கண்ணீர் விட்டு கதறி அழுத ரஜினிகாந்த்…. சிவகார்த்திகேயன் பதிலுக்கு என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை : தமிழ்திரைப்படம் எது வெளிவந்தாலும் அதைப்பார்த்துவிட்டு உடனடியாக டைரக்டர் அல்லது நடிகருக்கு போன்செய்து பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரே நடித்து வெளிவந்த திரைப்படம் டான்.

இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் எஸ்.ஜெ சூர்யா போன்ற பிரபல நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் பரோட்டா சூரி கதாநாயகனின் நண்பராக வலம்வருகிறார். ஆனாலும் கதாநாயகன் போல தோன்றும் அவரது தோற்றம் படத்தில் ஒட்ட மறுக்கிறது.

நீண்டநாட்களாக தனது உடம்பை கதாநாயகன் போல மெழுகேற்றிவரும் பரோட்டா சூரி இரண்டு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் இந்த டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக சிவகார்த்திகேயன் மற்றும் எஸ்.ஜெ.சூர்யா மோதிக்கொள்ளும் காட்சிகள் கலகலப்பாக வந்துள்ளது.

வசூல்ரீதியில் ஓரளவுக்கு லாபம் ஈட்டியுள்ள இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் டான் திரைப்பட குழுவினருக்கு இன்ப ஷாக் கொடுத்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். டான் திரைப்படத்தை கண்டுமகிழ்ந்த சூப்பர்ஸ்டார் குழுவினரை போனில் அழைத்து மனமார பாராட்டியுள்ளார்.இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அவர் சிவகார்த்திகேயனிடம் போனில் ” படம் செம்ம சூப்பர் பா. ரொம்ப அருமை. அதுவும் அந்த கடைசி முப்பது நிமிஷம் என்னால அழுகையை கண்ட்ரோல் பண்ண முடியல” என கூறியிருக்கிறார். ரஜினியே கூப்பிட்டு பாராட்டிவிட்டார். இதைவிட பெரிய விருது என்ன இருக்கிறது என தனக்கு தெரிந்தவர்களிடம் சந்தோசமாக கூறிவருகிறார் சிவகார்த்திகேயன்.

நள்ளிரவில் நடிகையின் டார்ச்சர் தாங்க முடியமால் அஜித் எடுத்த அதிரடி முடிவு..! என்ன செய்தார் அஜித் தெரியுமா.?