தெரிவித்துள்ளது, ரஜினி மகள்களுக்கு வேறு வேலை இல்லையப்பா என மீண்டும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார் ரஜினி.

இப்படி தொடர்ந்து மகள்களால் மாற்றி மாற்றி விமர்சனத்திற்கு உள்ளாகி ரஜினிகாந்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளாமல் இனியாவது ரஜினியின் இரண்டு மகள்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என பலரும் அறிவுரை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.